என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தருமபுரி கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
- விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் தருமபுரி உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
- விவசாயிகளிடையே விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் அமைக்க போன்ற கோரிக்கைகளை விவசாயிகள் பேசினர்.
தருமபுரி,
தருமபுரி கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் தருமபுரி உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
உதவி கலெக்டர் கீதா ராணி தலைமை தாங்கினார். கூட்டத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் குரங்குகள் நுழைந்து சேதத்தை ஏற்படுத்து கின்றன.
எனவே குரங்குகளிடம் இருந்து வேளாண் பயிர்களை காக்கும் வகை யில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேளாண் தேவைக ளுக்காக அரசு சார்பில் டிரா க்டர் உள்ளிட்ட வேளாண் பணி எந்தி ரங்கள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டு முன்னு ரிமை அடிப்படையில் விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், இதுகுறித்த தகவல் இன்னும் ஏராளமான விவசாயிகளுக்கு தெரியவில்லை. எனவே, இது தொடர்பாக விவசாயிக ளிடையே விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் அமைக்க போன்ற கோரிக்கைகளை விவசாயிகள் பேசினர்.
விவசாயிகளின் கோரி க்கைகளை கேட்ட உதவி கலெக்டர் அவற்றின் மீது நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்யப்படும் என்று கூறினார்.
இதில் வருவாய், வேளா ண்மை, தோட்டக்கலை உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அதிகாரிகள், விவசாய சங்கங்கள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்