என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தருமபுரி அருகே விவசாயி கொடூரமாக வெட்டி கொலை: மனைவி, மகன்களிடம் போலீசார் விசாரணை
- கொடூரமாக வெட்டிய காயங்களுடன் கொல்லப்பட்டு கிடந்தார்.
- இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் புலிகரை பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி கிருஷ்ணன் (வயது 55) இவரது மனைவி கந்தம்மாள்.
கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.கிருஷ்ணன் புலி கரையில் தனியாக வசித்து வந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
கிருஷ்ணனுக்கு சொந்தமாக ஊருக்கு வெளியே விவசாய நிலம் உள்ளது. நேற்று மாலை கிருஷ்ணன் தலை, முகத்தில் அரிவாளால் கொடூரமாக வெட்டிய காயங்களுடன் கொல்லப்பட்டு கிடந்தார். இதை பக்கத்து நிலத்துக்காரர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மதிகோன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷர்மிளா பானு தலைமையில் வந்த போலீசார் கிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் அறிந்த பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.
இது குறித்து கொலை செய்யப்பட்ட கிருஷ்ணன் மனைவி மகன்கள் மற்றும் அந்த பகுதியில் உள்ளவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணனுக்கு ஏற்பட்ட தவறான உறவு காரணமாக அவருக்கும், அவரது குடும்பத்திற்கும் பிரச்சனை இருந்து வருவதாக கூறப்படும் நிலையில் இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்