என் மலர்
திண்டுக்கல்
- ஓசூரில் நீதிமன்ற வளாகத்தில் வக்கீல் வெட்டப்பட்டது, தஞ்சை பள்ளியில் ஆசிரியை கொலை செய்யப்பட்டது உள்ளிட்டவை வருத்தமளிக்கிறது.
- பழனி அடிவாரம் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதால் ஏழை சாலையோர வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பழனி:
பழனியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பழனிக்கு வருகை தந்தார். பழனி தேவஸ்தான தங்கும் விடுதியில் இரவு தங்கிய திருமாவளவன் இன்று அதிகாலையிலேயே பழனி மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை செய்யப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து மலை அடிவாரத்தில் உள்ள புலிப்பாணி சித்தர் ஆசிரமத்திற்கு சென்ற திருமாவளவன் தொட்டிச்சி அம்மனை வழிபாடு செய்தார். அதன்பின் போகர், பழனி ஆதினம், சிவானந்த புலிப்பாணி சுவாமிகள் மடத்திற்கு சென்றார். அவருக்கு அங்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது திருமாவளவன் புலிப்பாணி சுவாமிகளிடம் ஆசிபெற்றார்.
அதனை தொடர்ந்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது,
ஓசூரில் நீதிமன்ற வளாகத்தில் வக்கீல் வெட்டப்பட்டது, தஞ்சை பள்ளியில் ஆசிரியை கொலை செய்யப்பட்டது உள்ளிட்டவை வருத்தமளிக்கிறது. இந்த சம்பவங்கள் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற செயல்பாடுகளால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் நிலைக்குச் செல்வதை தடுக்க தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டு ரேஷன் அரிசி கடத்தலால் ரூ.1900 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக பா.ம.க. தலைவர் அன்புமணி தெரிவித்தது எந்த ஆதாரத்தின் அடிப்படையில் என தெரியவில்லை. அவ்வாறு அவர் தெரிவித்தது உண்மையாக இருக்கும் பட்சத்தில் உடனடியாக தடுத்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழனி அடிவாரம் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதால் ஏழை சாலையோர வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்களுக்கு மட்டுமாவது அனுமதி அளித்து அவர்களது வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பழனி பகுதியில் உள்ள அருந்ததியர் சமுதாயத்திற்கு சொந்தமான நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், அதையும் மீட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிற்கு கோரிக்கை விடுத்துள்ளேன்.
ஆட்சி அதிகாரத்தில் வி.சி.க. விற்கு பங்கு என்று துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளது அவரது சொந்த விருப்பமாகும். ஆட்சி அதிகாரம் என்பது மக்கள் அளிக்கும் தீர்ப்பு. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மீது தமிழக மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு, எங்களின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு அவர்கள் ஒத்துழைப்போடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என்று தமிழக மக்கள் அங்கீகாரம் கொடுக்கும்போது அது நிறைவேறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வருகிற தேர்தலில் விஜயுடன் கூட்டணி அமையுமா என்ற கேள்விக்கு பதில் எதுவும் சொல்லாமல் வணக்கம் தெரிவித்து சென்றார்.
இதனை தொடர்ந்து பழனி அருகே நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வி.சி.க. சார்பில் கட்சி கொடி ஏற்றிவைத்து மூத்த நிர்வாகிகளின் படங்களை திறந்துவைத்தார். அவரிடம் வியாபாரிகள், பொதுமக்கள் பலர் மனுக்களை அளித்தனர்.
- பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அவதி.
- மழையளவு குறைந்து கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது சாரல் மழையும் கடும் பனிமூட்டமும் நிலவி வந்தது. இந்த சூழலை பயணிகள் அனுபவித்து மகிழ்ந்தனர்.
இந்நிலையில் இன்று காலையில் சிறிது நேரம் பனிமூட்டம் நிலவியது. அதனைத் தொடர்ந்து பகல் பொழுதிலும் பனிமூட்டம் நீடித்தது. இதனால் நகர் முழுவதும் வெள்ளைப் போர்வை போர்த்தியது போல பனிமூட்டம் சூழ்ந்துள்ளது.
இதனால் இருசக்கர வாகனம் முதல் நான்கு சக்கர வாகனம் வரை முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே செல்கிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
நடந்து செல்பவர்கள் மீதும் பனி விழுவதால் உடல் நடுங்கியபடி செல்கின்றனர். தொடர்ந்து பனிமூட்டம் குறையாமல் உள்ளதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.
- சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார்.
- கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை.
பழனி:
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அதிகாலையில் வந்தார். ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்ற அவர் அங்கு நடந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார்.
அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டதுடன் தேவஸ்தான ஊழியர்கள் பிரசாதங்களை வழங்கினர். அதனைத் தொடர்ந்து போகர் சன்னதி, புலிப்பானி ஆசிரமம் ஆகியவற்றுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார்.
அதன் பின்பு தனியார் விசேஷ நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனது உதவியாளருடன் சென்று விட்டார்.
- போதையில் குளிரில் நடுங்கிய வாலிபருக்கு டீ வாங்கிக்கொடுத்து தெளிய வைத்தனர் காவல்துறையினர் .
- விசாரணையில் அவர் மதுரை காளவாசல் பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவந்தது.
கொடைக்கானல்:
கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு முக்கிய சுற்றுலா இடமாகவும், சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடமாகவும் நட்சத்திர ஏரி அமைந்துள்ளது.
இந்தநிலையில் நேற்று நட்சத்திர ஏரியில், வாலிபர் ஒருவர் நீச்சல் அடித்து கொண்டு இருந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் மற்றும் படகு ஓட்டுனர்கள் அவரை வெளியே வருமாறு சத்தம் போட்டனர். இதையடுத்து வெளியே வந்த வாலிபர் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டார்.
அப்போது, காப்பாற்ற வந்தவர்களை பார்த்து நானும் "மதுரைக்காரன்டா"என பேசிய வாலிபரிடம்.. ஊருக்கு கிளம்பு என்று சொன்னவுடன் அழுதார். இதையடுத்து போதையில் குளிரில் நடுங்கிய வாலிபருக்கு டீ வாங்கிக்கொடுத்து தெளிய வைத்தனர் காவல்துறையினர் .
இதையடுத்து விசாரணையில் அவர் மதுரை காளவாசல் பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவந்தது. மேலும் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த இவர், நட்சத்திர ஏரியில் குதித்து நீச்சல் அடித்ததாக கூறினார். பின்னர் போலீசார் அவருக்கு அறிவுரை கூறி, சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- பேராசிரியர் ரங்கநாதன் பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் வகையில் மாணவர்களிடம் பேசி வந்துள்ளார்.
- மாணவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் பல்கலை துணைவேந்தர் விசாரணை மேற்கொண்டார்.
திண்டுக்கல் காந்தி கிராம நிகர்நிலை பல்கலைகழக மாணவர்களிடம் சமஸ்கிருதம் படிக்க சொல்வதாகவும், திராவிடம் குறித்து இழிவாக பேசுவதாகவும் பேராசிரியர் ரங்கநாதன் மீது மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.
சுகாதார ஆய்வாளருக்கான பயிற்சி வழங்கும் பேராசிரியர் ரங்கநாதன் பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் வகையில் மாணவர்களிடம் பேசி வந்துள்ளார் என்றும் அவர் ஒரு வாட்சப் குழுவை ஆரம்பித்து மாணவர்களை அதில் சேர்த்து பாஜகவுக்கு ஆதரவான பதிவுகளை பகிர்ந்து வருவதாகவும் மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.
மாணவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் பல்கலை துணைவேந்தர் விசாரணை மேற்கொண்டார். அதில் புகாரில் உண்மை இருந்ததால் பேராசிரியர் ரங்கநாதனை ஆறு மாதம் விருப்ப ஓய்வில் செல்ல துணைவேந்தர் உத்தரவிட்டுள்ளார்.
- பக்தர்கள் நீண்டநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
பழனி:
தமிழக கடவுள் முருகனின் 3-ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
நேற்று கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு பல்வேறு நகரங்களில் உள்ள கோவில்களில் மாலை அணிந்து ஐயப்ப பக்தர்கள் விரதத்தை தொடங்கி உள்ளனர்.
மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் சென்று வருகின்றனர். இவர்கள் ஆன்மீக பயணம் மேற்கொண்டு பழனி, ராமேஸ்வரம் உள்ளிட்ட புண்ணிய ஸ்தலங்களுக்கும் சென்று வருகின்றனர்.
இன்று விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பழனியில் குவிந்தனர். இதனால் பஸ்நிலையம், அடிவாரம், கிரிவீதி உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
மேலும் ரோப்கார் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் மின்இழுவை ரெயில் நிலையம், படிப்பாதை, யானைப்பாதை வழியாக மலைக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் செல்ல காத்திருந்தனர்.
பின்னர் மலைக்கோவிலுக்கு சென்று இலவச தரிசனம் மற்றும் கட்டண தரிசன வரிசையில் நீண்டநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- கொடைக்கானலிலும், மலைகிராமங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
- மலை கிராமங்களில் பல மணி நேரம் ஏற்படும் மின் தடையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் நேற்று 2வது நாளாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது.
திண்டுக்கல் நகரில் நேற்று பிற்பகல் தொடங்கிய மழை பின்னர் விடிய விடிய சாரல் மழையாக பெய்தவண்ணம் இருந்தது. பல்வேறு பகுதிகளில் மின் வினியோகம் தடை பட்டதால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகினர்.
காலையில் பள்ளிக்கு செல்லும் சமயத்திலும், மாலையில் வீடு திரும்பும் சமயங்களிலும் மழை பெய்து வருவதால் மாணவ-மாணவிகள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
கனமழை இல்லாமல் தொடர்ந்து சாரல் மழையாகவே பெய்து வருவதால் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.
திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோவிலுக்கு செல்லும் சாலையில் ராட்சத மரம் முறிந்து விழுந்ததால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சாலையை கடக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதன்பிறகு சாலைப்பணியாளர்கள் அங்கு வந்து மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.
கொடைக்கானலிலும், மலைகிராமங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பல கிராமங்கள் இருளில் மூழ்கி காணப்படுகின்றன. இதுமட்டுமின்றி மரங்கள் முறிந்து விழுவதும், மின் வயர்கள் அறுந்து கிடப்பதும் நடந்து வருகின்றன.
கொடைக்கானல் கீழ்மலை கிராமமான தாண்டிக்குடி, பண்ணைக்காடு, பெரும்பாறை, கே.சி.பட்டி, மஞ்சள்பரப்பு, தடியன்குடிசை, மங்களம்கொம்பு ஆகிய பகுதிகளில் நேற்று இரவு விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. இதனால் மலைச்சாலையில் ஆபத்தான கொண்டை ஊசி வளைவுகள் உள்ள இடங்களில் பாறைகள் உருண்டு கிடக்கின்றன. இதனால் இருசக்கர வானகங்களில் இரவு நேரங்களில் மலைச்சாலையில் பயணம் செய்ய அச்சம் அடைந்து வருகின்றனர். தடியன்குடிசை அருகே இன்று காலையிலும் பாறைகள் உருண்டு விழுந்ததால் அந்த சாலையிலேயே அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. எனவே மலைக்காலங்களில் ஆபத்தான கொண்டை ஊசி வளைவுகள் உள்ள பகுதிகளில் பாறைகள் உருண்டு விழுவதை தடுக்கவும், விழுந்த பாறைகளை அகற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனகோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் மலை கிராமங்களில் பல மணி நேரம் ஏற்படும் மின் தடையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையாத நிலையிலேயே தற்போது பல பகுதிகள் இருளில் மூழ்கி கிடப்பதாக தெரிவித்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 141 மி.மீ.மழை அளவு பதிவான நிலையில் நேற்று 2-வது நாளாக 60 மி.மீ. மழை அளவு பதிவானது. திண்டுக்கல் 24, காமாட்சிபுரம் 4, நத்தம் 2, நிலக்கோட்டை 6, சத்திரப்பட்டி 5.20, வேடசந்தூர் 6, பழனி 2, கொடைக்கானல் ரோஸ்கார்டன் 4, பிரையண்ட் பூங்கா 5 மி.மீ. மழை அளவு பதிவானது.
- பல்வேறு மாவட்டங்களில் 60-க்கும் மேற்பட்ட திருட்டு, வழிப்பறி போன்ற வழக்குகள் இருந்தது தெரியவந்தது.
- கைது செய்யப்பட்ட பெரியசாமியை போலீசார் திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இடையகோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் இரவு நேரங்களில் பூட்டியிருக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளை போவது வழக்கமாக இருந்தது.
இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில் ரெட்டியார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் உத்தரவின் பேரில் ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி. கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் தங்கராஜ் ஆகியோர் மேற்பார்வையில் ரெட்டியார்சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காதர்மைதீன் தலைமையில் போலீசார் வேளாங்கண்ணி, கார்த்திக்ராஜன், ஜோசப்மோரிஸ்ராஜ், காங்குமணி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார், திருட்டு நடந்த வீடுகளின் அருகே உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் திருட்டு நடந்த வீடுகளுக்கு அருகே மோட்டார் சைக்கிளில் சுற்றிக்கொண்டு வருவது போல காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த காட்சியில் உள்ள உருவத்தைக்கொண்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
ஒட்டன்சத்திரம்-திண்டுக்கல் சாலையில் ரெட்டியார்சத்திரத்தை அடுத்து தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு மோட்டர் சைக்கிளில் போலீசாரை பார்த்தும் ஒரு வாலிபர் நிற்காமல் வேகமாக சென்றார். உடனே போலீசார் சிறிது தூரம் மோட்டார் சைக்கிளில் விரட்டிச்சென்று வாலிபரை மடக்கிப் பிடித்து ரெட்டியார்சத்திரம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
அங்கு போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்டவர் மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த பெரியசாமி என்ற பொட்டுக்கடலை (வயது 25) என்பது தெரிந்தது.
பிடிபட்ட பெரியசாமியிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தியபோது ரெட்டியார்சத்திரம் பகுதியில் பூட்டியிருந்த வீடுகளை நோட்டமிட்டு பணம், நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார்.
மேலும் அந்த வாலிபர் மறைத்து வைத்திருந்த 4 மோட்டார் சைக்கிள்கள், கொள்ளையடிக்க பயன்படுத்திய முகமூடி, கையுறை, அரிவாள், கத்தி, இரும்பு கம்பி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் பெரியசாமியை கைது செய்து விசாரணை நடத்தியபோது அவர் மீது திண்டுக்கல், மதுரை, திருப்பூர், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 60-க்கும் மேற்பட்ட திருட்டு, வழிப்பறி போன்ற வழக்குகள் இருந்தது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட பெரியசாமியை போலீசார் திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- சிறிய அகல் விளக்கு ரூ.1 முதல் ரூ.5 வரை விற்கப்படுகிறது.
- பல்வேறு டிசைன்களிலும் விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம், வேடப்பட்டி, நொச்சி ஓடைப்பட்டி ஆகிய பகுதிகளில் மண் பாண்ட தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர். இங்கு பானைகள், சாமி சிலைகள், வீட்டு அலங்கார பொருள், பரிசு பொருட்கள், கார்த்திகை விளக்குகளை களி மண்ணால் செய்து தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர்.
இங்கு கார்த்திகை தீப திருநாளுக்காக விளக்குகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நாகரீக வளர்ச்சியினால் பீங்கான், மெழுகினால் செய்யப்பட்ட விளக்குகள் விற்பனைக்கு வந்தாலும், மண் விளக்குகளுக்கு இன்னும் மவுசு குறையவில்லை. மண்ணால் செய்யப்பட்ட சிறிய அகல் விளக்கு ரூ.1 முதல் ரூ.5 வரை விற்கப்படுகிறது.
வெளி மாவட்டம், மாநில விற்பனையாளர்கள் தேவையான விளக்குகளை மொத்தமாக ஆர்டர் கொடுத்து வாங்கி செல்கின்றனர்.

சாதாரண மண் விளக்குகள் மட்டுமின்றி, தட்டு விளக்கு, மொரம் விளக்கு, காமாட்சி விளக்கு, மேஜிக் விளக்கு, ஆரத்தி தட்டு விளக்கு உள்ளிட்ட வெவ்வேறு டிசைன்களிலும் விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன.
களி மண்ணால் செய்யப்பட்ட மனை விளக்கு, பெரிய மனை விளக்கு, உருளி விளக்கு, சாமி சிலை வைத்த உருளி விளக்கு, 5 விளக்குகள் கொண்ட தாமரை விளக்கு என புதிய டிசைன்களில் ரூ.200 முதல் ரூ.1000 வரை விற்பனைக்கு தயாராகி வருகின்றன.
இதுகுறித்து கலைடெரகோட்டா உரிமையாளர் கஜேந்திரன் கூறியதாவது:-
மண்ணால் செய்யப்படும் பொருட்களின் செய்கூலி, விற்கும் விலையை விட அதிகம். ஆனாலும், மக்கள் மத்தியில் மண்ணால் செய்யப்படும் பொருட்களுக்கு வரவேற்பு இருக்கிறது. இதனால் இந்த தொழிலை தொடர்ந்து செய்து வருகிறோம்.
இங்கு தயாரிக்கப்படும் விளக்குகள் மதுரை, திருச்சி, தஞ்சை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலமான கேரளா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா ஆகிய பகுதிகளுக்கும் விற்பனைக்காக வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.
மண் பாண்ட கலையும், தொழிலும் அழியாமல் இருக்கவும், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்படவும் அரசு உதவி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
- கடந்த 2012-ம் ஆண்டு டிச.7-ந்தேதி நாகமுத்து தற்கொலை செய்து கொண்டார்.
- இந்த வழக்கில் 23 சாட்சியங்கள் விசாரணை செய்யப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல்:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்த சுப்புராஜ் மகன் நாகமுத்து (வயது 22). இவர் கைலாசபட்டியில் உள்ள கைலாசநாதர் கோவில் பூசாரியாக இருந்து வந்தார்.
கோவிலில் கடை ஒதுக்குவது தொடர்பாக இவருக்கும், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பியுமான ஓ.ராஜாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 7-ந் தேதி நாகமுத்து தற்கொலை செய்து கொண்டார். இவரை தற்கொலைக்கு தூண்டியதாக கோவில் அறங்காவலராகவும், பெரியகுளம் முன்னாள் நகர்மன்ற தலைவராகவும் இருந்த ஓ.ராஜா, தென்கரை பேரூராட்சி முன்னாள் தலைவர் பாண்டி உள்பட 7 பேர் மீது பெரியகுளம் தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவுப்படி கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்த வழக்கு திண்டுக்கல் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை நடைபெற்றபோதே பாண்டி என்பவர் இறந்து விட்டார். மற்ற 6 பேர் மீதான வழக்கு விசாரணை தற்போது திண்டுக்கல் மாவட்ட பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஓ.ராஜா, மணிமாறன், சிவக்குமார், ஞானம், லோகு, சரவணன் ஆகியோர் நிபந்தனையற்ற ஜாமீன் பெற்று இருப்பதால் வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தனர்.
இந்த வழக்கில் 23 சாட்சியங்கள் விசாரணை செய்யப்பட்டு 196 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 4 தடயங்கள், சாட்சியங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அரசு தரப்பின் இறுதி கட்ட வாதத்திற்கு பின் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ஓ.ராஜா உள்பட 6 பேரும் காலையிலேயே கோர்ட்டில் ஆஜராகினர். பழங்குடியின மற்றும் பட்டியலின சிறப்பு நீதிமன்ற நீதிபதி முரளிதரன் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். சாட்சிகள் அளித்த தகவல்கள் ஒருமனதாக இல்லை என்றும், தற்கொலைக்கு தூண்டியதற்கான அடிப்படை முகாந்திரம் இல்லாததால் விடுதலை செய்யப்படுவதாக தெரிவித்தனர்.
இந்த வழக்கில் தற்கொலை செய்து கொண்ட நாகமுத்துவின் தந்தை சுப்புராஜ் மனுதாரராக இருந்த நிலையில் அரசு தரப்பு வக்கீலாக பாப்பு மோகன் வாதாடினார். தீர்ப்புக்கு பின்பு அவர் தெரிவிக்கையில்,
இந்த வழக்கில் மேல்முறையீடு செய்து நாகமுத்துவின் இறப்பிற்கு நீதி கிடைக்க போராடுவோம் என்றார்.
தீர்ப்பு குறித்து ஓ.ராஜா தெரிவிக்கையில்,
இந்த வழக்கில் என்மீது பொய்யான புகார் அளிக்கப்பட்டது. 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நீதிமன்றம் மூலம் நான் குற்றமற்றவன் என நிருபிக்கப்பட்டுள்ளது. மேல்முறையீடு செய்தாலும் நான் குற்றம் செய்யவில்லை என நிரூபிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கொடைக்கானலுக்குள் நுழையும் முன்பு பயணிகளிடம் இ-பாஸ் சோதனை செய்யப்படுகிறது.
- கொடைக்கானலில் மிகப்பெரிய வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி, கொடைக்கானலுக்கு விடுமுறை நாட்கள் மற்றும் சீசன் காலங்களில் அளவுக்கு அதிகமான சுற்றுலா வாகனங்கள் வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதை தவிர்க்க கடந்த மே7-ந் தேதி முதல் செப்டம்பர் 30ந் தேதி வரை உயர் நீதிமன்ற உத்தரவுபடி இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்தும் இங்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஊட்டி, கொடைக்கானலுக்கு இ-பாஸ் பெற்ற வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி இ-பாஸ் அனுமதி குறித்து கொடைக்கானல் நகருக்குள் நுழையும் முன்பு பயணிகளிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. கியூ.ஆர். கோடு மூலம் ஸ்கேன் செய்து இ-பாஸ் பெற்ற வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள, நீண்ட சேசிஸ் வாகனங்கள் (பயணிகள் மற்றும் சரக்கு) கொடைக்கானல் மலைப்பாதையின் தொடக்கப் புள்ளியை தாண்டிச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது
பொதுநலன் கருதி மற்றும் மக்கள் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்ட இம்முடிவு வரும்18ம் தேதி முதல் அமலுக்கு வரும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
- மற்ற 6 பேர் மீதான வழக்கு விசாரணை தற்போது திண்டுக்கல் மாவட்ட பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
- ஓ.ராஜா உள்பட 3 பேர் ஆஜராகாத நிலையில் இறுதி கட்ட விசாரணை முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
திண்டுக்கல்:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்த சுப்புராஜ் மகன் நாகமுத்து (வயது 22). இவர் கைலாசபட்டியில் உள்ள கைலாசநாதர் கோவில் பூசாரியாக இருந்து வந்தார்.
கோவிலில் கடை ஒதுக்குவது தொடர்பாக இவருக்கும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பியுமான ஓ.ராஜாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 7-ந்தேதி நாகமுத்து தற்கொலை செய்து கொண்டார். இவரை தற்கொலைக்கு தூண்டியதாக கோவில் அறங்காவலராகவும், பெரியகுளம் முன்னாள் நகர்மன்ற தலைவராகவும் இருந்த ஓ.ராஜா, தென்கரை பேரூராட்சி முன்னாள் தலைவர் பாண்டி உள்பட 7 பேர் மீது பெரியகுளம் தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவுப்படி கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்த வழக்கு திண்டுக்கல் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை நடைபெற்றபோதே பாண்டி என்பவர் இறந்து விட்டார். மற்ற 6 பேர் மீதான வழக்கு விசாரணை தற்போது திண்டுக்கல் மாவட்ட பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஓ.ராஜா, மணிமாறன், சிவக்குமார், ஞானம், லோகு, சரவணன் ஆகியோர் நிபந்தனையற்ற ஜாமின் பெற்று இருப்பதால் வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராகி வருகின்றனர்.
இந்த வழக்கில் 23 சாட்சியங்கள் விசாரணை செய்யப்பட்டுள்ளனர். 4 தடயங்கள், சாட்சியங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பின் இறுதி கட்ட வாதத்துக்காக ஒத்திவைக்கப்பட்டு இருந்த இந்த வழக்கு விசாரணையின் போது 3 பேர் மட்டும் நீதிபதி முரளிதரன் முன்பு ஆஜராகினர்.
அப்போது ஓ.ராஜா உள்பட 3 பேர் ஆஜராகாத நிலையில் இறுதி கட்ட விசாரணை முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை நாளை (13-ந்தேதி) வழங்குவதாக நீதிபதி உத்தரவிட்டார். எனவே நாளை குற்றம் சாட்டப்பட்ட ஓ.ராஜா உள்பட அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.






