என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ரெயில்வே, வங்கிப் பணிக்கான போட்டிதேர்வுகளுக்கான இலவச பயிற்சி
- ரெயில்வே, வங்கிப் பணிக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு இன்று முதல் 50 நாட்கள் நடைபெற உள்ளது.
- ெரயில்வே, வங்கிப் பணிக்கான போட்டித் தேர்வுகளில் அதிகளவில் விண்ணப்பித்து தேர்ச்சி பெறவேண்டும்.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ரயில்வே, வங்கிப் பணிக்கான போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பினை மாவட்ட கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் தெரிவித்ததாவது:-
தருமபுரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் வாயிலாக ெரயில்வே, வங்கிப் பணிக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு இன்று முதல் 50 நாட்கள் நடைபெற உள்ளது.
இதில் 150 மாணவ மாணவியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.300 மணி நேரம் வழிகாட்டல் வகுப்புகள் நடைபெறும். இப்பயிற்சி வகுப்பில் 120-க்கும் மேற்பட்ட மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகின்றது. இலவச பாடக்குறிப்புகள் வழங்கப்படும்.
இப்பயிற்சி வகுப்பில் தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இடைநிற்றல் இல்லாமல், தினசரி நடைபெறும் வகுப்பு மற்றும் தேர்வுகளுக்கு தொடர்ச்சியாக வருகைதந்து, இவ்வாய்ப்பினை பயன்படுத்தி ெரயில்வே, வங்கிப் பணிக்கான போட்டித் தேர்வுகளில் அதிகளவில் விண்ணப்பித்து தேர்ச்சி பெறவேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) செந்தில்குமார், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் முரளிதரன், மாவட்ட திறன் பயிற்சி அலுவலக பயிற்சி அலுவலர் அமிர்தவிக்ரமன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்