தென் கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுவடைந்தது - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு, வடமேற்கு திசையில் நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
தென் கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுவடைந்தது - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
Published on

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த கற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடலையொட்டிய பகுதிகளில் உருவாகி இருக்கக்கூடிய குறைந்த காற்றத்தழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக இன்று அதிகாலை வலுவடைந்துள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு, வடமேற்கு திசையில் நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென்மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com