என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தருமபுரியில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,528 வழக்குகளுக்கு சமரச தீர்வு
- சமரச தீர்வு அதில் 1,417 வழக்குகள் சமரசம் பேசி தீர்க்கப்பட்டன.
- மொத்தம் 1,528 வழக்குகள் சமரசம் பேசி தீர்க்கப்பட்டு சமரச தொகை ரூ.12 கோடியே 99 லட்சத்து 6 ஆயிரத்து 282-க்கு பேசி முடிக்கப்பட்டது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
இது தொடர்பாக முதன்மை மாவட்ட நீதிபதியும் (பொறுப்பு) மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தின் தலைவருமான முனுசாமி, தருமபுரி முதன்மை மாவட்ட நீதிபதி திலகம் ஒப்புதலுடன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
தருமபுரி மாவட்ட நீதிமன்றங்களில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்க வேண்டும் உத்தரவிடப்பட்டது.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரூர், பாலக்கோடு, பென்னாகரம் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய 4 தாலுகா நீதிமன்ற வளாகங்களிலும் இந்த மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
இந்த மக்கள் நீதிமன்றத்தில், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள 1,657 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. சமரச தீர்வு அதில் 1,417 வழக்குகள் சமரசம் பேசி தீர்க்கப்பட்டன.
அதற்கான சமரச தொகை ரூ.10 கோடியே 18 லட்சத்து 81 ஆயிரத்து 150-க்கு சமரசம் பேசி முடிக்கப்பட்டது. மேலும் 310 வங்கி வாராக்கடன் வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன.
அதில் 111 வழக்குகள் சமரசம் பேசி தீர்க்கப்பட்டன. அதற்கான சமரச தொகை ரூ.2 கோடியே 80 லட்சத்து 25 ஆயிரத்து 132-க்கு சமரசம் பேசி முடிக்கப்பட்டது.
மொத்தம் 1,528 வழக்குகள் சமரசம் பேசி தீர்க்கப்பட்டு சமரச தொகை ரூ.12 கோடியே 99 லட்சத்து 6 ஆயிரத்து 282-க்கு பேசி முடிக்கப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்