என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க பாடுபடுவோம்- திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி
- பெருங்காமநல்லூர் பகுதியில் உள்ள தியாகிகளுக்கு ரூ. 1 கோடியே 50 லட்சம் செலவில் மணிமண்டபத்தை உருவாக்கித்தந்தவர் எடப்பாடி பழனிசாமி ஆவார்.
- தென் மாவட்ட மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளார்.
திருமங்கலம்:
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மூக்கையாத்தேவரின் 43-வது நினைவு நாளையொட்டி உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார், கழக அமைப்பு செயலாளர்கள் செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா, எஸ்.டி.கே. ஜக்கையன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் ஆகியோர் தி.விலக்கு பகுதியிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு மூக்கையாதேவரின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினர். இதில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அப்போது திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பெருங்காமநல்லூர் பகுதியில் உள்ள தியாகிகளுக்கு ரூ. 1 கோடியே 50 லட்சம் செலவில் மணிமண்டபத்தை உருவாக்கித்தந்தவர் எடப்பாடி பழனிசாமி ஆவார்.
அதேபோல் மூக்கையா தேவரின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் 58 கால்வாய் திட்டத்திற்கு மராமத்து பணிக்காக நிதி ஒதுக்கீடு செய்து, 3 முறை சோதனை ஓட்டத்தை நடத்தியவர் எடப்பாடி பழனிசாமி. தென் மாவட்ட மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை வழங்கியுள்ளார். அவர் மீண்டும் முதலமைச்சராக அயராது பாடுபடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்