search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை ஆர்.டி.ஓ. ஆய்வு
    X

    ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை ஆர்.டி.ஓ. ஆய்வு

    • திருச்செங்கோட்டில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
    • தேர்வு செய்யப்பட்ட சூரியம்பாளையம் பகுதியில் உள்ள 30 ஏக்கர் நிலத்தை திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. கவுசல்யா ஆய்வு செய்தார்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோட்டில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இதற்காக தேர்வு செய்யப்பட்ட சூரியம்பாளையம் பகுதியில் உள்ள 30 ஏக்கர் நிலத்தை திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. கவுசல்யா ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் காளைகளுக்கு டோக்கன் கொடுக்கும் இடம், மருத்துவ பரிசோதனை செய்யும் இடம் சுற்றி உள்ள பகுதிகளில் 3 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு திறந்த வெளி கிணறுகள் நீர்நிலைகள் எதுவும் இருக்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விழா நடத்தும் திருச்செங்கோடு ஜல்லிக்கட்டு பேரவை யினரிடம் கேட்டறிந்தார்.

    ஆய்வின்போது திருச்செங்கோடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் மற்றும் நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதுரா செந்தில், ஜல்லிக்கட்டு பேரவை நிர்வாகிகள் சுரேஷ்பாபு , முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் ராஜேந்திரன், நகர மன்ற உறுப்பினர்கள் ரவிக்குமார், ரமேஷ் மற்றும் மைக்கா ரமேஷ், வெங்கடேசன், கால்நடைத்துறை உதவி இயக்குனர் டாக்டர் அருண் பாலாஜி, திருச்செங்கோடு வட்டாட்சியர் அப்பன் ராஜ், நகர வருவாய் அலுவலர் மல்லிகா, கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×