என் மலர்tooltip icon

    சென்னை

    • ஆக்குதல் அன்னையரின் பணி என்றால், அன்பாக வளர்ப்பது தந்தையரின் திருப்பணி.
    • தந்தையர் நாளில் மட்டுமின்றி எல்லா நாளும் தந்தையரை வணங்குவோம்!

    ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. தந்தையர் மற்றும் தந்தையர்களை போற்றும் வகையில் தந்தையர் தினம் உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது.

    தந்தையர் தினத்தையொட்டி பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கு அன்புமணி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தியாக தீபங்களான தந்தையரை எல்லா நாளும் வணங்குவோம்!

    தந்தையர் எப்போதும் தியாக தீபங்கள் தான்.

    ஆக்குதல் அன்னையரின் பணி என்றால்,

    அன்பாக வளர்ப்பது தந்தையரின் திருப்பணி.

    தந்தையர் நாளில் மட்டுமின்றி எல்லா நாளும் தந்தையரை வணங்குவோம்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நீங்க எப்பவும் எனக்கு ஒரு இடத்தை புன்னகையோடு கொடுத்தீர்கள்.
    • சிரிப்பு, அரவணைப்பு, அக்கறை, அப்பா, தலைவர், நண்பர், வழிகாட்டி, சித்தாந்தவாதியை நான் ரொம்ப மிஸ் பண்றேன்.

    ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. தந்தையர் மற்றும் தந்தையர்களை போற்றும் வகையில் தந்தையர் தினம் உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது.

    தந்தையர் தினத்தையொட்டி தி.மு.க. எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    நீங்கள் எப்போதும் என்னை சிரிக்க வைக்கக்கூடிய மனிதர். நீங்கள் மிகவும் புத்திசாலியான மனிதர். நீங்க எப்பவும் எனக்கு ஒரு இடத்தை புன்னகையோடு கொடுத்தீர்கள்.

    ஒரு தந்தையால் மட்டுமே ஒரு மகளை பராமரிக்க முடியும் என்பது போல நீங்கள் எப்போதும் என் மீது அக்கறை கொண்டிருந்தீர்கள். என் துணிச்சலை பாராட்டி உள்ளீர்கள்.

    நான் ரொம்ப வலிமையானவன்னு நீங்க எப்பவும் குறை சொல்லுவீங்க, ஆனா அதுக்கும் நீங்கதான் காரணம்னு உங்களுக்குத் தெரியுமா?

    சிரிப்பு, அரவணைப்பு, அக்கறை, அப்பா, தலைவர், நண்பர், வழிகாட்டி, சித்தாந்தவாதியை நான் ரொம்ப மிஸ் பண்றேன். பாடங்களுக்கும் நினைவுகளுக்கும் நன்றி என்று தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார்.

    • இந்தி பிரசார சபா நடத்தும் 8 நிலை தேர்வுகளை கடந்த ஆண்டு, 3.50 லட்சம் பேர் எழுதினர்.
    • சென்னை, மதுரை, திருச்சி, கோவை இடங்களில் இருந்து அதிகமானவர்கள் இந்தி தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை (தமிழ், ஆங்கிலம்) பின்பற்றப்பட்டு வருகிறது. இந்தி திணிப்புக்கு கடும் எதிர்ப்பு இருந்த நிலையிலும், விருப்பப்பட்டு படிப்பவர்களுக்கு தமிழ்நாட்டில் தடை ஏதுமில்லை. 3-வது மொழியான இந்தியை தமிழகத்தில் படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.

    இந்தி பிரசார சபா நடத்தும் 8 நிலை தேர்வுகளை கடந்த ஆண்டு, 3.50 லட்சம் பேர் எழுதினர். ஆந்திராவில் 1.15 லட்சம் பேரும், கர்நாடகம், கேரளாவில் 25 ஆயிரம் பேரும் இந்தி தேர்வை எழுதினர். தென் மாநிலங்களில் தமிழகத்தில் தான் அதிகமானவர்கள் தேர்வு எழுதியிருந்தனர்.

    தற்போது, ஜூலை, ஆகஸ்டில் நடக்கும் தேர்வுக்கு தற்போது வரை 3.75 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    சென்னை, மதுரை, திருச்சி, கோவை இடங்களில் இருந்து அதிகமானவர்கள் இந்தி தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு த.வெ.க. சார்பில் 2025-ம் ஆண்டுக்கான கல்வி விருது, பரிசளிப்பு நடத்தப்பட்டு வருகிறது.
    • புதுச்சேரியில் உள்ள 19 சட்டசபை தொகுதிகளை கொண்ட மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

    10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு த.வெ.க. சார்பில் 2025-ம் ஆண்டுக்கான கல்வி விருது, பரிசளிப்பு நடத்தப்பட்டு வருகிறது.

    2025-ம் ஆண்டுக்கான கல்வி விருது வழங்கும் விழா ஏற்கனவே 3 கட்டங்களாக மாமல்லபுரத்தில் நடந்தது. கடந்த மாதம் 30-ந் தேதி நடந்த முதற்கட்ட பரிசளிப்பு விழாவில் 88 தொகுதி மாணவ, மாணவிகளுக்கும், கடந்த 4-ந்தேதி 2-ம் கட்டமாக 84 தொகுதிகளை சேர்ந்தவர்களுக்கும், நேற்று முன்தினம் 32 சட்டசபை தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள 19 சட்டசபை தொகுதிகளை கொண்ட மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

    இந்த நிலையில் மாணவர்களுக்கு த.வெ.க. விருது வழங்கும் நிகழ்ச்சியின் 4-வது நிறைவு கட்ட விழா இன்று நடைபெறுகிறது.

    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மாமல்லபுரம் தனியார் ஓட்டலில் இன்று மாணவர்களுக்கான 4-ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. இன்று 39 சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்கின்றனர். த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்று மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கத்தொகை வழங்கி கவுரவிக்கிறார்.

    • ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.
    • தந்தையாக நவீனத் தமிழ்நாட்டைச் செதுக்கிய தலைவர்!

    ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. தந்தையர் மற்றும் தந்தையர்களை போற்றும் வகையில் தந்தையர் தினம் உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது.

    அந்த வகையில் தந்தையர் தினமான இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தலைவராக வழிகாட்டிய தந்தை! தந்தையாக நவீனத் தமிழ்நாட்டைச் செதுக்கிய தலைவர்!

    என்று பதிவிட்டு தனது தந்தை கலைஞர் மு.கருணாநிதியுடன் அவர் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

    • ஈரானும் இஸ்ரேல் மீது கடும் தாக்குதல் நடத்தி வருகிறது.
    • இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

    சென்னை:

    ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரான் ராணுவ நிலைகள்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலை தவிர்ப்பதற்கான முன்கூட்டிய தாக்குதல் இது என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்தார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானும் இஸ்ரேல் மீது கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

    இந்நிலையில், கவிஞர் வைரமுத்து சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது:

    இதோ

    இன்னுமொரு

    யுத்தம் தாங்குமா?

    மண்டை உடைந்துவிடும்

    மண்ணுருண்டை,

    இஸ்ரேல் காசா

    சாவுச் சத்தம் அடங்குவதற்குள்,

    ரஷ்யா உக்ரைன்

    ரத்தச் சகதி காய்வதற்குள்,

    இஸ்ரேல் ஈரான்

    தொடங்கிவிட்டது.

    சொல்பேச்சுக் கேட்காத

    இரு நாடுகளால்

    உலகத்தைச் சூழ்ந்திருக்கின்றன

    அச்சத்தின் கடலலைகள்.

    போர்ச் சங்கிலி என்பது

    உலகைப் பிணைத்திருக்கிறது.

    இஸ்ரேல் யுத்தம்

    மதுரை மல்லிகையில் புகையடிக்கிறது.

    ஈரான் யுத்தம்

    ஈரோட்டின் மஞ்சளைக் கரியாக்குகிறது.

    மில்லி மீட்டர்களில் ஏறும் பொருளாதாரம்,

    மீட்டர் மீட்டராய்ச் சரிகிறது.

    போர் வேண்டாம், புன்னகை வேண்டும்.

    யுத்தமில்லாத பூமி -

    ஒரு சத்தமில்லாமல் வேண்டும்

    என பதிவிட்டுள்ளார்.

    • வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவரும் எதிர்காலத்தில் தலைசிறந்த மருத்துவர்களாக மக்கள் சேவையில் சிறந்து விளங்க வாழ்த்து.
    • இம்முறை வெற்றி வாய்ப்பைத் தவற விட்டவர்கள் மனம் தளராது மீண்டும் முயற்சிக்கவும் வாழ்த்துகிறேன்.

    தமிழக பா.ஜக. தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், முதல் 100 இடங்கள் பிடித்த மாணவர்கள் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 6 பேர் இடம் பிடித்திருப்பது எல்லையற்ற மகிழ்ச்சியளிக்கிறது.

    அரசியல் ரீதியான அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்து தங்களது அயராத உழைப்பினாலும் விடா முயற்சியினாலும் நீட் தேர்வினை எதிர்கொண்டவர்களுக்கும் தகுதி மதிப்பெண் பெற்று தேர்வானவர்களுக்கும் முதல் நூறு இடங்களைப் பிடித்து சாதித்தவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்!

    நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவரும் எதிர்காலத்தில் தலைசிறந்த மருத்துவர்களாக மக்கள் சேவையில் சிறந்து விளங்கவும் இம்முறை வெற்றி வாய்ப்பைத் தவற விட்டவர்கள் மனம் தளராது மீண்டு முயற்சிக்கவும் வாழ்த்துகிறேன்.

    • கோவில் படத்தில் வரும் வடிவேலு நகைச்சுவையை போல மத்திய அரசின் திட்டங்களுக்கெல்லாம்,
    • இதுபோன்ற நாச்சியப்பன் கடையில், திமுகவின் பெயரைப் பொறித்து மக்களை ஏமாற்றி வந்தது இனியும் நடக்காது.

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மாநில அரசு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யும் திட்டங்களுக்கு பிரதமர் பெயரை வைப்பது தொடர்பாக, எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார்.

    இதற்கு பதிலடியாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

    அதில் அண்ணாமலை கூறியிருப்பதாவது:-

    இந்தியா முழுவதும், மொத்தம் 54 மத்திய அரசு உதவியில் செயல்படும் திட்டங்களும், 260 மத்திய அரசின் பல்வேறு துறைகளின் நேரடி திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மட்டும் கடந்த நான்கு ஆண்டுகளில், வரிப்பகிர்வு, மானியங்கள், உதவித் தொகை, திட்டங்களுக்கான பங்கீடு, நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசுத் துறைத் திட்டங்கள் என ₹5,47,280 கோடி நிதி, மத்திய அரசு வழங்கியுள்ளது.

    உண்மை இப்படி இருக்க, முரசொலியை திமுகவினரே படிப்பதில்லை என்பதற்காக, ஆங்கில முரசொலியில் தங்கள் வசதிக்கேற்ற கதைகளை எழுதச் சொல்லி, அதைக் கொண்டு வந்தால், மக்கள் நம்பி விடுவார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

    கோவில் படத்தில் வரும் வடிவேலு நகைச்சுவையை போல, மத்திய அரசின் திட்டங்களுக்கெல்லாம், இது போன்ற நாச்சியப்பன் கடையில், திமுகவின் பெயரைப் பொறித்து மக்களை ஏமாற்றி வந்தது இனியும் நடக்காது.

    இவ்வாறு அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

    • காதல் திருமண விவகாரத்தில் பெண்ணின் தந்தை புகார்.
    • கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் வாக்குமூலம் அடிப்படையில் ஜெகன் மூர்த்தி எம்.எல்.ஏ. கைது எனத் தகவல்.

    கே.வி. குப்பம் எம்.எல்.ஏ. ஜெகன் மூர்த்தியின் வீடு பூந்தமல்லியில் உள்ளது. இன்று மதியம் திருவள்ளூர் டி.எஸ்.பி. தமிழரசி தலைமையில் போலீசார் ஜெகன் மூர்த்தி வீட்டிற்கு சென்றனர். இந்த தகவல் அறிந்து புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள் அவரது வீட்டின் முன் குவிந்தனர். இதனால் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் ஆள் கடத்தல் வழக்கில் ஜெகன் மூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    அவரை கைது செய்து அழைத்துச் செல்ல முடியாத வகையில் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களையும் போலீசார் கைது செய்து வருகின்றனர்.

    தேனியைச் சேர்ந்த பெண் திருவாலங்காட்டைச் சேர்ந்த இனைஞரை காதலித்து திருமணம் செய்துள்ளார். அந்த பெண்ணின் தந்தை, தனது மகளை கடத்தியதாக புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வழக்கறிஞர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

    அந்த வழக்கறிஞர், ஜெகன் மூர்த்தி கூறியதன் பேரின் அந்த பெண்ணை கடத்தியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். அதன்அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

    • ஜெகன் மூர்த்தி எம்.எல்.ஏ. வீடு பூந்தமல்லியில் உள்ளது.
    • திடீரென இன்று மதியம் அவரது வீட்டின் முன் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

    புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி. இவர் கே.வி. குப்பம் தொகுதியில் போட்டியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.-வாக உள்ளார். கடந்த 2021 தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பிடித்து போட்டியிட்டார்.

    இவரது வீடு பூந்தமல்லியில் உள்ளது. இன்று மதியம் திடீரென அவரது வீட்டில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையறிந்து புரட்சி பாரதம் கட்சித் தொண்டர்கள் அப்பகுதியில் குவிந்துள்ளார். சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஜெகன் மூர்த்தியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • பிரதமரின் முகத்தை தாங்கிச் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கெல்லாம் அவர்களைக் காட்டிலும் அதிகமாகப் படியளப்பது மாநில அரசுதான்!
    • படையப்பா படக் 'காமெடி' போல "மாப்பிள்ளை அவர்தான், ஆனால் அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது" எனச் சேலம் அரசு விழாவில் பேசியிருந்தேன்.

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும் ஸ்டிக்கரில் பிரதமரின் முகத்தையும் தாங்கிச் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கெல்லாம் அவர்களைக் காட்டிலும் அதிகமாகப் படியளப்பது மாநில அரசுதான்!

    படையப்பா படக் 'காமெடி' போல "மாப்பிள்ளை அவர்தான், ஆனால் அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது" எனச் சேலம் அரசு விழாவில் பேசியிருந்தேன். பேசினேன் என்பதைவிட பேச வேண்டிய நிலைக்கு உள்துறை அமைச்சரின் அடிப்படையற்ற குற்றச்சாட்டால் தள்ளப்பட்டேன் என்றுதான் கூற வேண்டும்.

    அது @The_Hindu நாளிதழில் செய்தியாகி, தரவுகளோடு விவரிக்கப்பட்டுள்ளது. இனியாவது, கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல்லெறியும் பழக்கத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு மாற்றிக்கொள்ள வேண்டும்.

    • உத்தர பிரதேசத்தில் தேர்வு எழுதியதில் 1.70 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • முழு மதிப்பெண் எந்த மாணவனும் பெறவில்லை.

    இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு முடிவு இன்று வெளியானது. இதில் ராஜஸ்தானை சேர்ந்த மகேஷ் குமார் முதலிடம் பிடித்துள்ளார். இவர் 720-க்கு 686 மதிப்பெண் எடுத்துள்ளார். இந்த வருடம் யாரும் 700 மதிப்பெண்ணை தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்நத் உத்கார்ஷ் அவாதியா 2ஆவது இடம் பிடித்துள்ளார்.

    இந்த வருடம் 22.09 லட்சம் பேர் தேர்வு எழுதியதில் 12.36 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். என்றாலும் கடந்த வருடம் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கையை விட இது குறைவாகும். ஆனால் கடந்த வருடம் 23.33 லட்சம் பேர் தேர்வு எழுதியிருந்தனர். 13.15 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

    மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த கிரிஷாங்க் ஜோஷி, டெல்லியை சேர்ந்த மிரினால் கிஷோர் ஜா முறையே 3ஆவது மற்றும் 4ஆவது இடத்தை பிடித்துள்ளனர்.

    தேசிய அளவில் 5ஆவது இடத்தை பிடித்த டெல்லியை சேர்ந்த அவிகா அகர்வால், மாணவிகளில் வரிசையில் தேசிய அளவில் முதல் இடம் பிடித்துள்ளார்.

    உத்தர பிரதேசத்தில் அதிகபட்சமாக 1.70 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மகாராஷ்டிராவில் 1.25 லட்சம் பேரும், ராஜஸ்தானில் 1.19 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தமிழகத்தை பொறுத்தவரை சூர்ய நாராயணன், தேசிய அளவில் 27 ஆவது இடத்தை பிடித்துள்ளார். தமிழகத்தில் முதலிடம் பிடித்துள்ளார். தமிழகத்தில் 1.35 லட்சம் போர் தேர்வு எழுதிய நிலையில், 76 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் ஏறக்குறைய 1.08 லட்சம் இடங்கள் உள்ளது. இதில் 56 ஆயிரம் இடங்களில் அரசு கல்லூரிகளிலும், 52 ஆயிரம் இடங்கள் தனியார் கல்லூரிகளிலும் உள்ளன.

    பல் மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, சித்தா ஆகிய படிப்புகளுக்கும் நீட் தேர்வு அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×