search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒட்டன்சத்திரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம்
    X

    ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஏலத்துக்காக குவித்து வைக்கப்பட்டு இருந்த தேங்காய்கள்

    ஒட்டன்சத்திரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம்

    • திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது
    • ஏலத்தில பழனி, சத்திரப்பட்டி, ஒட்டன்சத்திரம், தாராபுரம் பகுதி வியாபாரிகளும் கலந்து கொண்டனர்.

    ஒட்டன்சத்திரம் :

    திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெற்ற தேங்காய் ஏலத்தில் 7 விவசாயிகள், 2 வியாபாரிகள் கலந்து கொண்டனர். இதற்காக 44.80 குவிண்டால் தேங்காய்கள், 1.01 குவிண்டால் கொப்பரை தேங்காய் கொண்டு வரப்பட்டிருந்தது.

    மட்டை தேங்காய் கிலோ ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.7-க்கும், குறைந்தபட்சமாக ரூ.6.25- க்கும் ஏலம் போனது.

    இரண்டாம் தர கொப்பரை கிலோ ரூ.72- க்கு ஏலம் போனது. ஏலத்தில் குளிப்பட்டி, எம்.கல்லுபட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயிகளும், பழனி, சத்திரப்பட்டி, ஒட்டன்சத்திரம், தாராபுரம் பகுதி வியாபாரிகளும் கலந்து கொண்டனர்.மேலும் ஏலத்தினை திண்டுக்கல் விற்பனைக்குழுவின் செயலாளர் பழனிச்சாமி, மேலாளர் மகாலெட்சுமி, ஒட்டன்சத்திரம் விற்பனை–க்கூட கண்காணிப்பாளர் ஜோசப் அருளானந்தம், இளநிலை உதவியாளர் இந்துமதி, மண்டி ஆய்வாளர் அசோக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு நடத்தினர்.

    Next Story
    ×