என் மலர்
சென்னை
- வீடு, வீடாக டோக்கன் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
- தமிழக அரசு சார்பில் ரூ.6,687.51 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நேற்று அரசாணை பிறக்கப்பட்டது.
சென்னை:
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு நீள கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதனை பெற்றுக்கொள்ள வீடு, வீடாக டோக்கன் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக தமிழக அரசு ரூ.248 கோடியே 66 லட்சத்து 17 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது.
பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசாக ரேஷன் அரிசி அட்டைதாரர்கள் 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 பேருக்கு தலா ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவித்தார்.
இதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.6,687.51 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நேற்று அரசாணை பிறக்கப்பட்டது. பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.3 ஆயிரம் பணம் வழங்கும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (புதன்கிழமை) தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக சென்னை கலைவாணர் அரங்கத்தில் விழா ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
- தரமணி ஏரியா, கண்ணகம், பெரியார் நகர், திருவான்மியூர் மற்றும் இந்திரா நகர்.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (07.01.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
எம்கேபி நகர்: திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை, கலயன்புரி தெரு, மங்களபுரி, மகளிர் தொழில் பூங்கா, திருநீர்மலை மெயின் ரோடு, மைக்ரோ எஸ்டேட், பெருமாள் நகர், ஸ்ரீ கிருஷ்ணா நகர், தோஷி, காசா கிராண்ட், பாம் ரிவேரா, தரமணி ஏரியா, கண்ணகம், பெரியார் நகர், திருவான்மியூர் மற்றும் இந்திரா நகர், எம்.ஜி.ஆர். நகர், வேளச்சேரி ஏரியா, 100 அடி சாலையின் ஒரு பகுதி, அண்ணா நகர், Csir சாலை, காந்தி நகர்.
- மதுவின் அதிகபட்ச சில்லரை விலையோடு கூடுதலாக ரூ.10 வசூலித்துவிட்டு, காலி பாட்டிலை திரும்பக்கொடுக்கும் போது அந்த தொகை கொடுக்கப்படுகிறது.
- காலி மதுபாட்டில்களை பொது வெளியில் வீசி சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுப்பதாகும்.
சென்னை:
மதுப்பிரியர்கள் மது அருந்திவிட்டு போதை தலைக்கு ஏறியதும் காலி பாட்டிலை ஆங்காங்கே வீசி செல்கின்றனர். இதனால் மனிதர்கள் மட்டுமின்றி வாயில்லா ஜீவன்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின்றன. மேலும் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை டாஸ்மாக் நிர்வாகம் கடந்த ஆண்டு அமல்படுத்தியது.
முதலில் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப்பிரதேசங்களில் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தது. பின்னர் படிப்படியாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன்படி, மதுவின் அதிகபட்ச சில்லரை விலையோடு கூடுதலாக ரூ.10 வசூலித்துவிட்டு, காலி பாட்டிலை திரும்பக்கொடுக்கும் போது அந்த தொகை கொடுக்கப்படுகிறது.
இந்த சூழலில், டாஸ்மாக் நிர்வாகத்தின் அமைப்பு ரீதியாக பிரிக்கப்பட்ட சென்னை வடக்கு, தெற்கு மற்றும் மத்திய மாவட்டத்தில் இன்று முதல் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.
இதுதொடர்பாக டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
வாடிக்கையாளர்கள் மது அருந்திவிட்டு காலி மதுபாட்டில்களை பொது வெளியில் வீசுவதை தவிர்க்கும் பொருட்டு, அவற்றை மதுபானக் கடைகளிலேயே திரும்பப் பெறும் திட்டம் சென்னை வடக்கு, தெற்கு மற்றும் மத்திய மாவட்டத்தில் அமல்படுத்தப்படுகிறது.
இதன்படி, மதுபாட்டில்களை வாங்கும்போது மதுபாட்டில் ஒன்றுக்கு ரூ.10 கூடுதலாக பெற்று, மது அருந்திவிட்டு காலி மதுபாட்டில்களை திரும்ப அதே மதுபான விற்பனை கடையில் ஒப்படைக்கும்போது ஏற்கனவே செலுத்திய ரூ.10-ஐ திரும்ப பெற்றுக்கொள்ளலாம். இந்த திட்டத்தின் நோக்கம், காலி மதுபாட்டில்களை பொது வெளியில் வீசி சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுப்பதாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- எது கை கொடுக்கவில்லை என்றாலும் படிப்பு கை கொடுக்கும்
- நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை கவனிப்பது முக்கியம்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில், கல்லூரி மாணவர்களுக்கு 10 லட்சம் லேப் டாப் வழங்கும் 'உலகம் உங்கள் கையில்' நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்தார்.
இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், கல்வி நிர்வாகிகள், மணிகண்டன், விஜய் சேதுபதி, கார்த்தி உள்ளிட்ட திரைப்பட நடிகர்கள், இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை என பலர் கலந்துகொண்டனர்
இவ்விழாவில் பேசிய நடிகர் கார்த்தி, ""ஒரு மாணவன் நன்றாக படிக்கிறான் என்றால் சொத்தை விற்றாவது படிக்க வைக்க வேண்டும் என கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலம் தமிழ்நாடு. சினிமாவிற்கு செல்கிறேன் என அப்பாவிடம் சொன்னபோது, 'எது கை கொடுக்கவில்லை என்றாலும் படிப்பு கை கொடுக்கும். எனவே படி' என்றார்.
அதன் பிறகு என்ஜினியரிங்கும் மாஸ்டர்ஸ்-உம் படித்தேன். கல்விதான் பிரச்னைகளை எதிர்கொள்வதற்கு உதவுகிறது.
விஷயங்கள் தெரிந்துகொள்வதற்கு கல்வியே உதவும். நான் அமெரிக்கா சென்று படிக்கும் பொழுது, அரசு பள்ளியில் படித்தவர்கள் தான் அங்கு பெரிய பொறுப்பில் இருந்தார்கள்.
நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை கவனிப்பது முக்கியம். ஏஐ வளர்ச்சி அடையும் கட்டத்தில் அரசு மடிக்கணினி மாணவர்களுக்கு வழங்குவது மிக முக்கியமான அம்சம்.
இதை செய்த அரசுக்கு நன்றி. ஏஐ மூலம் வேலை பறிபோகும் என்கின்றனர். ஆனால் தொழில் முனைவோர் பலர், இந்தியாவில் இது வளர்ச்சியை தரும் என கூறுகின்றனர்" என்றார்" என தெரிவித்தார்.
- என்னுடைய முதல் முயற்சிகள் பலவும் வெற்றி பெற கணினி பெரிதும் உதவியது.
- அரசுக் கல்லூரி மாணவன், தனியார் கல்லூரி மாணவன் என்ற பாகுபாடு மடிக்கணினியால் உடைகிறது.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில், கல்லூரி மாணவர்களுக்கு 10 லட்சம் லேப் டாப் வழங்கும் 'உலகம் உங்கள் கையில்' நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்தார்.
இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், கல்வி நிர்வாகிகள், மணிகண்டன், விஜய் சேதுபதி, கார்த்தி உள்ளிட்ட திரைப்பட நடிகர்கள், இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை என பலர் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த நிகழ்வில் பேசிய மயில்சாமி அண்ணாதுரை, ''வருங்காலத்தில் செயற்கை அறிவாளி, இயற்கை அறிவாளி என்று நிலை வரக்கூடும். அடுத்த தலைமுறையை சரியாக படிக்க வைக்க வேண்டும்.
ஏன்? எதற்கு? எப்படி? என்ற அறிவார்ந்த கேள்விகளால் நம் மூளைக்கு உரம் சேர்க்க வேண்டும்.
சிறு மடிக்கணினி தனிப்பட்ட முறையில் என்னை வளரச் செய்துள்ளது. என்னுடைய முதல் முயற்சிகள் பலவும் வெற்றி பெற கணினி பெரிதும் உதவியது.
பணி ஓய்வுக்கு பின் பல அறிவியல் சார்ந்த துறை நிகழ்ச்சிகளிலும் கருத்தரங்குகளிலும் பங்கேற்று பேசு வருகிறேன். கட்டுரைகள் எழுது வருகிறார். இவற்றுக்கு மடிக்கணினி எனக்கு உற்ற தோழனாக உள்ளது
ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய மடிக்கணினிகள் வெறும் கருவி அல்ல, அவை மாணவர்காளை சாதிக்கச் செய்யும் சக்தி ஆகும்.
சாதி, மதம் என எதுவும் கல்விக்குத் தடையில்லை. ஆனால், மாறிவரும் கல்விச் சூழலில் தினம் தினம் புதுப்பித்துக்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
டிஜிட்டல் உலகிற்கு தடை இல்லை. மடிக்கணினி கையில் வந்தவுடன் மாணவர்கள் சர்வதேச உலகத்தோடு இணைகின்றனர். அரசுக் கல்லூரி மாணவன், தனியார் கல்லூரி மாணவன் என்ற பாகுபாடு மடிக்கணினியால் உடைகிறது.
ஏஐ தொழில்நுட்ப கல்வியை எடுத்துக்கொள்வதின் மூலம் தமிழ்நாடு அடுத்தக்கட்டத்தை நோக்கிச் செல்லும்' என்று தெரிவித்தார்.
- பயணிகள் விரைவு ரெயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் எந்த பாதிப்பும் இல்லை.
- தடம் புரண்ட ரெயில் பெட்டிகளை சீரமைக்கும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை சேத்துப்பட்டில் பயணிகள் விரைவு ரெயிலின் பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
பயணிகள் விரைவு ரெயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் எந்த பாதிப்பும் இல்லை.
பெட்டிகளை இணைப்பதற்காக சென்றபோது விபத்து ஏற்பட்டதால் பெரிய பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வழித்தடத்தில் வேறு எந்த ரெயில்களும் வராது என்பதால் போக்குவரத்து சேவையில் பாதிப்பு இல்லை என கூறப்பட்டுள்ளது.
தடம் புரண்ட ரெயில் பெட்டிகளை சீரமைக்கும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
- வாரத் தொடக்க நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
- தங்கத்திற்கு நிகராக வெள்ளி விலையும் உயர்ந்து வருகிறது.
தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் வாரத் தொடக்க நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்த நிலையில் தற்போது மீண்டும் ரூ.640 உயர்ந்துள்ளது. இதனால், இன்று ஒரோ நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1280 உயர்ந்துள்ளது.
அதன்படி, தற்போது, ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.12,760க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,02,080க்கு விற்பனை ஆகிறது.
இதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ரூ.266க்கும், கிலோவுக்கு ரூ.1000 உயர்ந்து ரூ.2.66 லட்சத்திற்கும் விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை காலையில் கிலோவுக்கு ரூ.8,000 உயர்ந்த நிலையில் தற்போது ரூ.1000 உயர்ந்து ரூ.2.66 லட்சத்திற்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை: இன்றைய நிலவரம்
ஒரு கிராம் (22 காரட்)- 12,760 (+160)
ஒரு சவரன் (22 காரட்)- ரூ.1,02,080 (+1280)
வெள்ளி விலை: இன்றைய நிலவரம்
ஒரு கிராம்- ரூ.266 (+9)
ஒரு கிலோ- ரூ.2.66 லட்சம் (+9000)
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
4-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,800
3-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,800
2-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,640
1-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,520
31-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,840
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
4-1-2026- ஒரு கிராம் ரூ.257
3-1-2026- ஒரு கிராம் ரூ.257
2-1-2026- ஒரு கிராம் ரூ.260
1-1-2026- ஒரு கிராம் ரூ.256
31-12-2025- ஒரு கிராம் ரூ.257
- ஆட்சி மாற்றம் வேண்டும் என்று எதிர்கட்சியினர் கூறுகின்றனர்.
- ஆளும் தரப்பு எங்களுடைய ஆட்சிதான் தொடரும் என்கிறார்கள்.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நிச்சியமாக வரும் 2026 தேர்தல் ஒரு மாறுபட்ட தேர்தலாக இருக்கும் என்று பல இடங்களில் நான் கூறியிருக்கிறேன். மக்கள் விரும்பிய ஒரு அணி நிச்சயம் வெற்றிப்பெறும்.அனைவருக்கும் இந்த முறை அமைச்சரவையில் அங்கம் வகிக்கவும் நிறைய வாய்ப்பு இருக்கிறது.
அதாவது ஆட்சியில் பங்கு என்கிற குரல் ஓங்கி ஒலிக்கிறது. அதற்கு சாத்தியமும் நிறைய இருக்கிறது.
கூட்டணியக்கு யார் ஏற்றுக்கொள்கிறார்கள், யார் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்கான விடை கூட்டணிகள் அமையும்போது மக்களுக்கு தெளிவாக புரியும்.
யார் ஆளுங்கட்சியோ அவர்களுக்குதான் அனைவரும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். ஏனென்றால் அவர்கள்தான் 5 ஆண்டுகள் ஆட்சி செய்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டிற்கு ஒரு வரலாறு உண்டு. 5 வருடங்களுக்கு ஒரு முறை ஆட்சிகள், காட்சிகள் மாறுகிறது. ஆனால் அதிமுக மட்டும்தான் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு ஆட்சிசெய்தது.
அதனால், ஆட்சி மாற்றம் வேண்டும் என்று எதிர்கட்சியினர் கூறுகின்றனர். ஆளும் தரப்பு எங்களுடைய ஆட்சிதான் தொடரும் என்கிறார்கள்.
"தை பிறந்தால் வழி பிறக்கும். வருகின்ற தேர்தல், தமிழ்நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் நல்லது நடக்கும் ஒரு தேர்தலாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 25 முக்கிய நிர்வாகிகள் இன்று விஜய் முன்னிலையில் த.வெ.க.-வில் இணைந்தனர்.
- உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கவில்லை என ஆதங்கம்.
நடிகர் விஜய்யின் த.வெ.க.வில் பல்வேறு கட்சிகளையும் சேர்ந்தவர்கள் இணைந்து வருகிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓ.பி.எஸ். ஆதரவு முன்னாள் எம்.எல்.ஏ. ஜெ.சி.டி.பிரபாகர் த.வெ.க.வில் இணைந்தார்.
இந்த நிலையில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க., பா.ஜ.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி 25 முக்கிய நிர்வாகிகள் இன்று விஜய் முன்னிலையில் த.வெ.க.-வில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சிக்காக நடிகர் விஜய் பகல் 1 மணியளவில் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வந்தார். அவர் முன்னிலையில் அனைவரும் த.வெ.க.-வில் இணைந்தார்கள். கட்சியில் இணைந்தவர்களுக்கு சால்வை அணிவித்து விஜய் வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் த.வெ.க. பொதுச் செயலாளர் என்.ஆனந்த் உள்பட பலர் பங்கேற்றனர்.
இன்று கட்சியில் இணைந்த பிரபலங்கள் வருமாறு:-
தஞ்சாவூர் மத்திய மாவட்ட தி.மு.க. வர்த்தகர் அணி அமைப்பாளர் சுந்தர பாண்டியன், ஒட்டன்சத்திரம் தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளர் கண்ணாயிரம், புதுச்சேரி முன்னாள் ஐ.ஜி.ராமச்சந்திரன், நடிகை ரஞ்சனா நாச்சியார், டைரக்டர் ஜெகதீச பாண்டியன், புதுவை அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பெரியசாமி, திருவள்ளூர் அ.தி.மு.க. முன்னாள் நகர்மன்ற தலைவர் பாஸ்கரன், வேலா ராமமூர்த்தி மற்றும் காங்கிரஸ், பா.ஜ.க, தே.மு.தி.க.வை சேர்ந்தவர்கள் அந்த கட்சிகளில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைந்தார்கள்.
இணைந்தவர்களில் சென்னை மாநகராட்சி 3-வது மண்டலம் 23-வது வார்டு கவுன்சிலர் ராஜனும் ஒருவர். இவர் காங்கிரசில் மாவட்ட துணைத் தலைவராக இருந்தவர். இவருக்கு கடந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கவில்லை.
இதனால் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரையும் காங்கிரஸ் கணக்கிலேயே வைத்திருந்தனர். இந்த நிலையில் 3 மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக கடிதம் கொடுத்தார். இந்த நிலையில் இன்று ராஜன் த.வெ.க.வில் இணைந்துள்ளார்.
த.வெ.க.வில் இணைந்தது குறித்து கவுன்சிலர் ராஜன் கூறும் போது," தமிழகத்தில் விஜய்யால் மட்டுமே மாற்று அரசியலை கொண்டு வர முடியும். எனவேதான் த.வெ.க.வில் இணைந்து உள்ளேன்" என்றார்.
இதேபோல் த.வெ.க.வில் இணைந்த நடிகை ரஞ்சனா நாச்சியார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போரூர் அருகே அரசு பேருந்தில் படிக்கட்டில் ஆபத்தான முறையில் தொங்கியபடி சென்ற பள்ளி மாணவர்களை தாக்கி தட்டி கேட்ட வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலாகி ஒரே நாளில் தமிழகம் முழுவதும் பிரபலமானார்.
அவரும் விஜய் முன்னிலையில் அதிகாரப்பூர்வ மாக இன்று இணைந்தார்.
த.வெ.க.வில் இணைந்தது பற்றி நடிகை ரஞ்சனா நாச்சியார் கூறியதாவது:-
நான் ராமநாதபுரம் ராஜா பாஸ்கர் சேதுபதி மகன் பாண்டி மகாராஜாவின் மூத்த பேத்தி. எங்களது மூதாதையரான வீரவேலு நாச்சியாரை த.வெ.க. கொள்கை தலைவராக அறிவித்த அன்றே த.வெ.க.-வுடன் மனப்பூர்வமாக பயணிக்க தொடங்கி விட்டேன்.
தமிழகத்தின் முதலமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் பதவி ஏற்றதும் பெண்களுக்கு முன்னுரிமை அல்ல சம உரிமை கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பெண்கள் பட்டுச்சேலை அணிந்தும், ஆண்கள் பட்டுவேட்டி, சட்டை அணிந்தும் குடும்பத்துடன் திரண்டனர்.
- மத்திய மந்திரி அமித்ஷாவும் பாரம்பரிய உடையான பட்டுவேட்டி, சட்டை அணிந்து கலந்துகொண்டார்.
திருச்சி:
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே உள்ள நிலையில் தற்போது முதலே அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. பிரதான கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி தொகுதி பங்கீடு வரை சென்றுவிட்டன.
அந்த வகையில் இந்த தேர்தலில் அ.தி.மு.க-பா.ஜ.க. வலுவான கூட்டணி அமைத்துள்ளது. தமிழக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய மந்திரி பியூஷ் கோயல் தலைமையில் இந்த கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இதற்கிடையே தமிழ்நாட்டில் பா.ஜ.க.வின் பலத்தை நிரூபிக்கும் வகையில் மத்திய மந்திரி அமித்ஷா இரண்டு நாள் பயணமாக நேற்று மாலை திருச்சி வருகை தந்தார். புதுக்கோட்டையில் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனின் தமிழகம் தலைநிமிர, தமிழனின் பயணம் என்ற பிரசார பயண நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் தி.மு.க. அரசை கடுமையாக சாடிய துடன், அதனை வரும் தேர்தலில் அகற்றவேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.
பின்னர் இரவு திருச்சி வந்த அமித்ஷா, கலெக்டர் அலுவலக சாலையில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்கினார். முன்னதாக பா.ஜ.க. மத்தியக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுத்து ஆலோசனைகளை வழங்கினார். மேலும் பா.ஜ.க.வுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் குறித்தும் அவர் விவாதித்தார்.
இரவு அதே ஓட்டலில் தங்கி ஓய்வெடுத்த மத்திய மந்திரி அமித்ஷா இன்று, ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்காவல் கோவிலுக்கு செல்ல திட்டமிட்டார். இதையடுத்து காலை 9.15 மணிக்கு ஓட்டலில் இருந்து காரில் புறப்பட்ட அவர் டி.வி.எஸ். டோல்கேட், சென்னை பைபாஸ் சாலை, பஞ்சக்கரை வழியாக முதலில் பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக திகழும் திருவானைக்காவல் கோவிலுக்கு சென்றார். அங்கு அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து அவர் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி அம்மனை பயபக்தியுடன் வழிபட்டார். பழமையான கோவில் பிரகாரங்களை வலம் வந்த அவருக்கு கோவில் புராண வரலாறு குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் மற்றும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
இதையடுத்து அங்கிருந்து புறப்பட்ட அமித்ஷா, பூலோக வைகுண்டாக போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வருகை தந்தார். தற்போது அங்க வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்று வரும் நிலையில் அமித்ஷாவுக்கு ரெங்கா, ரெங்கா கோபுரம் அருகே கோவில் நிர்வாகம் சார்பில் பட்டர்கள் மாலை அணிவித்து பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர்.
கோவிலுக்குள் சென்ற அவர் சக்கரத்தாழ்வார் சன்னதியில் வழிபட்டார். தொடர்ந்து மூலவரை மனமுருகி தரிசித்த பின்னர் தாயார் சன்னதியில் வழிபாடு நடத்தினார். அங்கும் கோவில் நிர்வாகம் சார்பில் அமித்ஷாவுக்கு நினைவுப்பரிசு மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அங்கிருந்து காரில் புறப்பட்ட அமித்ஷா திருச்சி மத்திய பேருந்து நிலையம், அரிஸ்டோ மேம்பாலம் வழியாக மன்னார்புரம் ராணுவ மைதானத்திற்கு வருகை தந்தார். அங்கு பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற நம்ம ஊரு பொங்கல் விழாவில் அமித்ஷா கலந்துகொண்டார்.
பிரதமர் மோடி ஏர் கலைப்பையை தோளில் சுமந்தவாறு கூடிய சிறிய கட்அவுட்டுடன் பிரமாண்ட மேடை, சுமார் 5 ஆயிரம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அந்த மைதானத்தில் பொங்கல் வைப்பதற்றாக 2 ஆயிரம் குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டதுடன், 1,008 பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டது.
முன்னதாக இன்று காலை முதலே விழா நடைபெற்ற மைதானத்தில் பாரம்பரியத்தை போற்றும் வகையில் பெண்கள் பட்டுச்சேலை அணிந்தும், ஆண்கள் பட்டுவேட்டி, சட்டை அணிந்தும் குடும்பத்துடன் திரண்டனர். அவர்களுக்கான இடம் ஒதுக்கப்பட்டு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. முன்னதாக செங்கரும்பு, மஞ்சள் கொத்து உள்ளிட்டவையும் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் மத்திய மந்திரி அமித்ஷாவும் பாரம்பரிய உடையான பட்டுவேட்டி, சட்டை அணிந்து கலந்துகொண்டார். பொங்கல் விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அவர் தமிழில் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி இன்று தனது 58-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இன்று காலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி நினைவிடங்களில் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
எம்.பி. கனிமொழிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
2 நாள் பயணமாக திருச்சிக்கு வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசி வாயிலாக கனிமொழிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கனிமொழிக்கு த.வெ.க. தலைவர் விஜய் தொலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
த.வெ.க.-விற்கும் தி.மு.க.-விற்கும் தான் போட்டி என்று விஜய் தொடர்ந்து கூறி வரும் நிலையில், தி.மு.க. எம்.பி. கனிமொழிக்கு, விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இருப்பது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பெண்ணுரிமைக்காகவும் தமிழ்நாட்டின் தன்னுரிமைக்காவும் பாராளுமன்றத்தில் முழங்கும் கர்ஜனை மொழி.
- கழகத் துணைப் பொதுச்செயலாளர் - பாராளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
பெண்ணுரிமைக்காகவும் தமிழ்நாட்டின் தன்னுரிமைக்காவும் பாராளுமன்றத்தில் முழங்கும் கர்ஜனை மொழி - என் பாசத்திற்குரிய தங்கை, கழகத் துணைப் பொதுச்செயலாளர் - பாராளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






