search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நொய்யல் ஆற்று தண்ணீரில் மீண்டும் உப்பு தன்மை அதிகரிப்பு
    X

    நொய்யல் ஆற்று தண்ணீரில் மீண்டும் உப்பு தன்மை அதிகரிப்பு

    • நொய்யல் ஆற்று தண்ணீரில் உப்புத்தன்மை 780 டிடிஎஸ்ஆக உயர்ந்தது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
    • திருப்பூர் பகுதி சாய தொழிற்சாலைகளால் மீண்டும் நொய்யல் ஆற்றில் கருப்பு நிறத்தில் தண்ணீர் செல்கிறது.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே உள்ள ஒரத்துப்பாளையம் அணை. இந்த அணைக்கு வரும் தண்ணீரில் திருப்பூர் பகுதியில் செயல்படும் சாயத்தொழிற்சாலைகளில் இருந்து சாயக்கழிவுகளை அதிகளவில் கலந்து வந்ததால் ஒரத்துப்பாளையம் அணை முற்றிலும் மாசுபட்டது.

    இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதன் பேரில் அணைக்கு வரும் தண்ணீரில் சாயக்கழிவின் அளவு ஜீரோ டிஸ்சார்ஜ் ஆக இருக்கும் வரை அணையில் தண்ணீரை தேக்கி வைக்காமல் முழுமையாக வெளியேற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது.

    அதன்படி பல வருடங்களாக ஒரத்துப்பாளையம் அணையில் தண்ணீரை தேக்கி வைக்காமல் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.

    மழைக்காலங்களில் திருப்பூர் பகுதியில் இருந்து மழை நீரோடு சாக்கடை கழிவுகளும் கலந்து வந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 8-ந்தேதி மழை வெள்ளம் அதிகமாக வந்ததால் கழிவுகளே இல்லாமல் சுத்தமான தண்ணீராக நொய்யல் ஆற்றில் ஓடியது. அப்போது உப்புத்தன்மை 230 டிடிஎஸ் அளவில் இருந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்நிலையில் நேற்று காலை நொய்யல் ஆற்று தண்ணீரில் உப்புத்தன்மை 780 டிடிஎஸ்ஆக உயர்ந்தது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். இதுகுறித்து ஆற்றங்கரையோர விவசாயிகள் கூறியதாவது:

    நல்ல தண்ணீராக நொய்யல் ஆற்றில் 10 நாட்கள் ஓடியது. இதனால் நாங்கள் மகிழ்ச்சி அடை ந்தோம்.

    ஆனால் திருப்பூர் பகுதி சாய தொழிற்சாலைகளால் மீண்டும் நொய்யல் ஆற்றில் கருப்பு நிறத்தில் தண்ணீர் செல்கிறது. உப்புத்தன்மையும் அதிகரித்து விட்டது.

    இனி இந்த தண்ணீரில் இருந்து கால்நடைகளை பாதுகாப்பதே சிரமம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×