search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சரக்குவாகனம் மோதி தொழிலாளி பலி
    X

    சரக்குவாகனம் மோதி தொழிலாளி பலி

    • சரக்குவாகனம் மோதி தொழிலாளி பலியானார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மொடக்குறிச்சி,

    அரச்சலூர் கஸ்தூரிபா கிராமம் தம்பிரான் வலசை சேர்ந்தவர் யோககணபதி. தேங்காய் மரம் ஏறும் தொழிலாளி. இவர் நேற்று மாலை முத்தூரிலிருந்து ஈரோடு நோக்கி செல்லும் ரோட்டில் தனது பைக்கி்ல் சென்று கொண்டிருந்தார். அப்போது மொடக்கு றிச்சி அருகே பட்டறை வேலம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் அரிசிமில் அருகே இவர் சென்று கொண்டிருந்த போது எதிர்திசையில் வந்த சரக்கு வாகனம் ஒன்று யோக கணபதி மீது மோதியுள்ளது. இந்த சம்பவத்தில் யோகக ணபதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதையடுத்து சம்பவம் குறித்து அறிந்த மொடக்கு றிச்சி போலீசார் அங்கு விரைந்து சென்று யோகக ணபதியின் உடலை கை ப்பற்றி ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய சரக்குவா கனத்தை ஓட்டி வந்த லக்கா புரம் கரட்டாங்காடு பகுதியை சேர்ந்த சசிகுமார் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×