என் மலர்
சென்னை
- தேசிய அளவில் 23 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார் என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
- தேர்ச்சி பெற்றுள்ள அனைவரும், தங்கள் பல ஆண்டு கால கடின உழைப்பின் பலனைப் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டு எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:-
இன்று வெளியாகியுள்ள UPSC தேர்வு முடிவுகளில், தமிழகத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன் தேசிய அளவில் 23 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார் என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
தேர்ச்சி பெற்றுள்ள அனைவரும், தங்கள் பல ஆண்டு கால கடின உழைப்பின் பலனைப் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கும் பணியில் முன்வரிசையில் செயல்படவிருக்கும் அனைவரும், தங்கள் துறைகளில் வெகு சிறப்பாக பணிபுரிய மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
- நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 134 பேரில் 50 பேர் தேர்ச்சி.
- தமிழில் தேர்வு எழுதிய காமராஜ், தங்கபாண்டியன் ஆகிய இருவரும் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
UPSC தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த சிவச்சந்திரன் மாநில அளவில் முதலிடமும் அகில இந்திய அளவில் 23 ஆம் இடமும் பெற்றுள்ளார். இவர் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயின்றவர் ஆவார்.
இதுபற்றி சிவச்சந்திரன் கூறுகையில், "யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. தேர்வில் வெற்றிபெற நான் முதல்வன் திட்டம் உதவிகரமாக இருந்தது" என்றார்.
அதேபோல், இந்திய அளவில் 39ஆம் இடம் பிடித்த மோனிகா என்பவரும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர் ஆவார்.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 134 பேரில் 50 பேர் 2024 யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 50 பேரில் 18 பேர் முழுநேர உறைவிட பயிற்சி மேற்கொண்டவர்கள் ஆவர். மேலும் தமிழில் தேர்வு எழுதிய காமராஜ், தங்கபாண்டியன் ஆகிய இருவரும் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-
எது மகிழ்ச்சி?
நான் மட்டும் முதல்வன் அல்ல; தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் முதல்வனாக என் பிறந்தநாளில் தொடங்கி வைத்த #நான்_முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர் #UPSC தேர்வில் தமிழ்நாட்டுத் தரவரிசையில் முதல்வனாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது!
பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் இந்தத் திட்டம், வருங்காலங்களில் லட்சக்கணக்கானோரின் வாழ்வில் ஒளியேற்றிடும் என்ற நம்பிக்கை என் மகிழ்ச்சியாகியுள்ளது!
இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
- தனியார் பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா, தமிழ்நாடு பொது கட்டிட உரிம திருத்த மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல்.
- மசோதா விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கவர்னரை கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தனியார் பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா, தமிழ்நாடு பொது கட்டிட உரிம திருத்த மசோதா ஆகிய இரண்டு மசோதாக்கள் தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாக்களை தமிழக அரசு கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்திருந்தது. தற்போது இந்த இரண்டு மசோதாக்களுக்கும் கவர்னர் ஆர்.என். ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார்.
மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கவர்னர் நிலுவையில் வைத்திருப்பது சட்ட விரோதம் என ஏப்ரல் 8ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. தீர்ப்பளித்த அடுத்த நாளே இரண்டு மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.
- விவசாயிகளுக்கு இந்தாண்டில் புதிதாக 50,000 மின் இணைப்புகள் வழங்கப்படும்.
- வழுதூர் எரிவாயு மின் நிலையத்தில் வெப்ப எரிவாயு பாதை ரூ.111 கோடியில் மேம்படுத்தப்படும்.
சட்டசபையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியதாவது:
* தூத்துக்குடியில் 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் புதிய அனல்மின் நிலையம் அமைக்கப்படும்.
* கடலோர நகரங்களில் மேல்நிலை மின்கம்பிகள் புதைவடமாக மாற்றப்படும்.
* விவசாயிகளுக்கு இந்தாண்டில் புதிதாக 50,000 மின் இணைப்புகள் வழங்கப்படும்.
* தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் ரூ.215 கோடியில் புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்.
* தேரோடும் வீதிகளில் உள்ள மேல்நிலை மின்பாதைகள் ரூ.56.89 கோடியில் புதைவடங்களாக மாற்றப்படும்.
* திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள மேல்நிலை மின் பாதைகள் புதைவடங்களாக மாற்றப்படும்.
* 26 துணை மின் நிலையங்களில் ரூ.55 கோடியில் மின் மாற்றிகளின் திறன் மேம்படுத்தப்படும்.
* தூத்துக்குடி, மேட்டூர், வடசென்னை அனல் மின் நிலையங்களில் ரூ.500 கோடியில் மின் உற்பத்தி மூலதனப்பணி மேற்கொள்ளப்படும்.
* வழுதூர் எரிவாயு மின் நிலையத்தில் வெப்ப எரிவாயு பாதை ரூ.111 கோடியில் மேம்படுத்தப்படும்.
* மின்சாரத்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்த மாதம் முதல் 2 ஆயிரம் ரூபாய் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.
- 6,567 மேற்பார்வையாளர்கள், 14,636 விற்பனையாளர்கள் மற்றும் 2,426 உதவி விற்பனையாளர்கள் பயனடைவார்கள்.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் ஊதியம் உயர்த்தப் பட்டுள்ளதாக சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். இம்மாதம் 1ஆம் தேதியில் இருந்து இந்த ஊதிய உயர்வு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் 6,567 மேற்பார்வையாளர்கள், 14,636 விற்பனையாளர்கள் மற்றும் 2,426 உதவி விற்பனையாளர்கள், ஆக மொத்தம் 23,629 மதுபான சில்லறை விற்பனைக் கடைப் பணியாளர்கள் தொகுப்பூதிய முறையில் பணியாற்றி வருகிறார்கள்.
தற்போது வழங்கப்பட்டு வரும் தொகுப்பூதியம் மேற்பார்வையாளர்களுக்கு ரூபாய் 2000, விற்பனையாளர்களுக்கு
ரூபாய் 2000, மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு ரூபாய் 2000, 01.04.2025 முதல் மாதந்தோறும் உயர்த்தி வழங்கப்படும். இதற்காக ஆண்டொன்றுக்கு ரூபாய் 64.08 கோடி கூடுதல் செலவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விளையாட்டுத் துறையிலும் மாற்றுத்திறனாளிகள் சாதிக்க நம்முடைய அரசு தொடர்ந்து துணை நிற்கும்.
- போட்டியில் பங்கேற்பதற்கு முன்பே பயிற்சிக் கட்டணம், பயண கட்டணம் ஆகியவை நம்முடைய அறக்கட்டளை மூலம் நிதி உதவிகளை அளித்து வருகின்றோம்.
சென்னை:
சட்டபேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கான பணி நியமனம் தொடர்பான கேள்விக்கு அளித்த பதில் விவரம் வருமாறு:-
கடந்த ஆண்டு சட்டமன்றப் பேரவையில் நான் பேசும்போது, நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்பேரில் மாற்றுத்திறனாளி வீரர்கள் உட்பட 100 விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தேன்.
அதன்படி பொதுத்துறை நிறுவனங்களிலும், அரசுத்துறைகளிலும் 104 வீரர்களுக்கு சென்ற ஆண்டு மட்டும் வேலைவாய்ப்பு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி இருக்கிறார்.
அதேபோல இந்த ஆண்டும் முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி மேலும் 100 விளையாட்டு வீரர்களுக்கு கண்டிப்பாக 3 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் அரசு மற்றும் பொதுத்துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
மற்ற துறைகளைப் போலவே, விளையாட்டுத் துறையிலும் மாற்றுத்திறனாளிகள் சாதிக்க நம்முடைய அரசு தொடர்ந்து துணை நிற்கும். போட்டியில் பங்கேற்பதற்கு முன்பே பயிற்சிக் கட்டணம், பயண கட்டணம் ஆகியவை நம்முடைய அறக்கட்டளை மூலம் நிதி உதவிகளை அளித்து வருகின்றோம்.
மற்ற வீரர்களுக்கு இணையாக மாற்றுத்திறனாளி வீரர்களுக்கும் பணி நியமன ஆணைகளை வழங்கி வருகின்றோம். இதுவரை இந்த 104 நபர்களுக்கு கொடுத்திருக்கிறோம். அதில் 5 மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு அரசுத்துறை மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
- நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை :
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
இதனால் இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
24-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று முதல் 26-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. எனினும், ஓரிரு இடங்களில் சற்று உயரக்கூடும்.
இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:
இன்று மற்றும் நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
24-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
22-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
- சென்னை அணி அடுத்த ஆட்டத்தில் ஐதராபாத் அணியுடன் வரும் 25ம் தேதி மோதுகிறது.
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலேயே நீடிக்கிறது.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்ற 8 போட்டிகளில் 2 வெற்றி, 6 தோல்வி பெற்றுள்ளது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலேயே நீடிக்கிறது.
புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (4 புள்ளி), எஞ்சிய 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் (16 புள்ளி) மட்டுமே பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். ஒரு வேளை 5ல் மட்டும் வென்றால் (14), மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.
சென்னை அணி அடுத்த ஆட்டத்தில் ஐதராபாத் அணியுடன் வரும் 25ம் தேதி மோதுகிறது.
இந்நிலையில், சி.எஸ்.கே அணி நிச்சயம் மீண்டு வரும் என்று அந்த அணியின் சி.இ.ஓ. காசி விஸ்வநாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் இளம் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்சியில் பேசிய காசி விஸ்வநாதன், "நடப்பு சீசனில் சி.எஸ்.கே. அணியின் ஆட்டத்தால் நீங்கள் அதிருப்தியாக இருப்பீர்கள். ஆனால் விளையாட்டில் இது சகஜம். இப்போது நன்றாக விளையாடவில்லை என்பது உண்மைதான். நிச்சயம் மீண்டு வருவோம். வரும் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதில் எங்கள் பாய்ஸ் உறுதியாக உள்ளனர்" என்று தெரிவித்தார்.
- ஊட்டியில் வரும் 25, 26-ந்தேதிகளில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது.
- பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டை துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தொடங்கி வைக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் வரும் 25, 26-ந்தேதிகளில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது.
இந்த நிலையில் ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
துணைவேந்தர்கள் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பங்கேற்கிறார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெறும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டை துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தொடங்கி வைக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நீலகிரியில் துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்த உள்ள நிலையில், இந்த மாநாட்டிற்கு அரசியல் தலைவர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த மாநாட்டை தமிழ்நாடு அரசு சட்டப்பூர்வமாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
- சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும்
- சென்னை உயர்நீதிமன்றம் 2018ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தவில்லை.
தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு, நிரந்தர செவிலியர்களுக்குவழங்கப்படும் இணையாக ஊதியம் வழங்கப்பட வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நிரந்தர செவிலியர்களின் பணியுடன், தொகுப்பூதிய செவிலியர்கள் செய்யும் பணியை ஒப்பீடு செய்து 6 மாதத்தில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவது தொடர்பாக முடிவெடுக்க வேண்டும் என 2018 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் 2018ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தவில்லை என்று என்று செவிலியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தொகுப்பூதிய செவிலியர்களுக்கு, நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்குவது தொடர்பாக கடந்த 2018ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை 3 மாதங்களில் அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு செவிலியர்கள் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது.
இந்த உத்தரவை அமல்படுத்தாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- கோவையில் 27-ந் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது.
- 26 மற்றும் 27-தேதிகளில் தமிழக வெற்றிக் கழக வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு.
கோவை:
கோவை செட்டிப்பாளையம் பகுதியில் வருகிற 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. இந்த போட்டியை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
தொடர்ந்து வனத்துறை அலுவலகத்தில் நடக்கும் விழாவில் பெத்திக்குட்டை வனவிலங்குகள் மறுவாழ்வு மைய கட்டிடத்தை தொடங்கி வைத்து வனத்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ள நவீன ஆயுதங்களை பார்வையிடுகிறார்.
மாலையில் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பள்ளி மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். தொடர்ந்து சர்வதேச தரத்திலான ஆக்கி மைதானம் அமைக்கும் பணியையும் தொடங்கிவைக்கிறார்.
இந்த விழாக்களில் பங்கேற்பதற்காக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 26-ந் தேதி மாலையே கோவை வருகிறார். அவருக்கு தி.மு.க. நிர்வாகிகள் திரண்டு உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.
கனிமொழி
இதேபோல தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி.யும் கோவை வருகை தர உள் ளார். தி.மு.க. மகளிர் அணி சார்பில் வருகிற 25-ந் தேதி மாலை கணியூர் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் கருத்தரங்கு நடக்கிறது.
இந்த கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. பங்கேற்று பேசுகிறார். கோவை வருகை தரும் கனிமொழி எம்.பி.க்கும் உற்சாக வரவேற்பு அளிக்க தி.மு.க. நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
விஜய் கட்சி மாநாடு
இதற்கிடையே தமிழக வெற்றிக்கழக வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள எஸ்.என்.எஸ். கல்லூரியில் வருகிற 26 மற்றும் 27-ந் தேதிகளில் நடக்கிறது. 2 நாள் மாநாட்டிலும் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் பங்கேற்று பேச உள்ளார். இதற்காக அவர் 26-ந் தேதி கோவை வருகை தர உள்ளார்.
கட்சித் தொடங்கிய பிறகு முதன்முறையாக விஜய் கோவை வருவதால் அவருக்கும் உற்சாக வர வேற்பு அளிக்க தமிழக வெற்றிக்கழகத்தினர் தட புடல் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
இவ்வாறு அரசியல் பிரமுகர்கள் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி., விஜய் ஆகியோர் அடுத்தடுத்த நாட்களில் கோவை வருவது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவர்கள் வருகையை முன்னிட்டு கோவையில் பலத்த போலீஸ் பலப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை மாநகர் மற்றும் மாவட்ட போலீசார் உஷார்படுத்தப்பட்டு பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
- ஒரு நபரின் சமூகத்தைக் குறிப்பிடும்போது எழுத்துப் பிழைகள் இல்லாமல் இருக்க வேண்டும்.
- சாதி சான்றிதழ்களில் எழுத்து பிழைகள் இல்லாமல் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
இசை வேளாளர் சாதிச் சான்றிதழ்களை இசை வெள்ளாளர் எனத் தவறான பெயரில் வழங்கப்பட்டு வருவதாக இசை வேளாளர் இளைஞர் கூட்டமைப்பின் நிறுவனர் குகேஷ் சென்னை ஐகோட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், தன் மகளுக்குச் சாதிச் சான்றிதழ் கோரி மாம்பலம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தபோது இசை வேளாளர் என்பதை இசை வெள்ளாளர் எனக் குறிப்பிட்டுச் சாதிச் சான்று வழங்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த ஐகோர்ட்,
* ஒரு நபரின் சமூகத்தைக் குறிப்பிடும்போது எழுத்துப் பிழைகள் இல்லாமல் இருக்க வேண்டும்.
* தமிழ், ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக எழுத்துப்பிழை இன்றி சாதி சான்றிதழ்கள் இருக்க வேண்டும்.
* சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ், ஆங்கிலத்தில் வேறு வேறாக இருக்கக்கூடாது.
* சாதி சான்றிதழ்களில் எழுத்து பிழைகள் இல்லாமல் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
மேலும் மனுதாரரின் மகளுக்கு வழங்கப்பட்ட சாதி சான்றிதழ்களில் உள்ள எழுத்துப் பிழைகளை சரி செய்து கொடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார்.






