என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மின் வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செந்தில்பாலாஜி
- விவசாயிகளுக்கு இந்தாண்டில் புதிதாக 50,000 மின் இணைப்புகள் வழங்கப்படும்.
- வழுதூர் எரிவாயு மின் நிலையத்தில் வெப்ப எரிவாயு பாதை ரூ.111 கோடியில் மேம்படுத்தப்படும்.
சட்டசபையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியதாவது:
* தூத்துக்குடியில் 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் புதிய அனல்மின் நிலையம் அமைக்கப்படும்.
* கடலோர நகரங்களில் மேல்நிலை மின்கம்பிகள் புதைவடமாக மாற்றப்படும்.
* விவசாயிகளுக்கு இந்தாண்டில் புதிதாக 50,000 மின் இணைப்புகள் வழங்கப்படும்.
* தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் ரூ.215 கோடியில் புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்.
* தேரோடும் வீதிகளில் உள்ள மேல்நிலை மின்பாதைகள் ரூ.56.89 கோடியில் புதைவடங்களாக மாற்றப்படும்.
* திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள மேல்நிலை மின் பாதைகள் புதைவடங்களாக மாற்றப்படும்.
* 26 துணை மின் நிலையங்களில் ரூ.55 கோடியில் மின் மாற்றிகளின் திறன் மேம்படுத்தப்படும்.
* தூத்துக்குடி, மேட்டூர், வடசென்னை அனல் மின் நிலையங்களில் ரூ.500 கோடியில் மின் உற்பத்தி மூலதனப்பணி மேற்கொள்ளப்படும்.
* வழுதூர் எரிவாயு மின் நிலையத்தில் வெப்ப எரிவாயு பாதை ரூ.111 கோடியில் மேம்படுத்தப்படும்.
* மின்சாரத்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.






