என் மலர்
சென்னை
- நேற்று தங்கம் விலையில் அதிரடி சரிவை பார்க்க முடிந்தது.
- வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.
தங்கம் விலை இப்படியே ஏறிக்கொண்டே போனால் யார் வாங்குவார்கள்? என்றெல்லாம் பேசப்பட்டது. அந்த வகையில் கடந்த 17-ந் தேதி விலை உச்சத்துக்கு சென்றது. அன்றைய தினம் ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 200-க்கும், ஒரு சவரன் ரூ.97 ஆயிரத்து 600-க்கும் விற்பனை ஆனது. தினமும் காலை, பிற்பகல் என இருவேளைகளிலும் தாறுமாறாக விலை உயர்ந்து வந்தது.
இதே வேகத்தில் சென்றால், ஒரு சவரன் ரூ.1 லட்சத்தையும் தாண்டிவிடும் என்றெல்லாம் வியாபாரிகள் சொன்னார்கள். இப்படி இருந்த சூழல் அப்படியே தலைகீழாக மாறியது. கடந்த 18-ந் தேதியில் இருந்து விலை குறைந்து கொண்டே வருகிறது. விலை ஏற்றம் ராக்கெட் வேகத்தில் இருந்த நிலையில், தற்போது விலை இறக்கம் சீட்டுக்கட்டு போல சரியத் தொடங்கியுள்ளது.
கடந்த 22-ந் தேதி ஒரே நாளில் கிராமுக்கு ரூ.460-ம், சவரனுக்கு ரூ.3 ஆயிரத்து 680-ம் குறைந்து ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்துக்கு வந்தது. அதனைத்தொடர்ந்தும் விலை கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து கொண்டே இருந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று தங்கம் விலையில் அதிரடி சரிவை பார்க்க முடிந்தது.
விலை ஏற்றம் கண்டபோது தினமும் 2 முறை உயர்ந்து காணப்பட்டதோ, அதேபோல், தற்போது விலை சறுக்கலிலும் 2 முறை சரிவை சந்தித்து வருகிறது. அந்த வகையில் நேற்று காலை கிராமுக்கு ரூ.150-ம், சவரனுக்கு ரூ.1,200-ம் குறைந்திருந்தது. பின்னர் பிற்பகலில் மேலும் கிராமுக்கு ரூ.225-ம், சவரனுக்கு ரூ.1,800-ம் சரிந்திருந்தது.
ஆக நேற்று முன்தினம் விலையை காட்டிலும், நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.375-ம், சவரனுக்கு ரூ.3 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 75-க்கும், ஒரு சவரன் ரூ.88 ஆயிரத்து 600-க்கும் விற்பனை ஆனது.
இந்நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு 135 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,210-க்கும், சவரனுக்கு 1,080 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.89,680-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.166-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 66 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
28-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 88,600
27-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 91,600
26-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 92,000
25-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 92,000
24-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 91,200
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
28-10-2025- ஒரு கிராம் ரூ.165
27-10-2025- ஒரு கிராம் ரூ.170
26-10-2025- ஒரு கிராம் ரூ.170
25-10-2025- ஒரு கிராம் ரூ.170
24-10-2025- ஒரு கிராம் ரூ.170
- வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைவதற்கு 2 வார காலம் ஆகும்.
- வெப்பசலன மழையாக இரவு அல்லது காலை நேரத்தில் தமிழ்நாட்டில் சில இடங்களில் பெய்ய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
வடகிழக்கு பருவமழை நவம்பர் மாதத்தில்தான் அதன் ஆட்டத்தை தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலேயே 2 நிகழ்வுகள் வங்கக்கடலில் உருவாகிவிட்டன. அதில் ஒன்று புயலாகவும் வலுப்பெற்று சூறாவளி புயலாக மழையை ஆந்திராவில் கொட்டியுள்ளது. பொதுவாக ஒரு புயல் கரையை கடந்ததும், பருவமழை காலங்களில் ஒரு இடைவெளி ஏற்படும்.
அந்தவகையில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைவதற்கு 2 வார காலம் ஆகும் எனவும், அதுவரை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையால் பரவலான மழைக்கு வாய்ப்பு குறைவு எனவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் அதே சமயம் மேற்கு திசை காற்றின் போக்கு காரணமாக, வெப்பம் அதிகரித்து, வெப்பசலன மழையாக இரவு அல்லது காலை நேரத்தில் தமிழ்நாட்டில் சில இடங்களில் பெய்ய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஓய்வுக்கு பிறகு, வடகிழக்கு பருவமழை அதன் சூறாவளி ஆட்டத்தை வருகிற 10-ந் தேதிக்கு பிறகு தொடங்க இருப்பதாகவும், அதன் பின்னர் வங்கக்கடலில் அடுத்தடுத்து நிகழ்வுகள் உருவாகி, பருவமழையை தீவிரப்படுத்த வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
- வங்கக்கடலில் உருவான ‘மோன்தா’ புயலாலும் மழை பெய்தது.
சென்னை:
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனிடையே வங்கக்கடலில் உருவான 'மோன்தா' புயலாலும் மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணைகள் அதன் முழு கொள்ளளவை எட்டின.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை, தேனி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
- 2708 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிப்பு.
- நவம்பர் 30ஆம் தேதிக்குள் பணி அனுபவ சான்றிதழ்களை பதிவேற்ற அவகாசம்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2708 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வரும் நவம்பர் 10ஆமி தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நவம்பர் 30ஆம் தேதிக்குள் பணி அனுபவ சான்றிதழ்களை பதிவேற்ற அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
- கட்சியின் அன்றாடப் பணிகளையும், செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க புதியதாக நிர்வாகக் குழு.
- புஸ்சி, ஆனந்த், ஆதவ் அர்ஜூனா உள்பட 28 பேர் இடம் பிடித்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் அன்றாடப் பணிகளையும், செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க அக்கட்சியின் தவைர் விஜய் புதியதாக நிர்வாகக் குழுவை அமைத்துள்ளார்.
இதில் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார், அருண்ராஜ் உள்ளிட்ட 28 பேர் இடம் பிடித்துள்ளனர்.
நிர்வாகக் குழுவில் இடம் பிடித்துள்ளவர்கள் விவரம்:-
1. N. ஆனந்த் பொதுச்செயலாளர்
2. ஆதவ் அர்ஜுனா தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர்
3. Dr. K.G. அருண்ராஜ் Ex IRS. கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர்
4. CTR. நிர்மல் குமார் இணைப் பொதுச்செயலாளர்
5. A. ராஜ்மோகன் துணைப் பொதுச்செயலாளர் பெரம்பலூர் மாவட்டம்
6. C.விஜயலட்சுமி துணைப் பொதுச்செயலாளர் நாமக்கல் மாவட்டம்
7. A.ராஜசேகர் தலைமை நிலையச் செயலாளர் கடலூர் மாவட்டம்
8. M.அருள் பிரகாசம் துணைப் பொதுச்செயலாளர் சென்னை மாவட்டம்
9. M.சிவக்குமார் மாவட்டக் கழகச் செயலாளர் அரியலூர் மாவட்டம்
10. A.பார்த்திபன் மாவட்டக் கழகச் செயலாளர் சேலம் மத்திய மாவட்டம்
11. R.விஜய் சரவணன் மாவட்டக் கழகச் செயலாளர் தஞ்சாவூர் மத்திய மாவட்டம்
12. M.சிவன் மாவட்டக் கழகச் செயலாளர் தருமபுரி மேற்கு மாவட்டம்
13. M.பாலாஜி மாவட்டக் கழகச் செயலாளர் ஈரோடு மாநகர் மாவட்டம்
14. V.சம்பத்குமார் மாவட்டக் கழகச் செயலாளர் கோவை மாநகர் மாவட்டம்
15. M.சுகுமார் மாவட்டக் கழகச் செயலாளர் நாகப்பட்டிணம் மாவட்டம்
16. S.R.தங்கப்பாண்டி மாவட்டக் கழகச் செயலாளர் மதுரை மாநகர் தெற்கு மாவட்டம்
17. K.அப்புனு (எ) வேல்முருகன் மாவட்டக் கழகச் செயலாளர் சென்னை தெற்கு (வடக்கு) மாவட்டம்
18. B. ராஜ்குமார் மாவட்டக் கழகச் செயலாளர் கடலூர் கிழக்கு மாவட்டம்
19. J.பர்வேஸ் மாவட்டக் கழகச் செயலாளர் புதுக்கோட்டை மத்திய மாவட்டம்
20. A.விஜய் அன்பன் கல்லானை மாவட்டக் கழகச் செயலாளர் மதுரை மாநகர் வடக்கு மாவட்டம்
21. R. பரணிபாலாஜி மாவட்டக் கழகச் செயலாளர் கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம்
22. V.P.மதியழகன் மாவட்டக் கழகச் செயலாளர் கரூர் மேற்கு மாவட்டம்
23. N.சதிஷ்குமார் மாவட்டக் கழகச் செயலாளர் நாமக்கல் மேற்கு மாவட்டம்
24. K. விக்னேஷ் மாவட்டக் கழகச் செயலாளர் கோவை தெற்கு மாவட்டம்
25. M.வெங்கடேஷ் மாவட்டக் கழகச் செயலாளர் ஈரோடு கிழக்கு மாவட்டம்
26. S.ராஜகோபால் மாவட்டக் கழகச் செயலாளர் திருநெல்வேலி தெற்கு மாவட்டம்
27. S. பாலசுப்பிரமணியன் கழக உறுப்பினர் தூத்துக்குடி
28. டாக்டர். N.மரிய வில்சன் கழக உறுப்பினர் சென்னை மாவட்டம்
எனது வழிகாட்டுதலின்படி இயங்கும் இந்தப் புதிய நிர்வாகக் குழுவிற்குக் கழகத்தின் பொறுப்பாளர்கள், தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என விஜய் குறிப்பிட்டுள்ளார்.
- அரசு உதவி பெறும் பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலிப்பார்கள்.
- அரசு உதவி பெறும் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் ஓராண்டிற்கு 1,200 ரூபாய் முதல் 9,000 ரூபாய் வரைதான் உள்ளது.
அதிமுக அமைப்புச் செயலாளர் கே.பி. அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
15.10.2025 தேதி நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத் தொடரில் விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசு, தமிழ் நாடு தனியார் பல்கலைக்கழகம் (திருத்த) சட்ட முன்வடிவினை சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்டபோதே, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலோடு, அதிமுக-வின் எதிர்ப்பினை பதிவு செய்தேன்.
தொடர்ந்து 17.10.2025 அன்று இந்தச் சட்ட முன்வடிவு பேரவையில் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டபோது, இந்தச் சட்ட முன்வடிவினை திரும்பப்பெற வேண்டும் என்றும், சட்டமாக இயற்றினால்
அரசு உதவிபெறும் கல்லூரிகளில் படிக்கும் ஏழை, எளிய, நடுத்தர மாணவர்களுக்கு ஏற்படும் சிரமங்கள், ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் இடஒதுக்கீடு கடைபிடிக்க முடியாமல் சமூக நீதி பாதிக்கப்படும் நிலைமை என்று உயர் கல்வியில் ஏற்படவுள்ள பல்வேறு குளறுபடிகளை விரிவாக எடுத்துக் கூறினேன்.
தமிழ்நாட்டில் 3 பொறியியல் கல்லூரிகள் அரசு உதவி பெறும் கல்லூரிகளாகவும், 163 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அரசு உதவிபெறும் கல்லூரிகளாகவும் இருக்கின்றன. அதற்குமேல் 32 பல்வகை தொழில்நுட்பக் கல்லூரிகளும் (பாலிடெக்னிக்) பல அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களாக உள்ளன.
2008-ஆம் ஆண்டு மே மாதம், கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சிக் காலத்தில், இரண்டு அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றும் சட்ட முன்வடிவு கொண்டுவரப்பட்டபோது, அதிமுக சார்பாக கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அன்றைய திமுக அரசு அந்தச் சட்ட முன்வடிவை திரும்பப் பெற்றுக்கொண்டது.
மக்களுடைய வரிப் பணத்தில் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களின் கட்டமைப்பு, கட்டிடங்கள், ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மற்றும் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு அரசு சம்பளம் வழங்கப்படுகிறது.
தற்போது இந்த சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டால், அரசு உதவி பெறும் பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலிப்பார்கள். இதனால் ஏழை, எளிய, நடுத்தர மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். பொறியியல் கல்லூரிகளில் படிக்கக்கூடிய 90 சதவீத மாணவர்களுக்கு அரசு நிர்ணயிக்கக்கூடிய குறைந்த கல்விக் கட்டணம் பறிபோய்விடும். பொறியியல் கல்லூரிகளில் 5 லட்சம் ரூபாய் முதல் 7 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும்.
அரசு உதவி பெறும் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் ஓராண்டிற்கு 1,200 ரூபாய் முதல் 9,000 ரூபாய் வரைதான் உள்ளது. ஆனால், சுயநிதி கல்லூரிகளில் பருவக் கட்டணமே 25,000/- ரூபாய் முதல்
1,00,000/- ரூபாய் வரை வசூலிக்கப்படும்.
எனவே, மக்களின் வரிப் பணத்தில் உருவான அரசு உதவி பெறும் கல்வி நிறுவனம் இன்றைக்கு, இந்த அரசு கொண்டுவர முயலும் சட்டத் திருத்தத்தினால் கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் நிறுவனங்களாக மாறும்.
அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதி பல்கலைக்கழகங்களாக மாறுவதால் மாணவர்கள் மட்டுமல்ல, பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாதவர்களும் பாதிக்கப்படுவார்கள்.
தற்போது, அனைத்து அரசு உதவிபெறும் கல்லூரிகளும் இரண்டு ஷிப்ட்-ஆக கல்லூரிகளை நடத்துகின்றனர். முதல் ஷிப்ட் அரசு உதவி பெறும் கல்லூரியாகவும், இரண்டாம் ஷிப்ட் சுயநிதி கல்லூரியாகவும் செயல்படுகின்றன.
முதல் ஷிப்ட்-ல் படிக்கும் மாணவர்களுக்கு அரசு நிர்ணயிக்கும் குறைந்த கட்டணங்களை வசூலிக்கிறார்கள். இரண்டாம் ஷிப்ட்-ல் படிக்கும் மாணவர்களிடம் இவர்கள் நிர்ணயிக்கும் அதிகப்படியான கட்டணங்களை வசூலிக்கிறார்கள். எனவே, இந்தச் சட்ட முன்வடிவை திருப்பப்பெற வேண்டும் என்று 17.10.2025 அன்று சட்டமன்றத்தில் வலியுறுத்தினோம்.
அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, அரசு பல்கலைக்கழகங்கள்தான் பட்டங்கள் வழங்குகின்றன. அவைகளுக்கு ஒரு மதிப்பு உண்டு. சுயநிதி பல்கலைக்கழகங்களாக இந்தக் கல்லூரிகள் மாற்றப்படும்போது, மாணவர்களின் தரம் குறைவதோடு, அரசு பல்கலைக்கழகங்களின் முக்கியத்துவமும் குறைகிறது.
தற்போது அரசு கல்லூரிகளில் படிக்க விரும்பும் மாணவர்கள் மண்டல அளவில் ஒரே விண்ணப்பம் மூலம் அரசு மற்றும் உதவி பெறும் கல்லூரிகளில் சேர முடியும். மேலும், விண்ணப்பப் படிவக் கட்டணம் மிகவும் குறைவு. ஆனால், இச்சட்டம் நிறைவேற்றப்பட்டால், சுயநிதி பல்கலைக்கழகங்களில் சேர விரும்புபவர்கள் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணமும் மிகமிக அதிகம். இரண்டு அல்லது மூன்று பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்தாலே ரூ. 4 ஆயிரத்திற்கும் அதிகமாக செலவிட வேண்டி வரும். மேலும், சுயநிதி பல்கலைக்கழகங்களில் இடஒதுக்கீடு என்பது ஒரு கேள்விக்குறியே ஆகும்.
தற்போது, பொது வெளியில் அதிமுக-வின் எதிர்ப்பு மற்றும் பேராசிரியர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்களின் எதிர்ப்புகளைக் கண்டு விடியா திமுக-வின் உயர்கல்வித் துறை அமைச்சர், திடீரென்று ஞானோதயம் வந்ததுபோல் இந்த சட்ட முன்வடிவை மறு ஆய்வுக்கு உட்படுத்தி திரும்பப் பெறப்படும் என்று அறிவித்துள்ளார்.
அம்மா அரசின் ஆட்சிக் காலத்தில், 2019-20 கல்வி ஆண்டிலேயே உயர் கல்வியில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் 51.4 சதவீதமாக உயர்ந்து, இந்திய அளவில் முதலிடத்தில் இருந்தது. தற்போது இந்த அரசின் குளறுபடிகளால் உயர் கல்வியில் மாணாக்கர்கள் சேர்க்கை விகிதம் 47 சதவீதமாக சரிந்துள்ளது வெட்கக்கேடானது.
விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து, கடந்த நான்கரை ஆண்டுகளாக இதுபோல் எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற பாணியில் மக்கள் விரோத சட்டங்களை நிறைவேற்ற முயற்சிப்பதும், அதிமுக உட்பட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததும் பின்வாங்கி, பின்னங்கால் பிடறியில் இடிபட புறமுதுகிட்டு ஓடுவதும் வாடிக்கையாக உள்ளது.
உதாரணமாக, தொழிலாளர்கள் வயிற்றில் அடிக்கும் வகையில் 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்றி அறிவித்தபோது, எதிர்ப்பு வந்ததும் பின்வாங்கியதையும், திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானக் கூடங்கள் நடத்த அனுமதி வழங்க முற்பட்டபோது, எதிர்ப்பு வந்ததும் அதை கைவிட்டதையும் தமிழக மக்கள் மறக்கவில்லை.
இப்படி, எந்த ஒரு திட்டத்திலும், சொல் புத்தியோ, சுய புத்தியோ இல்லாமல் தான்தோன்றித்தனமாக செயல்படும் திமுக ஆட்சியாளர்களைப் பார்த்து மக்கள் கைகொட்டி சிரிக்கிறார்கள். மக்களின் எள்ளி நகையாடுதலுக்கு உட்பட்டுள்ள இந்த ஆட்சி, முடிவுக்கு வரக்கூடிய காலம் வெகு தொலைவில் இல்லை.
இவ்வாறு கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
- வாக்குறுதிகளின் பட்டியலைத் தருவதாகவும், விவாதத்திற்கு வருவதாகவும் அமைச்சர் முத்துசாமி கூறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
- அவர் மூலமாகவே திமுக அரசின் மோசடிகள் வெளிவரட்டும்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் திமுக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டிருந்த வாக்குறுதிகளில் 85% நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும், அவை குறித்த பட்டியலை அன்புமணி ராமதாஸ்-க்கு வழங்குவதுடன், அவருடன் விவாதம் நடத்தவும் தயாராக இருப்பதாகவும் மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமி கூறியிருக்கிறார். அவரது துணிச்சலை பாராட்டுகிறேன். விவாதத்திற்கான அவரது அழைப்பை ஏற்றுக்கொள்கிறேன்.
அமைச்சர் முத்துசாமி மட்டுமல்ல., அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சிவசங்கர், கோவி செழியன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் அனைவரும் கூறுவது பொய்கள்தான் என்பதை ஒரு புள்ளி விவரத்தின் மூலம் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
திமுக அளித்த வாக்குறுதிகளில் 90% நிறைவேற்றப்பட்டது என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார். பின்னர் 95%, 98%, 99% என்றெல்லாம் அவர் கூறினார். இது குறித்த உண்மை நிலையை விளக்க வேண்டும் என்பதற்காகத்தான் விடியல் எங்கே? என்ற தலைப்பில் ஆவணம் ஒன்றை நான் தயாரித்து வெளியிட்டேன்.
அதில் 66 வாக்குறுதிகள், அதாவது 13% மட்டுமே நிறைவேற்றப்பட்டிருப்பதை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியிருந்தேன்.
அதன்பின் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சிவசங்கர், கோவி செழியன் ஆகியோர் சென்னையில் செப்டம்பர் ஒன்றாம் தேதி செய்தியாளர்களை சந்திக்கும்போது, திமுகவின் 505 வாக்குறுதிகளில் 364 வாக்குறுதிகளை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டு, அவற்றில் பல செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தனர்.
அதன்படி பார்த்தால் 72% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். அதன்பின் எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படாத நிலையில், இப்போது 85% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருக்க முடியும்? திமுக அரசின் முதலமைச்சராக இருந்தாலும், அமைச்சர்களாக இருந்தாலும் வாயில் வந்ததை கூறி விட்டு செல்கிறார்களே தவிர தரவுகளைத் தருவதில்லை.
நான் வெளியிட்ட ஆவணத்தில் நிறைவேற்றப்படாத 373 வாக்குறுதிகளையும், அரைகுறையாக நிறைவேற்றப்பட்ட 66 வாக்குறுதிகளையும் பட்டியலிட்டிருக்கிறேன். திமுக அரசு உண்மையாகவே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தால், அவற்றின் வரிசை எண் வாரியாக எந்தெந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன? அவற்றுக்காக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது? அதனால் எவ்வளவு பேர் பயனடைந்துள்ளனர்? என்ற விவரங்களை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன்.
இது குறித்து அமைச்சரோ, முதல்வரோ விவாதத்திற்கு வாருங்கள் என்றும் அறைகூவல் விடுத்திருந்தேன். ஆனால், இதுவரை அதற்கு பதில் கிடைக்கவில்லை.
இப்போது நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளின் பட்டியலைத் தருவதாகவும், விவாதத்திற்கு வருவதாகவும் அமைச்சர் முத்துசாமி கூறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவரை அழைப்பை நான் ஏற்கிறேன். அவர் மூலமாகவே திமுக அரசின் மோசடிகள் வெளிவரட்டும். எப்போது, எங்கு விவாதம் என்பதையும் அமைச்சர் முத்துசாமியே அறிவிக்கட்டும். அவரை விவாத மேடையில் சந்திக்க தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
- நியாயமான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால், ஐபிஎஸ் ஆக இருக்க தகுதியில்லை.
- வருண்குமார் மன நல ஆலோசனை பெறும் நேரம் வந்துவிட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வருண்குமார் ஐ.பி.எஸ். தொடர்ந்த வழக்கில், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் "நியாயமான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால், ஐபிஎஸ் ஆக இருக்க தகுதியில்லை. தனக்கெதிரான மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்பதால் தள்ளுபடி செய்ய வேண்டும். வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சிறை சென்றவர் வருண்குமார்.
விமர்சனங்களை தாங்கிக் கொள்ள முடியாதவர் எப்படி ஐபிஎஸ் அதிகாரி ஆனார். வருண்குமார் மன நல ஆலோசனை பெறும் நேரம் வந்துவிட்டது" என சீமான் குறிப்பிட்டுள்ளார்.
- புதிய முயற்சியுடன் இங்கிரெடிபிள் புரொடக்ஷன்ஸ்.
- புதிய முயற்சியுடன் இங்கிரெடிபிள் புரொடக்ஷன்ஸ்
'காளிதாஸ்' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இன்க்ரெடிபிள் ப்ரொடக்ஷன்ஸ் தனது அடுத்த தயாரிப்பை அறிவித்துள்ளது.
எதிர்பாராத திருப்பங்களை திரைக்கதையாய் கொண்ட இந்த சஸ்பென்ஸ் திரில்லர் படம், ஆரம்பம் முதல் முடிவு வரை பார்வையாளர்களை கவனத்தை ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது.

இத்திரைப்படத்தின் மூலம் 'நாளைய இயக்குனர்' நிகழ்ச்சியை இயக்கிய சிவநேசன் திரைப்பட இயக்குநராக அறிமுகமாகிறார்.

இப்படத்தில் கிஷோர், சார்லி, ஹார்ட் பீக் புகழ் சாருகேஷ், வினோத் கிஷன், மற்றும் ஷாலி நிவேகாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இப்படம் குறித்து இயக்குநர் கூறுகையில்," இந்த படத்தில் திரைக்கதையே ஹீரோ. ரசிகர்களை கடைசி வரை சஸ்பென்ஸில் வைத்திருக்கும் கதை இது," என தெரிவித்தார்.
- மோன்தா புயல் காரணமாக சென்னை மற்றும் அதன்சுற்று வட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
- தற்போது காற்று சற்று அதிகமாக வீசி வருவதால் கடல் சீற்றமாக காணப்படுகிறது.
வங்கக் கடலில் உருவான மோன்தா புயல் இன்று மாலை அல்லது இரவு ஆந்திர மாநிலம் கடற்கரை அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கடற்கரை பகுதிகயில் பலத்த காற்று வீசி வருகிறது. கடலும் சீற்றமாக காணப்படுகின்றன.
மோன்தா புயல் காணரமாக நேற்றில் இருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. தற்போது காற்ற சற்று வேகமாக வீசி வருகிறது.
சென்னை மெரினா அருகில் உள்ள பட்டினபாக்கம் கடற்கரை சீற்றத்துடன் காணப்படுகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் பெரும்பாலான ஏரிகள் நிரம்பியுள்ளதால், அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மோன்தா புயல் தற்போது ஆந்திராவின் மசூலிப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 100 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. காக்கிநாடாவுக்கு தென்கிழக்கே 180 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. விசாகப்பட்டினத்திற்கு தெற்கு, தென்கிழக்கே 270 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்கிறது.
- மாநகராட்சி சுரங்கப் பாதைகளில் மழை நீர் தேங்கி நிற்காமல் ஓடியதால் போக்குவரத்து சீராக இருந்தது.
- காற்று இல்லாமல் மழை பெய்து வருவதால் மரங்கள் முறிந்து விழுவதும் குறைந்தது.
சென்னை:
பருவமழை தீவிரம் அடைந்து வருவதையொட்டி சென்னையில் 2-வது நாளாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
நேற்று காலையில் வானம் இருண்டு மழை பெய்ய தொடங்கி இன்று வரை மழை பெய்து கொண்டே இருக்கிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
புயல் ஆந்திராவிற்கு திசை மாறி சென்றதால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை.
இன்று காலையில் இருந்து சிறு சிறு தூறலாக மழை பெய்து வருவதால் மழை நீர் எங்கும் தேங்கவில்லை. ஒரு சில இடங்களில் மழை நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் அந்த பகுதியில் இருந்து டிராக்டரில் பொருத்தப்பட்ட மோட்டார் பம்ப் மூலம் மழை நீர் வெளியேற்றப்பட்டது.
பட்டாளம் தட்டான்குளம், கே.எம்.கார்டன் பகுதியில் தேங்கிய மழை நீரை மோட்டார் மூலம் மாநகராட்சி ஊழியர்கள் வெளியேற்றினர். சாலைகள் சேதம் அடைந்து குண்டும் குழியுமான பகுதியில் மழை நீர் தேங்கி நின்றது.
சென்னையில் சராசரியாக 3 செ.மீ. மழை பெய்து உள்ளதால் மழை நீர் உடனடியாக வெளியேறியது. வழக்கமாக தேங்கக் கூடிய தாழ்வான பகுதிகளில் கூட 2 நாட்கள் மழையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மாநகராட்சி சுரங்கப் பாதைகளில் மழை நீர் தேங்கி நிற்காமல் ஓடியதால் போக்குவரத்து சீராக இருந்தது.
காற்று இல்லாமல் மழை பெய்து வருவதால் மரங்கள் முறிந்து விழுவதும் குறைந்தது. மின்சார தடையும் ஏற்படாமல் சீரான வினியோகம் இருந்தது. எப்போதும் தண்ணீர் தேங்கும் தாழ்வான பகுதிகளில் கூட இந்த மழையால் பாதிப்பு இல்லை. மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் மழையிலும் தங்கள் பணிகளை மேற்கொண்டனர்.
சென்னையை ஒட்டிய புறநகர் பகுதியிலும் விடிய விடிய மழை பெய்து வருகிறது. எண்ணூரில் அதிகபட்சமாக 13 செ.மீ. மழை பெய்து உள்ளது. கத்திவாக்கம் 10 செ.மீ, திருவொற்றியூர் விம்கோ நகர் 90 செ.மீ., மாதவரம், மணலி புதுநகர், மேடவாக்கம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து உள்ளது.
அதே போல பொன்னேரி அம்பத்தூர், மணலி, பேசின் பாலம், ஆவடி, பெரம்பூர், தண்டையார்பேட்டை பகுதிகளில் 7 செ.மீ. மழை பெய்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி துணை கமிஷனர் கூறும் போது, சென்னையில் சராசரியாக 3 செ.மீ. மழைதான் பெய்துள்ளது. அதனால் மழை நீர் பெரிய அளவில் எங்கும் தேங்கவில்லை. கனமழை பெய்யாததால் மழை நீர் உடனே வடிந்து விட்டது. மழையால் பாதிப்பு எதுவும் இல்லை" என்றார்.
- அபினேஷ் மற்றும் கார்த்திகா ஆகியோர் விளையாடி தங்கம் பெற பெரும் பங்கை வகித்தனர்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார்.
பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் கபடி பிரிவில் இந்தியா சார்பில் விளையாடிய ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் தங்கம் வென்றன.
இந்த இரு அணியிலும் தமிழகத்தைச் சேர்ந்த அபினேஷ் மற்றும் கார்த்திகா ஆகியோர் விளையாடி தங்கம் பெற பெரும் பங்கை வகித்தனர்.
தங்கம் வென்ற கையுடன் சென்னை வந்த இருவரையும், அந்த நொடியே நேரில் அழைத்து பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார்.
இந்நிலையில், கபடிப் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனை கார்த்திகா, இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "AsianYouthGames-ல் வெற்றி வாகை சூடிய இந்திய வீராங்கனை, சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த கார்த்திகாவை வாழ்த்தி மகிழ்ந்தேன்.
எளிய பின்னணியில் இருந்து தன்னுடைய திறமையாலும், விடாமுயற்சியாலும் கபடி விளையாட்டில் ஜொலித்து வரும் கார்த்திகா, மென்மேலும் பல வெற்றிகளைக் குவித்து, தமிழ்நாட்டிற்கும், இந்தியத் திருநாட்டிற்கும் பெருமைகளை அள்ளிக் குவிக்க வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.






