search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரியில் நடுக்கடலில் வள்ளம் கவிழ்ந்து தத்தளித்த மீனவர்கள்- 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு
    X

    கன்னியாகுமரியில் நடுக்கடலில் வள்ளம் கவிழ்ந்து தத்தளித்த மீனவர்கள்- 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு

    • கோவளம் கடற்கரையில் இருந்து 5 மீனவர்கள் இன்னொரு வள்ளத்தில் அவர்களை மீட்பதற்காக கடலுக்குள் விரைந்து சென்றனர்.
    • நடுக்கடலில் சுமார் 2 மணி நேரம் தத்தளித்து கொண்டு இருந்த 2 பேரையும் அவர்கள் உயிருடன் மீட்டனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியை அடுத்த கோவளம் பகுதியைச் சேர்ந்தவர் ரஸ்டன் (வயது 40). மீனவர். இவருக்கு சொந்தமாக வள்ளம் உள்ளது. அதில் கடலுக்கு செல்ல சின்னமுட்டம் கடற்கரைக்கு வள்ளத்தை கொண்டு சென்றார். வள்ளத்தில் ரஸ்டனும், அதே பகுதியை சேர்ந்த கமலஸ் (45) என்பவரும் இருந்தனர்.

    இன்று காலை 6.45 மணி அளவில் கோவளம் கடல் வழியாக சென்றபோது நடுக்கடலில் ராட்சத அலையில் வள்ளம் சிக்கி கவிழ்ந்தது.

    இதில் ரஸ்டனும், கமலசும் கடலில் விழுந்தனர். அவர்கள் 2 பேரும் வள்ளத்தை பிடித்தபடி நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் கோவளம் கடற்கரையில் இருந்து 5 மீனவர்கள் இன்னொரு வள்ளத்தில் அவர்களை மீட்பதற்காக கடலுக்குள் விரைந்து சென்றனர்.

    நடுக்கடலில் சுமார் 2 மணி நேரம் தத்தளித்து கொண்டு இருந்த 2 பேரையும் அவர்கள் உயிருடன் மீட்டனர்.

    பின்னர் 2 பேரையும் கவிழ்ந்து கிடந்த வள்ளத்தையும் மீட்டு பத்திரமாக கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.

    Next Story
    ×