என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kasi viswanathan"

    • விளையாட்டுல வெற்றி, தோல்வி எல்லாருக்கும் இருக்கும்.
    • மீதமுள்ள போட்டிகளில் சிறப்பாக விளையாடுவார்கள்.

    2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் 8 போட்டிகளில் 6 தோல்விகளைச் சந்தித்துள்ளது. அந்த அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பு மிகவும் சிக்கலானதாக உள்ளது.

    இந்நிலையில் 2010-ல் இதேபோல தொடர் தோல்விகளை சந்தித்து இறுதியில் கோப்பையை வென்றோம் என சிஎஸ்கே அணியின் CEO காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    தோல்விக்கு காரணமே கிடையாது சார். இது Game. விளையாட்டுல வெற்றி, தோல்வி எல்லாருக்கும் இருக்கும். வெற்றி பெறும்போது பாராட்டுறீங்க. தோற்றுவிட்டால் நல்லா பண்ணலனு சொல்றீங்க. சரியா ஆடல என்பது உண்மைதான்.

    அதை சரி செய்ய முயற்சி பண்ணிட்டு இருக்கோம். 2010-ல் இதேபோல தொடர் தோல்விகளை சந்தித்து இறுதியில் கோப்பையை வென்றோம். அதனால், மீதமுள்ள போட்டிகளில் சிறப்பாக விளையாடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    என காசிவிஸ்வநாதன் கூறினார்.

    • சென்னை அணி அடுத்த ஆட்டத்தில் ஐதராபாத் அணியுடன் வரும் 25ம் தேதி மோதுகிறது.
    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலேயே நீடிக்கிறது.

    நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்ற 8 போட்டிகளில் 2 வெற்றி, 6 தோல்வி பெற்றுள்ளது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலேயே நீடிக்கிறது.

    புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (4 புள்ளி), எஞ்சிய 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் (16 புள்ளி) மட்டுமே பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். ஒரு வேளை 5ல் மட்டும் வென்றால் (14), மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.

    சென்னை அணி அடுத்த ஆட்டத்தில் ஐதராபாத் அணியுடன் வரும் 25ம் தேதி மோதுகிறது.

    இந்நிலையில், சி.எஸ்.கே அணி நிச்சயம் மீண்டு வரும் என்று அந்த அணியின் சி.இ.ஓ. காசி விஸ்வநாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு விளையாட்டு பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் இளம் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்சியில் பேசிய காசி விஸ்வநாதன், "நடப்பு சீசனில் சி.எஸ்.கே. அணியின் ஆட்டத்தால் நீங்கள் அதிருப்தியாக இருப்பீர்கள். ஆனால் விளையாட்டில் இது சகஜம். இப்போது நன்றாக விளையாடவில்லை என்பது உண்மைதான். நிச்சயம் மீண்டு வருவோம். வரும் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதில் எங்கள் பாய்ஸ் உறுதியாக உள்ளனர்" என்று தெரிவித்தார். 

    • டெல்லி அணிக்கு எதிரான போட்டி முடிந்த பிறகு மைதானத்தில் நான் டோனி, ஜடேஜாவுடன் பேசினேன்.
    • ஜடேஜா எப்போதும் டோனி மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார்.

    புதுடெல்லி:

    சமீபத்தில் நடந்த 16-வது ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது. 5-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை வென்று மும்பையின் சாதனையை சமன் செய்தது.

    சி.எஸ்.கே. கோப்பையை வெல்ல ஜடேஜா முக்கிய பங்கு வகித்தார். அவர் கடைசி 2 பந்தில் சிக்சர், பவுண்டரி அடித்தார்.

    15-வது ஐ.பி.எல். சீச னில் ஜடேஜா கேப்டனாக இருக்க டோனி தானாகவே வழிவிட்டார். நடுவில் டோனி கேப்டனாக பொறுப்பேற்றார். இதுதொடர்பாக ஜடேஜாவுக்கும், சி.எஸ்.கே. நிர்வாகத்துக்கும் இடையே பிரச்சினை இருப்பதாக தகவல் வெளியானது.

    இந்த சீசனில் டோனிக்கும், ஜடேஜாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. மேலும் டோனிக்காக ஜடேஜா ஆட்டம் இழக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோஷமிட்டதால் அவர் வருத்தம் அடைந்தார். டுவிட்டர் பக்கத்தில் இதை அவர் வெளிப்படையாக தெரிவித்தார்.

    இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் விளக்கம் அளித்து உள்ளார். டோனி மீது ஜடேஜா எப்போதும் மிகுந்த மரியாதை வைத்துள்ளார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஜடேஜாவை பொறுத்தவரை அவர் மிக சிறப்பாக பந்துவீசினார். பேட்டிங்கில் முன்னனி பேட்ஸ்மேன்கள் விளையாடி முடிக்கும்போது அவருக்கு குறைந்த பந்துகள் மட்டுமே கிடைக்க வாய்ப்பு இருந்தது.

    ஜடேஜாவுக்கு அடுத்து டோனி வருவார் என்று அவருக்கு தெரியும். ரசிகர்கள் டோனி மீது கொண்ட அன்பின் காரணமாக அவர் ஆட்டம் இழக்க வேண்டும் என்று பதாகை வைத்து இருக்கலாம். இது ஜடேஜாவை புண்படுத்தி இருக்கலாம். இதுகுறித்து அவர் டுவிட் செய்து இருந்தாலும் கூட எங்களிடம் எதையும் புகாராக தெரிவிக்கவில்லை.

    டெல்லி அணிக்கு எதிரான போட்டி முடிந்த பிறகு மைதானத்தில் நான் டோனி, ஜடேஜாவுடன் பேசினேன். வழக்கமான விஷயங்கள் தான் பேசினோம். தனிப்பட்ட முறையில் அங்கு எதுவும் பேசவில்லை.

    ஜடேஜா எப்போதும் டோனி மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார். ஐ.பி.எல். கோப்பை வெற்றியை டோனிக்கு அர்ப்பணிப்பதாக கூறியதில் இருந்தே நாம் இதை புரிந்து கொள்ள முடியும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
    • சி.எஸ்.கே. கேப்டனாக எம்.எஸ். டோனி இருந்து வந்தார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடர் நாளை (மார்ச் 22) துவங்குகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிரமாண்ட துவக்க விழாவை தொடர்ந்து, இந்த சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

    இந்த நிலையில், சி.எஸ்.கே. அணியின் கேப்டன் பொறுப்பை எம்.எஸ். டோனி ருதுராஜ் கெய்க்வாட்-இடம் ஒப்படைப்பதாக அணி நிர்வாகம் அறிவித்தது. இந்த அறிவிப்பு டோனி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஐ.பி.எல்.-இல் சென்னை அணி துவங்கப்பட்டதில் இருந்தே சி.எஸ்.கே. கேப்டனாக எம்.எஸ். டோனி செயல்பட்டு வந்தார்.

     


    இடையில், ஒரு சீசனில் ரவீந்திர ஜடேஜா சிறிது காலம் கேப்டனாக செயல்பட்டார். எனினும், எம்.எஸ். டோனி அதே சீசனில் சென்னை அணியை வழிநடத்த துவங்கினார். தற்போது சென்னை அணிக்கு புதிய கேப்டன் அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், கேப்டன் மாறப்போகும் தகவல் தனக்கே தாமதமாகத் தான் தெரியும் என சி.எஸ்.கே. அணியின் சி.இ.ஒ. தெரிவித்துள்ளார்.

    2024 ஐ.பி.எல். தொடரின் கேப்டன்கள் பங்கேற்கும் போட்டோஷூட் சமீபத்தில் நடைபெற்றது. அந்த வகையில், போட்டோஷூட் துவங்க சிறிது நேரம் இருக்கும் போது தான், சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் செயல்படுவார் என்ற தகவல் தனக்கு தெரிவிக்கப்பட்டது என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

    • அமெரிக்காவில் காசிக்கு ஹால் ஆஃப் ஃபேம் என்ற விருது வழங்கப்பட்டது.
    • அவருக்கு சிஎஸ்கே வீரர்கள் உள்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

    தமிழ்நாடு கிரிக்கெட் அகாடமியின் முன்னாள் செயலாளர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாக அதிகாரி கல்லிடைக்குறிச்சி எஸ் விஸ்வநாதன் என்ற காசியை பாராட்டி, அமெரிக்காவில் உள்ள ஹார்ட்போர்ட் நகரில் நடைபெற்ற விழாவில் அவருக்கு ஹால் ஆஃப் ஃபேம் என்ற விருது வழங்கப்பட்டது.

    கிரிக்கெட்டில் மிகப்பெரிய இடத்தை தக்கவைத்த காசிக்கு, பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டது. இந்த விஷயம் குறித்த தகவலை, தமிழ்நாடு கிரிக்கெட் அகாடமி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து பாராட்டுகளை தெரிவித்துள்ளது.

    இதேபோல சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் உள்பட பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அது குறித்த வீடியோ தொகுப்பை சிஎஸ்கே அணி, தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில் சிஎஸ்கே வீரர்கள் ஜடேஜா தமிழில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    மேலும் ருதுராஜ், அஸ்வின், தமிழக வீரர் தினேஷ் கார்த்திக், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் பிளெமிங் ஆகியோர் இந்த வீடியோ மூலம் காசியை பாராட்டி உள்ளனர்.

    இந்த வீடியோ முடிவில் ஜடேஜா, காசி சார் சீக்கிரம் சென்னையில் பார்ப்போம் என தமிழில் கூறியது சிஎஸ்கே ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஜடேஜா பேசும் தமிழ் அருமையாக உள்ளது எனவும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    ×