search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அங்கன்வாடி, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு
    X

    கண்டமனூரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து கலெக்டர் முரளிதரன் ஆய்வு செய்தார்.

    அங்கன்வாடி, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு

    • கண்டமனூர் ஊராட்சியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மைய த்தில் மாவட்ட கலெக்டர் முரளிதரன் ஆய்வு மேற்கொண்டார்.
    • பதிவு செய்யாத விடுதி உரிமையாளர்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டணையும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றார்.

    தேனி:

    தேனி மாவட்டம், கடமலை-மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்கு ட்பட்ட கண்டமனூர் ஊராட்சியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மைய த்தில் மாவட்ட கலெக்டர் முரளிதரன் ஆய்வு மேற்கொ ண்டதுடன், அங்கன்வாடி மையத்தினை சுத்தமாகவும், சுகாதார மாகவும் பரா மரித்திடவும், குழந்தை களுக்கு வழங்க ப்படும் மதிய உணவினை அட்ட வணைப்படி முறையாக வழங்கிடவும் அங்கன்வாடி பணியாளர்களை அறிவுறு த்தினார்.

    அதனைத்தொடர்ந்து, கண்டமனூர், புதுராம சந்திராபுரம், வேலாயுதபுரம் ஆகிய பகுதிகளில் செய ல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி களில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் வருகை பதிவேடுகள், கழிப்பறை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    அதனைத்தொடர்ந்து, கண்டமனூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய த்தில் மருத்துவர்கள், அலு வலர்கள் மற்றும் பணியாள ர்களின் வருகை பதிவேடு, உள் நோயாளிகள் பிரிவில் உள்ள படுக்கை வசதி உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.


    தமிழ்நாடு பெண்கள் மற்றும் சிறார் தங்கும் விடுதிகள் உரிமம் பெற மாவட்ட சமூக நல அலுவல கத்திலும், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இல்லங்கள் மற்றும் அரசு, தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் செயல்படும் விதிகள் உரிமம் பெற மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலும் தொடர்பு கொள்ளலாம். பதிவு செய்யாத விடுதி உரிமையாளர்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டணையும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×