என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![கடையம் வட்டாரத்தில் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி கடையம் வட்டாரத்தில் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி](https://media.maalaimalar.com/h-upload/2022/07/25/1735451-1-kadayam-farmers-meet.jpg)
கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்.
கடையம் வட்டாரத்தில் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- கடையம் வேளாண்மை உதவி இயக்குனர் ஏஞ்சலின் பொன்ராணி நெல் பயிரில் வரப்பு பயிராக உளுந்து நடவு செய்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி விளக்கி கூறினார்.
- வேளாண்மை உதவி அலுவலரும் நோடல் அதிகாரியுமான பேச்சியப்பன் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.
கடையம்:
பொட்டல்புதூர் கிரா மத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகளுடன் கலந்து ரையாடல் நிகழ்ச்சி நடை பெற்றது.
நிகழ்ச்சியில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்-அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 132 விவசாயிகளுக்கு 3 தென்னங்கன்றுகள், 15 விவசாயிகளுக்கு உளுந்து விதைகள், 5 விவசாயிகளுக்கு மின்கல தெளிப்பான்கள், 5 விவசாயிகளுக்கு கைத் தெளிப்பான்கள் வழங்கப் பட்டது.
வரப்பு பயிர்
மேலும் தோட்டக்கலை துறை சார்பில் பழ மரக்கன்றுகள், காய்கறி விதைகள் தொகுப்பு, டிரம்கள் வழங்கப்பட்டது. உளுந்து விதை பெற்ற விவசாயிகள் தற்போது நடவு செய்யப்பட்டிருந்த நெல் பயிரில் வரப்பு பயிராக உளுந்து பயிரை சாகுபடி செய்திருந்தனர்.
விவசாயிகளுடன் நடத்திய கலந்துரையாடல் மற்ற விவசாயிகளுக்கு தெரியப்படுத்தும் வகையில் வீடியோ காட்சி பதிவு செய்யப்பட்டது. கடையம் வேளாண்மை உதவி இயக்குனர் ஏஞ்சலின் பொன்ராணி தலைமை தாங்கி நெல் பயிரில் வரப்பு பயிராக உளுந்து நடவு செய்வதால் ஏற்படும் 3 முக்கிய நன்மைகள் பற்றி விளக்கி கூறினார்.
அதிக நன்மை
பொட்டல் புதூர் கிராம ஊராட்சி தலைவர் கணேசன் இத்திட்டத்தில் அதிக நன்மைகள் இருப்பதால் மற்ற விவசாயிகளும் இது போன்று நெல் பயிர் வரப்பில் உளுந்து பயிர் சாகுபடி செய்ய வேண்டும் என்று கூறினார். துணை வேளாண்மை அலுவலர் சுப்புராம் வரவேற்று பேசினார்.
தோட்டக்கலை உதவி இயக்குனர் ஞானசேகரன் தோட்டக்கலை துறையில் செயல்படுத்த படும் திட்டங்கள் பற்றி எடுத்துக் கூறினார். வேளாண்மை அலுவலர் அபிராமி திட்ட விளக்கவுரை ஆற்றினார். வேளாண்மை உதவி அலுவலரும் நோடல் அதிகாரியுமான பேச்சியப்பன் நிகழ்ச்சி ஏற் பாடுகளை செய்திருந்தார்.
கடையம் வட்டார புள்ளியியல் ஆய்வாளர் சைரஸ் ஆன்ட்ரோ , பொட் டல் புதூர் கிராம நிர்வாக அலுவலர் சுடர் செல்வன், கிராம நிர்வாக உதவியாளர் பாண்டி, வேளாண்மை உதவி அலுவலர்கள் கமல்ராஜன், ஜெகதீஸ்வரன், கிருஷ்ணமூர்த்தி, பால்துரை, தீபா, தோட்டக்கலை உதவி அலுவலர்கள், கோவிந்த ராஜ், திருமலைகுமார், இசக்கியம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக துணை வேளாண்மை அலுவலர் சுப்பராம் வரவேற்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)