என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 37.77 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
- அதிகபட்சமாக 19 லட்சத்து42 ஆயிரத்து 471 ஆண்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.
- ஜூலை,10-ந்தேதி மெகா தடுப்பூசி முகாம் நடத்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 37.77 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று முதல் தவணை தடுப்பூசியை 21 லட்சத்து 24 ஆயிரத்து 183 பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசியை16 லட்சத்து, 83 ஆயிரத்து 70 பேர் செலுத்தியுள்ளனர். 19 ஆயிரத்து856 பேர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.
அதிகபட்சமாக 19 லட்சத்து42 ஆயிரத்து 471 ஆண்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். பெண்கள் 18 லட்சத்து 14 ஆயிரத்து 117 பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். அதிகபட்சமாக 18 வயதை கடந்த, 21 லட்சத்து 99 ஆயிரத்து 080 பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.
பொதுமக்கள் பயன்பெற வசதியாக மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தலைமை அரசு மருத்துவமனை, தாலுகா அளவிலான மருத்துவமனை, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் 'கோவேக்சின்', 'கோவிஷீல்டு' முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி தொடர்ந்து செலுத்தப்பட்டு வருகிறது.இந்த இடங்களில் இதுவரை தடுப்பூசியே செலுத்தாதவர் செலுத்தி கொள்ள முடியும். ஜூலை, 10-ந்தேதி அடுத்த மாதத்துக்கான மெகா தடுப்பூசி முகாம் நடத்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்