என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஒருங்கிணைந்த தூய்மை பணி விழிப்புணர்வு ஊர்வலம்
- ஊர்வலத்தின் போது உணவு வீண் செய்ய கூடாது பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது
- மக்காத குப்பையாக தரம் பிரித்து பேரூராட்சி தூய்மை காவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும்
பென்னாகரம்,
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேரூராட்சி யில் நகர தூய்மை இயக்க த்தின் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் பேரூராட்சி செயல் அலுவலர் கீதா தலைமையில் நடைபெற்றது.
இதில் நகரத்தை தூய்மையாக வைத்து கொள்ளவும், சுகாதாரத்தை பேணி காக்கவும், நகர தூய்மை இயக்கத்தின் சார்பில் குப்பையும் செல்வமாகும், ஜீரோ வேஸ்ட் உணவு திருவிழா மற்றும் விழிப்புணர்வு,
கண்காட்சி ஒருங்கி ணைந்த தூய்மை பணி, விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
இதனை தொடர்ந்து அனைவரும் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து கிருஷ்ணாபுரம் அரசு நடுநிலைப்பள்ளி பள்ளி மற்றும் பென்னாகரம் அரசு கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவ, மாணவிகள், பேரூராட்சி ஊழியர்கள், தூய்மை காவலர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலம் பேரூராட்சி அலுவலகத்தில் தொடங்கி, வட்டாட்சியர் அலுவலகம், கடைவீதி வழியாக பழைய பேருந்து நிலையம் வரை வந்தனர்.
ஊர்வலத்தின் போது உணவு வீண் செய்ய கூடாது பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது, மீண்டும் மஞ்சள் பை, குப்பைகளை மக்கும், மக்காத குப்பையாக தரம் பிரித்து பேரூராட்சி தூய்மை காவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி சென்றனர்.
மேலும் பேரூராட்சியில் உள்ள குப்பை மற்றும் குறைகளை தெரிவிக்க ஸ்வச்சதா செயலி மூலம் தெரிவிக்க கேட்டுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவர் வள்ளியம்மாள், பேரூராட்சி கவுன்சிலர்கள், துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசன், பேரூராட்சி ஊழியர்கள், தூய்மை காவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்