என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தி தேர்வு"

    • இந்தி பிரசார சபா நடத்தும் 8 நிலை தேர்வுகளை கடந்த ஆண்டு, 3.50 லட்சம் பேர் எழுதினர்.
    • சென்னை, மதுரை, திருச்சி, கோவை இடங்களில் இருந்து அதிகமானவர்கள் இந்தி தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை (தமிழ், ஆங்கிலம்) பின்பற்றப்பட்டு வருகிறது. இந்தி திணிப்புக்கு கடும் எதிர்ப்பு இருந்த நிலையிலும், விருப்பப்பட்டு படிப்பவர்களுக்கு தமிழ்நாட்டில் தடை ஏதுமில்லை. 3-வது மொழியான இந்தியை தமிழகத்தில் படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.

    இந்தி பிரசார சபா நடத்தும் 8 நிலை தேர்வுகளை கடந்த ஆண்டு, 3.50 லட்சம் பேர் எழுதினர். ஆந்திராவில் 1.15 லட்சம் பேரும், கர்நாடகம், கேரளாவில் 25 ஆயிரம் பேரும் இந்தி தேர்வை எழுதினர். தென் மாநிலங்களில் தமிழகத்தில் தான் அதிகமானவர்கள் தேர்வு எழுதியிருந்தனர்.

    தற்போது, ஜூலை, ஆகஸ்டில் நடக்கும் தேர்வுக்கு தற்போது வரை 3.75 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    சென்னை, மதுரை, திருச்சி, கோவை இடங்களில் இருந்து அதிகமானவர்கள் இந்தி தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்தித் தேர்வுகள் நடந்தன.
    • இந்தித் தேர்வை மொத்தம் 505 மாணவ, மாணவியர் எழுதினர்.

    கிருஷ்ணகிரி,

    திருச்சி இந்தி பிரச்சார சபா சார்பில், கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்தித் தேர்வுகள் நடந்தன.

    இதில், காலை 10 மணி முதல் பகல் 12:30 மணி வரை நடந்த பிராத்தமிக் தேர்வை, 286 மாணவ, மாணவியர் எழுதினர். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை முதல் தாள், இரண்டாம் தாள் என நடந்த மத்தியமா தேர்வை, 109 மாணவ, மாணவியர் எழுதினர்.

    இத்தேர்வுகள் பள்ளியின் தலைமை ஆசிரியர் சேரலாதன் மேற்பார்வையில் நடந்தன. இதே போல், குந்தாரப்பள்ளி ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் நடந்த பிராத்மிக் தேர்வை, 100 மாணவ, மாணவியரும், மத்தியமா தேர்வை 20 மாணவ, மாணவியரும் எழுதினர். இத்தேர்வுகள் பள்ளியின் முதல்வர் சர்மிளா மேற்பார்வையில் நடந்தன. தேர்வுகளை பள்ளியின் நிறுவனர் அன்பரசன் பார்வையிட்டார். கி

    ருஷ்ணகிரியில் இரண்டு இடங்களில் நடந்த இந்தித் தேர்வை மொத்தம் 505 மாணவ, மாணவியர் எழுதினர்.

    ×