என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மொரப்பூரில் பால் வேன் மோதி பீகார் வாலிபர் சாவு
- பால் பாரம் ஏற்றி வந்த மினி வேன் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- சிகிச்சை பலனின்றி விஜயமுகார் இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.
தருமபுரி,
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் விஜயமுகார் (வயது20). சுராஜ் (21) ஆகிய இருவரும் தருமபுரி மாவட்டம், மொரப்பூர் அண்ணாநகர் பகுதியில் ஹாலோ பிளாக் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் அண்ணாநகர் பஸ்நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக பால் பாரம் ஏற்றி வந்த மினி வேன் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அவர்கள் இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஜயமுகார் இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து மொரப்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்