என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சேலத்தில் இளம் பெண்ணிடம் ரூ.59 ஆயிரம் மோசடி
Byமாலை மலர்25 Nov 2022 9:25 AM GMT
- மர்ம நபர், தங்களது செல்போன் எண் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூ.1.50 லட்சம் பரிசு
- ஜி.எஸ்.டி மற்றும் சேவைக் கட்டணம் ரூ.58,982 உடனடியாக செலுத்த வேண்டும்
சேலம்:
சேலம் உடையப்ப செட்டி யார் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது மனைவி கவுதமி (வயது 28). இவரது செல்போனுக்கு கடந்த 19-ந் தேதி வந்த அழைப்பில் பேசிய மர்ம நபர், தங்களது செல்போன் எண் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூ.1.50 லட்சம் பரிசு விழுந்துள்ளது. பரிசுத் தொகையை பெறுவதற்கு ஜி.எஸ்.டி மற்றும் சேவைக் கட்டணம் ரூ.58,982 உடனடியாக செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
இதை நம்பிய கவுதமி, அந்த நபர் கூறிய வங்கிக் கணக்கிற்கு பணத்தை பரிமாற்றம் செய்துள்ளார். பணத்தை செலுத்திய பின் எந்த பரிசு தொகையும் கவுதமியின் வங்கி கணக்கிற்கு வராததால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தார். மேலும் இதுபற்றி கவுதமி சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X