search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hindi exam"

    கோவையில் 7 மையங்களில் நடைபெற்ற இந்தி தேர்வை 4 ஆயிரம் பேர் எழுதினர்.
    கோவை:

    தமிழ்மொழி தவிர இந்தி, பிரெஞ்சு உள்ளிட்ட பிறமொழிகளை படிக்கும் ஆர்வம் மாணவ-மாணவிகளிடம் அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்ற வகையில் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் போது அங்குள்ள மொழிப்பாடங்கள் குறித்து தெரிந்து கொண்டு சேர்க்கின்றனர். மேலும் இந்தி படிக்கும் ஆர்வம் இளைஞர்களிடமும் ஏற்பட்டு உள்ளது. இதனால் இந்தி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    தமிழ்நாடு தட்ஷண பாரத இந்தி பிரசார சபை சார்பில், இந்தி சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு ஆண்டு தோறும் பிப்ரவரி மற்றும் ஆகஸ்டு மாதங்களில் இந்தி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தியில் பிராத்மிக், மத்தியமா, ராஷ்டிரபாஷா, பிரவேஷிகா, விஷாரத் பூர்வார்த், விஷாரத் உத்தார்த், பிரவீண் பூர்வார்த், பிரவீண் உத்தார்த் ஆகிய பாடங்கள் உள்ளன.

    இதில் பிராத்மிக், மத்தியமா, ராஷ்டிரபாஷா தேர்வுகள் கடந்த 5-ந் தேதி நடந்தது. பிரவேஷிகா, விஷாரத் பூர்வார்த், விஷாரத் உத்தார்த், பிரவீண் பூர்வார்த், பிரவீண் உத்தார்த் ஆகிய பாடங்களுக்கான முதல் தாள் தேர்வு நேற்றுமுன்தினம் காலையிலும், 2-ம் தாள் தேர்வு மாலையிலும் நடைபெற்றது.

    3-ம் தாள் தேர்வு நேற்று காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணிக்கு நடந்தது. இந்த தேர்வை 4 ஆயிரம் பேர் எழுதினர். இதற்காக கோவை காந்திபுரம் சுகுணா ரிப் மேல்நிலைப்பள்ளி, காந்திபார்க் மாரண்ணகவுண்டர் மேல்நிலைப்பள்ளி, சுங்கம் கார்மல் கார்டன் பள்ளி உள்பட 7 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. 
    தமிழகத்தில் இந்தி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. வருகிற 5-ந் தேதி தொடங்கி நடைபெறும் இந்தி தேர்வை 1¾ லட்சம் பேர் எழுதுகின்றனர்.
    சென்னை:

    சமீப காலமாக தமிழகத்தில் பிறமொழிகளை படிக்கும் ஆர்வம் மக்களிடையே தொற்றிக்கொண்டுள்ளது. பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும்போதே பிற மொழி பாடங்கள் இருக்கிறதா? என்பதை பார்த்தே தங்களின் குழந்தைகளை பெற்றோர் சேர்ப்பதை காண முடிகிறது. அந்தவகையில், தமிழகத்தில் இந்தி படிப்பவர்களின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்து வருகிறது.

    இந்தி தேர்வுகளை நடத்தி வரும் இந்தி பிரசார சபை, ஆண்டுக்கு 2 முறை (பிப்ரவரி, ஆகஸ்டு) இந்தி தேர்வுகளை நடத்துகிறது. அடிப்படை தேர்வாக பிராத்மிக் முதல் பிரவீண் வரை தேர்வுகளை நடத்துகிறது. இந்த மாதம், 5, 11, 12 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் நடத்தப்படும் இந்தி தேர்வை சுமார் 1¾ லட்சம் பேர் எழுத உள்ளனர். இதில் அடிப்படை தேர்வான பிராத்மிக் தேர்வை மட்டும் 50 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்.

    5-ந்தேதி பிராத்மிக், மத்தியமா, ராஷ்டிரபாஷா ஆகிய தேர்வுகள் நடக்க உள்ளது. 11 மற்றும் 12-ந்தேதிகளில் பிரவேஷிகா (3 தாள்), விஷாரத் பூர்வார்த் (3 தாள்), விஷாரத் உத்தரார்த் மற்றும் பிரவீண் பூர்வார்த், பிரவீண் உத்தரார்த் ஆகிய தேர்வுகள் நடக்கிறது.

    மேலும் விஷாரத் உத்தரார்த்துக்கான வாய்மொழி தேர்வு நடக்க உள்ளது. தமிழகம் முழுவதும் 378 மையங்களில் தேர்வு நடக்கிறது. சென்னையில் மட்டும் 158 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    இந்தி தேர்வு குறித்து இந்தி பிரசார சபை பொதுச்செயலாளர் எஸ்.ஜெயராஜ் கூறும்போது, ‘தென் மாநிலங்களிலேயே தமிழகத்தில் தான் இந்தி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.

    கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இந்த ஆகஸ்டு மாதத்தில் நடத்தப்படும் தேர்வில் மட்டும் சுமார் 1¾ லட்சம் பேர் கலந்து கொள்கின்றனர்’ என்றார். #tamilnews
    ×