என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

இந்தி தேர்வு எழுத 3.75 லட்சம் பேர் விண்ணப்பம்
- இந்தி பிரசார சபா நடத்தும் 8 நிலை தேர்வுகளை கடந்த ஆண்டு, 3.50 லட்சம் பேர் எழுதினர்.
- சென்னை, மதுரை, திருச்சி, கோவை இடங்களில் இருந்து அதிகமானவர்கள் இந்தி தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
சென்னை:
தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை (தமிழ், ஆங்கிலம்) பின்பற்றப்பட்டு வருகிறது. இந்தி திணிப்புக்கு கடும் எதிர்ப்பு இருந்த நிலையிலும், விருப்பப்பட்டு படிப்பவர்களுக்கு தமிழ்நாட்டில் தடை ஏதுமில்லை. 3-வது மொழியான இந்தியை தமிழகத்தில் படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்தி பிரசார சபா நடத்தும் 8 நிலை தேர்வுகளை கடந்த ஆண்டு, 3.50 லட்சம் பேர் எழுதினர். ஆந்திராவில் 1.15 லட்சம் பேரும், கர்நாடகம், கேரளாவில் 25 ஆயிரம் பேரும் இந்தி தேர்வை எழுதினர். தென் மாநிலங்களில் தமிழகத்தில் தான் அதிகமானவர்கள் தேர்வு எழுதியிருந்தனர்.
தற்போது, ஜூலை, ஆகஸ்டில் நடக்கும் தேர்வுக்கு தற்போது வரை 3.75 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னை, மதுரை, திருச்சி, கோவை இடங்களில் இருந்து அதிகமானவர்கள் இந்தி தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.