என் மலர்tooltip icon

    சென்னை

    • தீபத்தூணில் தீபம் ஏற்றியதற்கான சான்று கடந்த 100 ஆண்டு காலமாக இல்லை.
    • திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றும் வழக்கம் தமிழ்நாட்டில் கிடையாது.

    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவு குறித்து கூறியதாவது:-

    * திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஐகோர்ட் கிளை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும்.

    * உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்.

    * தீபத்தூணில் தீபம் ஏற்றியதற்கான சான்று கடந்த 100 ஆண்டு காலமாக இல்லை.

    * திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றும் வழக்கம் தமிழ்நாட்டில் கிடையாது.

    * யாரோ ஒருவர் கேட்டதற்காக தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டிருக்கிறார்கள்.

    * இல்லாத ஒரு வழக்கத்தை நீதிமன்றம் ஏன் புகுத்த வேண்டும்?

    * பிரச்சனைக்குரிய அந்த தூண் தீபத்தூண் கிடையாது என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்றார். 

    • நிதி நெருக்கடி இருந்தாலும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
    • ஒரு கோடியே 91 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

    இதனை தொடர்ந்து, அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட அம்சங்கள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது:-

    * கொரோனா தொற்றில் இருந்து தமிழக அரசு மீண்டு பொருளாதாரத்தில் இரட்டை இலக்கை எட்டியுள்ளது.

    * இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழகம் சூப்பர் ஸ்டார் மாநிலமாக உள்ளது.

    * நிதி நெருக்கடி இருந்தாலும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    * தமிழக அரசின் புதிய திட்டம் ஒன்றை பற்றி பேசுவதற்காக வந்துள்ளேன்.

    * உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின், காலை உணவு, தாயுமானவர் திட்டம் என அனைத்து திட்டங்களாலும் பெருமை.

    * மக்கள் வரியிலிருந்து கிடைக்கப்பெறும் பணத்தை கொண்டு பயனுள்ள திட்டங்களையே செயல்படுத்துகிறோம்.

    * ஒரு கோடியே 91 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    * 'உங்க கனவை சொல்லுங்கள்' என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    * ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உள்ள கனவினை தெரிந்து கொள்ளும் வகையில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    * உங்க கனவை சொல்லுங்க திட்டத்திற்காக 50,000 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

    * தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்றுஅவர்களின் கனவுகள் பற்றி ஆய்வு மேற்கொள்வார்கள்.

    * தமிழக அரசின் திட்டங்களில் எது உங்களுக்கு பயனுள்ள திட்டம்? உங்களின் கனவு என்ன? என்ற கேள்விகளை கேட்டு பதில் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

    * மேலும், இளைஞர்களின் கனவுகள் என்ன என்றும் கேட்டறிய உள்ளோம். அயலக தமிழர்களிடமும் அவர்களின் கனவுகள் குறித்து கேட்டறிய உள்ளோம்.

    * செயலி மூலம் அவர்களின் பதிலை பெற்று பதிவு செய்து கனவு அட்டை என்ற புதிய அட்டை வழங்கப்படும்.

    * உங்க கனவை சொல்லுங்க திட்டத்தின் மூலம் ஒவ்வொரு குடும்பத்தின் கனவை அறிய முயல்கிறோம்.

    * அனைவரின் கருத்துக்களை கேட்டறிந்து அதன் அடிப்படையில் எதிர்கால திட்டங்கள் தீட்டப்படும்.

    * 2030-ம் ஆண்டிற்குள் செய்ய வேண்டிய பணிகளுக்காக உங்க கனவை சொல்லுங்க திட்டம்...

    * 'உங்க கனவை சொல்லுங்க' திட்டத்தை வருகிற 9-ந்தேதி பொன்னேரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    * ஆட்சியர்கள் தலைமையில் கருத்தரங்கங்கள் நடத்தி மக்களின் கனவுகளை கேட்டறிய உள்ளதாக கூறினார். 

    • தி.மு.க. ஆட்சி மீதான புகார்கள் குறித்து முழு விசாரணை நடத்த வலியுறுத்தினோம்.
    • இளைஞர் நலன் துறையில் ரூ.500 கோடி ஊழல் நடந்துள்ளது.

    சென்னை கிண்டியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

    * 2021 முதல் தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற ஊழல் பட்டியலுடன் ஆளுநரை சந்தித்தோம்.

    * கடந்த நான்கரை ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் பல்வேறு துறைகளில் நடந்த ஊழல்கள் தொடர்பாக ஆவணங்களுடன் ஆளுநரிடம் முறையிட்டோம்.

    * ஊழல் செய்வதை தவித தி.மு.க. தமிழக மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை.

    * தி.மு.க. ஆட்சி மீதான புகார்கள் குறித்து முழு விசாரணை நடத்த வலியுறுத்தினோம்.

    * துறைவாரியாக எவ்வளவு ஊழல் நடந்தது என்பதையும் ஆளுநரிடம் அளித்துள்ளோம்.

    * தி.மு.க. அரசு எல்லா துறையிலும் ஊழல் செய்ததுடன் அதிகளவிலான கடன் சுமையில் தமிழ்நாட்டை தள்ளி உள்ளது.

    * டாஸ்மாக் துறையில் ரூ.50000 கோடி ஊழல் நடந்துள்ளது.

    * நகர்புற உள்ளாட்சி துறையில் 64,000 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது.

    * இளைஞர் நலன் துறையில் ரூ.500 கோடி ஊழல் நடந்துள்ளது.

    * கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழகத்தில் ரூ.4.5 லட்சம் கோடி அளவிற்கு ஊழல் நடந்துள்ளது.

    * ஊழல் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழக அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அப்படியே அமல்படுத்தாதது ஏமாற்றம் அளித்துள்ளது.
    • தமிழக அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் தராது.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அப்படியே அமல்படுத்தாதது ஏமாற்றம் அளித்துள்ளது. திமுக 2021 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதி எண். 309 ல் புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தது. பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது அரசு ஊழியர்களிடம் சந்தா பிடிக்காத திட்டம்.

    பங்களிப்பு ஓய்வூதியம் என்பது பணத்தைப் பிடித்துக்கொண்டு அதற்கும் வட்டி தருகிறது. அவர்களும் பங்களிப்பு செய்கிறார்கள். அதற்கும் வட்டி தருகிறார்கள். அனைத்தையும் அதாவது முதலீட்டு பணத்தை தருவதாக அமைகிறது. ஆனால் தமிழக அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் தராது.

    இந்நிலையில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் உத்தரவாத ஓய்வூதியத்தால், பழைய ஓய்வுதியத் திட்டத்தின் முழுப் பயன் கிடைக்காது என்கின்றனர். எனவே தமிழக அரசு சுமார் 6½ லட்சம் ஆசிரியர்களையும் மற்றும் அரசு ஊழியர்களையும், தேர்தல் கால வாக்குறுதியையும் கவனத்தில் கொண்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
    • முதலீட்டாளர் மாநாடு நடத்துவது, அமல்படுத்த வேண்டிய திட்டங்கள் தொடர்பாகவும் அமைச்சரவை கூட்டததில் ஆலோசனை நடைபெறுகிறது.

    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.

    இந்தாண்டின் முதல் கூட்டம் 20-ந்தேதி தொடங்க உள்ள நிலையில், ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

    மேலும் புதிய தொழில் முதலீடுகள் ஈர்ப்பது, முதலீட்டாளர் மாநாடு நடத்துவது, அமல்படுத்த வேண்டிய திட்டங்கள் தொடர்பாகவும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடைபெறுகிறது. 

    • எடப்பாடி பழனிசாமி உடன் முன்னாள் அமைச்சர்களும் ஆளுநரை சந்தித்தனர்.
    • தமிழக சட்டசபை வருகிற 20-ந்தேதி கூட உள்ள நிலையில் ஆளுநருடனான எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை அ.திமு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.

    சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சந்திப்பானது நடைபெற்று வருகிறது. எடப்பாடி பழனிசாமி உடன் முன்னாள் அமைச்சர்களும் ஆளுநரை சந்தித்தனர்.

    தமிழக அமைச்சரவை கூட்டம் மற்றும் தமிழக சட்டசபை வருகிற 20-ந்தேதி கூட உள்ள நிலையில் ஆளுநருடனான எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

    • நேற்று தங்கம் சவரனுக்கு ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 80-க்கு விற்பனை செய்யப்பட்டது.
    • வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 600-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 800-க்கும் விற்பனையானது. நேற்று காலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.12 ஆயிரத்து 680-க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1 லட்சத்து 1,440-க்கும் விற்பனை ஆனது. மாலையில் மீண்டும் தங்கம் விலை உச்சத்தை அடைந்தது. மறுபடியும் ரூ.80 உயர்ந்து கிராம் ரூ.12 ஆயிரத்து 760-க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 80-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,830-க்கும் சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 640 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

     

    தங்கத்துக்கு போட்டியாக வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. அந்த வகையில், இன்று கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 271 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    5-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.102,080

    4-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,800

    3-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,800

    2-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,640

    1-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,520

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    5-1-2026- ஒரு கிராம் ரூ.266

    4-1-2026- ஒரு கிராம் ரூ.257

    3-1-2026- ஒரு கிராம் ரூ.257

    2-1-2026- ஒரு கிராம் ரூ.260

    1-1-2026- ஒரு கிராம் ரூ.256

    • ஜனவரி 30-ந் தேதி சென்னையில் ஆளுநர் மாளிகை முன்பு முற்றுகை போராட்டம் நடைபெறும்.
    • கூட்டணி ஆட்சி என்ற டி.டி.வி. தினகரனின் கருத்தை வரவேற்கிறேன்.

    விருதுநகர்:

    விருதுநகர் வி.வி.எஸ் மண்டபத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசு 100 நாள் வேலை திட்டத்தை ரத்து செய்ததைக் கண்டித்து வருகிற 11-ந் தேதி விருதுநகர் ரெயில் நிலையம் அருகில் உள்ள காந்தி சிலை முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. இதில் நானும், சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள். வருகிற 12-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளில் உள்ள மக்களை சந்தித்து விளக்க கூட்டங்கள் நடைபெறும்.

    ஜனவரி 30-ந் தேதி சென்னையில் ஆளுநர் மாளிகை முன்பு முற்றுகை போராட்டம் நடைபெறும். பிப்ரவரி 7-ந் தேதி மேல் 15-ந் தேதி வரை மாநில அளவில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள், பேரணிகள் நடைபெறும்.

    தமிழகத்திற்கு வந்த மத்திய அமைச்சர் அமித் ஷா வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு கூடுதல் சீட்டுகள் வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர்களை மிரட்டி வருகிறார். பிரதமர் மோடியும் மத்திய அமைச்சர் அமித் ஷாவும் ஆர்.எஸ்.எஸ் குழந்தைகள். அமித் ஷா அலை பட்டிதொட்டி எல்லாம் பரவுவதாக அண்ணாமலை கூறுவது அவருக்கே நியாயமாக உள்ளதா? அமித் ஷா அலை தமிழகத்தில் எப்போதும் வீசாது.

    கூட்டணி ஆட்சி என்ற டி.டி.வி. தினகரனின் கருத்தை வரவேற்கிறேன். தேசிய அளவில் கூட்டணி ஆட்சி இருப்பது போல மாநில அளவிலும் கூட்டணி ஆட்சி அவசியம். ஆர்.எஸ்.எஸ்.-ஐ. நேருக்கு நேராக எதிர்ப்பது காங்கிரஸ் தான்.

    முடிந்துபோன ஆர்.எஸ்.எஸ். குரலை எதிரொலிக்கிறார் என என்னை பற்றி தி.மு.க., முன்னாள் எம்.பி. அப்துல்லா கூறியது கண்டிக்கத்தக்கது. அவர் மரியாதை கொடுத்து மரியாதை வாங்க வேண்டும்.

    கூட்டணி கட்சிகள் இணைந்து தான் தமிழகத்தில் ஒரு கட்சியை வெற்றி பெறச் செய்யும் நிலை உள்ளது. காங்கிரஸ் கட்சி டில்லியில் அதிகாரத்தில் பங்கு தர தயாராக உள்ளது. தமிழ கத்தில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற காங்கிரஸ் கட்சிக்கு அதிகார பகிர்வு வேண்டும் என காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரீஷ் சோடேங்கர் கூறியது போல் கூட்டணி ஆட்சி அவசியம். இதை காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகையும் ஆமோதிக்கிறார். வெற்றி பெறுவதற்கு காங்கிரஸ் கட்சியின் ஓட்டு தேவையாக உள்ள போது, எப்படி கூட்டணியில் பங்கு தராமல் இருக்கலாம்.

    இந்தியா கூட்டணியில் சி.பி.எம்.க்கு அமைச்சரவையில் இடம் வேண்டாம் என கூறினால் அது அவர்களது விருப்பம். ஆனால் எங்களுக்கு ஆட்சியில் அதிகாரம் வேண்டும். கருத்துக் கணிப்பு கூட்டணி ஆட்சியின் திசையை காட்டி உள்ளது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் தான் ஆட்சி அமைப்பார்.

    கூட்டணி பற்றி கார்கே அமைத்த குழுவினர், தி.மு.க.வுடன் நடத்திய முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிவு பெற்றுள்ளது. ராகுல் ஒரு போதும் ஆர்.எஸ்.எஸ்., உடன் சமாதானம் ஆகமாட்டார். அதனால் தான் எல்லோரும் எங்களுடன் கூட்டணி விரும்புகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு, வடமேற்கு திசையில் நகரக்கூடும்.
    • இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

    தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த கற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.

    தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடலையொட்டிய பகுதிகளில் உருவாகி இருக்கக்கூடிய குறைந்த காற்றத்தழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக இன்று அதிகாலை வலுவடைந்துள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மேலும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு, வடமேற்கு திசையில் நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென்மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • அமைச்சர்கள் தொடர்புடைய முறைகேடுகளுக்கான ஆதாரங்களை ஆளுநரிடன் எடப்பாடி பழனிசாமி வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • மணல் கொள்ளை வழக்கில் ரூ.3,000 கோடி முறைகேடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி புகார் மனு அளிக்க உள்ளார்.

    எதிர்க்கட்சி தலைவரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை 11 மணிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க உள்ளார்.

    சந்திப்பின்போது, அமைச்சர்கள் தொடர்புடைய முறைகேடுகளுக்கான ஆதாரங்களை ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    நகராட்சி நிர்வாகத்துறை ஊழல் தொடர்பாக அமைச்சர் கே.என்.நேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யாதது குறித்தும், அமைச்சர் துரைமுருகனுக்கு எதிரான மணல் கொள்ளை வழக்கில் ரூ.3,000 கோடி முறைகேடு தொடர்பாகவும் எடப்பாடி பழனிசாமி புகார் மனு அளிக்க உள்ளார். 

    • கூட்டத்தில் கவர்னர் உரை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
    • சட்டசபையில் தரவுகளுடன் பதிலளிக்கும் வகையில் கருத்துகளை எடுத்துரைப்பதற்கு அமைச்சரவையில் விவாதிக்கப்படும்.

    சென்னை:

    தமிழ்நாடு சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் வருகிற 20-ந்தேதி தொடங்குகிறது. முதல் நாள் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்துவார். சட்டசபை கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பு, முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூடி விவாதிப்பது வழக்கம்.

    அந்த வகையில் இன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த ஆண்டு முதல்முறையாக கூடும் அமைச்சரவை கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்கின்றனர்.

    இந்த கூட்டத்தில் கவர்னர் உரை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. அரசின் உரையை கவர்னர் ஏற்கனவே புறக்கணித்துள்ள நிலையில், இந்த ஆண்டு தமிழக அரசின் உரையை சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி வாசிப்பாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    மேலும் தமிழக அரசின் திட்டங்கள் மீது எதிர்க்கட்சிகள் வைத்துள்ள குறைகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு, சட்டசபையில் தரவுகளுடன் பதிலளிக்கும் வகையில் கருத்துகளை எடுத்துரைப்பதற்கு அமைச்சரவையில் விவாதிக்கப்படும்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் வெளியிட்ட உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கு இந்த அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் இடைக்கால பட்ஜெட்டில், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாகவும் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

    மேலும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்கான ஆலோசனைகளும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என்று தெரிகிறது.

    சட்டசபை தேர்தல் தேதி பிப்ரவரி மாத இறுதியில் அறிவிக்க வாய்ப்புள்ள நிலையில் இந்த அமைச்சரவை கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    • வெளிநாடுகளில் இருந்து வாங்கப்படும் நாய்கள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.
    • சென்னையில் மொத்தம் 66 ஆயிரத்து 81 வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    மக்கள் அதிகம் விரும்பி வளர்க்கக்கூடிய செல்லப்பிராணிகளில் நாய்களுக்கு எப்போதுமே முதல் இடம் தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பமானதாகவும் இருப்பதால் உள்நாடுகள் மட்டுமின்றி வெளிநாட்டு நாய் இனங்களையும் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி வளர்த்து வருகிறார்கள். வெளிநாடுகளில் இருந்து வாங்கப்படும் நாய்கள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

    குறிப்பாக, சென்னையில் உள்ள மக்கள் அதிக விலை கொடுத்தும் இதுபோன்ற வெளிநாட்டு நாய் இனங்களை வாங்கி வளர்த்து வருகிறார்கள். இதற்கிடையே, பொதுமக்களை வளர்ப்பு நாய்கள் கடிப்பது குறித்து பல்வேறு புகார்கள் எழுந்தது. இதனால், வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டது. அந்த வகையில், சென்னையில் மொத்தம் 66 ஆயிரத்து 81 வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு உரிமம் பெறப்பட்டவைகளில் எந்த வகையான நாய் இனங்களை பொதுமக்கள் அதிகம் வாங்கி வளர்க்கிறார்கள் என்ற விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 'லாப்ரடோர் ரெட்ரீவர்' என்ற வகையான நாய் இனம் முதல் இடத்தில் உள்ளது. இவை கனடாவை பூர்வீகமாக கொண்டது. அந்நாட்டு மீனவர்கள் இவ்வகை நாய்களை தங்களுக்கு உதவியாக வளர்த்து வந்தனர். இதனுடைய புத்திசாலி தனம், விசுவாசம், விளையாட்டுத் தன்மையால் பல்வேறு நாட்டவர்களும் விரும்பி வாங்கி வளர்த்து வருகிறார்கள்.

    இதற்கு அடுத்தபடியாக, திபெத்தை பூர்வீகமாக கொண்ட 'ஷிஷ் சூ' என்ற வகை நாய் இனம் உள்ளது. இதனுடைய நீண்ட முடி பார்ப்போரின் கவனத்தை ஈர்க்கும். அமைதியான குணம் என்பதால் இதை விரும்பி வாங்குகிறார்கள். அனைவராலும் அறியப்படும் 'பொமேரியன்' வகை நாய்கள் 3-வது இடத்திலும், ஸ்காட்லாந்தை பூர்வீகமாக கொண்ட 'கோல்டன் ரெட்ரீவர்' 4-வது இடத்திலும் உள்ளது.

    'ஜெர்மன் ஷெப்பர்டு' 5-வது இடத்திலும், பிரிட்டனை பூர்வீகமாக கொண்ட 'பீகில்' வகை நாய் 6-வது இடத்திலும், சீனாவை பூர்வீகமாக கொண்ட 'பக்' வகை நாய் இனம் 7-வது இடத்திலும் இருக்கிறது. இந்தியாவை பூர்வீகமாக கொண்ட 'இந்தியன் ஸ்பிட்ஸ்' 8-வது இடத்திலும், சைபீரியாவை சேர்ந்ததாக கருதப்படும் 'ஸ்பிட்ஸ்' வகை நாய்கள் 9-வது இடத்திலும், திபெத்தை சேர்ந்த 'லாசா ஆப்சோ' 10-வது இடத்திலும் இருக்கிறது. இதேபோல, தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட 'சிப்பிப்பாறை' 11-வது இடத்தில் இருக்கிறது. தேனியின் 'கோம்பை' 15-வது இடத்திலும், ராஜபாளையம் நாய் 18-வது இடத்திலும் உள்ளது.

    ×