search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தி.மு.க. நிர்வாகிகள்   ஆலோசனைக் கூட்டம்
    X

    கோப்பு படம்

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுதினம் (14ம் தேதி) திண்டுக்கல் வருகிறார்.
    • மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது தொடர்பாக தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது.

    திண்டுக்கல்:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுதினம் (14ம் தேதி) திண்டுக்கல் வருகிறார். சாணார்பட்டி அருகே தோட்டனூத்தில் ரூ.17 கோடி யில் கட்டி முடிக்க ப்பட்டுள்ள இலங்கை அகதிகளுக்கான 321 வீடுகளை திறந்துவைத்து அதனை பயனாளிகளுக்கு ஒப்படைக்கிறார்.

    இதனை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது தொடர்பாக தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. ஒன்றிய அவைத்தலைவர் குருசாமி தலைமை தாங்கினார். துணை செயலாளர் ராதா கிருஷ்ணன் வரவேற்றார். தி.மு.க. ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் கலந்துகொண்டு முதல்-அமைச்சரை சிறப்பாக வரவேற்பது குறித்து பேசினார்.

    தாடிக்கொம்பு பேரூ ராட்சி தலைவர் கவிதா சின்னத்தம்பி, பேரூராட்சி செயலாளர் ராமலிங்க சாமி, துணை செயலாளர்கள் காளிதாஸ், சுப்புலட்சுமி, மாவட்ட பிரதிநிதிகள் சுரேஷ், புருசோத்தமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பிரதிநிதி அலெக்ஸ் நன்றி கூறினார்.

    Next Story
    ×