search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விஷபூச்சி கடித்து குழந்தை சாவு
    X

    விஷபூச்சி கடித்து குழந்தை சாவு

    • சம்பவத்தன்று குழந்தை வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தது.
    • அப்போது குழந்தையை அடையாளம் தெரியாத விஷபூச்சி கடித்தது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள சின்னமுரசுபட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணிகன்டன். இவருக்கு 5 வயதில் சந்ரு என்ற குழந்தை உள்ளது.

    சம்பவத்தன்று குழந்தை வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தது. அப்போது குழந்தையை அடையாளம் தெரியாத விஷபூச்சி கடித்தது.

    இது குறித்து அறிந்த குழந்தையின் பெற்றோர் சந்ருவை சிகிச்சைக்காக தருமபுரி அரசு கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அப்போது மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

    இது குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×