என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திண்டுக்கல் அருகே ஓய்வுபெற்ற அதிகாரி வீட்டில் நகை, பணம் திருட்டு
- ஓய்வுபெற்ற அதிகாரி வீட்டில் ரூ.50ஆயிரம ரொக்கம் மற்றும் 4 பவுன் நகை கொள்ளைபோனது.
- மோப்பநாய் வரவழைக்கப்பட்டும், கைரேகை நிபுணர்கள் வந்தும் முக்கிய தடயங்களை சேகரித்தனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகில் உள்ள சிலுவத்தூர் பனைமரத்துப் பிரிவு பகுதியை சேர்ந்தவர் ஜேம்ஸ் (வயது 72). இவர் பொதுப்பணித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பாத்திமாமேரி. இவர்களுக்கு 2 மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.
அவர்களுக்கு திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். ேஜம்ஸ்க்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று இரவு வீட்டிற்கு வந்தபோது கதவு திறந்து கிடந்தது. உள்ளேசென்று பார்த்த போது 4 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கப்பணம் திருடு போயிருந்தது.
இதுகுறித்து சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜான்சன் ஜெயக்குமார் மற்றும் பரமசிவம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டும், கைரேகை நிபுணர்கள் வந்தும் முக்கிய தடயங்களை சேகரித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்