என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுதினம் (14ம் தேதி) திண்டுக்கல் வருகிறார்.
- மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது தொடர்பாக தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது.
திண்டுக்கல்:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுதினம் (14ம் தேதி) திண்டுக்கல் வருகிறார். சாணார்பட்டி அருகே தோட்டனூத்தில் ரூ.17 கோடி யில் கட்டி முடிக்க ப்பட்டுள்ள இலங்கை அகதிகளுக்கான 321 வீடுகளை திறந்துவைத்து அதனை பயனாளிகளுக்கு ஒப்படைக்கிறார்.
இதனை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது தொடர்பாக தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. ஒன்றிய அவைத்தலைவர் குருசாமி தலைமை தாங்கினார். துணை செயலாளர் ராதா கிருஷ்ணன் வரவேற்றார். தி.மு.க. ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் கலந்துகொண்டு முதல்-அமைச்சரை சிறப்பாக வரவேற்பது குறித்து பேசினார்.
தாடிக்கொம்பு பேரூ ராட்சி தலைவர் கவிதா சின்னத்தம்பி, பேரூராட்சி செயலாளர் ராமலிங்க சாமி, துணை செயலாளர்கள் காளிதாஸ், சுப்புலட்சுமி, மாவட்ட பிரதிநிதிகள் சுரேஷ், புருசோத்தமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பிரதிநிதி அலெக்ஸ் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்