என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் விடுமுறை வழங்காத 101 நிறுவனங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை
- நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் ஒரு நாள் விடுமுறை வழங்க வேண்டும்.
- சட்ட விதிமுறைகளை பின்பற்றாத 60 கடை நிறுவனங்கள், 41 உணவு நிறுவனங்கள் என மொத்தம் 101 நிறுவனங்கள் மீது நடவடிக்கை.
கிருஷ்ணகிரி,
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சுதந்திர தினத்தில் விடுமுறை வழங்காத 101 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கிருஷ்ணகிரி தொழிலாளர் உதவி ஆணை யாளர் (அமலாக்கம்) வெங்கடாஜலபதி வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு தேசிய பண்டிகை விடுமுறை சட்டம், உணவு நிறுவன சட்டத்தின் கீழ் தேசிய விடுமுறை தினமான சுதந்திர தினமான நேற்று கடைகள், உணவு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறு வனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் ஒரு நாள் விடுமுறை வழங்க வேண்டும்.
அவ்வாறு விடுமுறை அளிக்காத பட்சத்தில் அன்றைய தினம் பணிக்கு அமர்த்தப்படும் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுப்பு அனுமதித்து தொடர்புடைய தொழிலாளர்களுக்கு அறிவிப்பு அளிக்க வேண்டும்.
அதன் நகலை தொழி லாளர் துணை அல்லது உதவி ஆய்வாளருக்கு அனுப்பி விடுமுறை தினத்தன்று நிறுவனத்தில் பார்வைக்கு வைக்க வேண்டும்.
இந்நிலையில் சுதந்திரத் தினத்தன்று கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் நேற்று கடைகள், உணவு நிறுவனங்களில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில், 68 கடைகள், என 114 நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது. அதில் சட்ட விதிமுறைகளை பின்பற்றாத 60 கடை நிறுவனங்கள், 41 உணவு நிறுவனங்கள் என மொத்தம் 101 நிறுவனங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை தொடரப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்