என் மலர்
சென்னை
- திமுகவின் ஊழலும், போலி வேடமும் மக்கள் மத்தியில் அம்பலப்படும்போதெல்லாம், அதனை மடைமாற்ற, மக்கள் மத்தியில் பிரிவினையைத் தூண்டுவது திமுகவின் வழக்கம்.
- தமிழக மக்களைக் குறிப்பிட்டதாக மடைமாற்ற முயற்சிப்பது, மு.க.ஸ்டாலின் வகிக்கும் முதலமைச்சர் பதவிக்கே அவமானம்.
தமிழக பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவரும் தேசிய பொதுக்குழு உறுப்பினருமான அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திமுகவின் ஊழலும், போலி வேடமும் மக்கள் மத்தியில் அம்பலப்படும்போதெல்லாம், அதனை மடைமாற்ற, மக்கள் மத்தியில் பிரிவினையைத் தூண்டுவது திமுகவின் வழக்கம். நகராட்சி நிர்வாகத் துறையில், ரூ.888 கோடி ஊழல் நடந்திருப்பது வெளியானவுடன், அதனை மறைக்கும் முயற்சியைத் தொடங்கியிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
உழைக்கும் பீகார் மக்களைத் திமுகவினர் துன்புறுத்துகின்றனர் என்று, பிரதமர் நரேந்திர மோடி கூறியது முழுக்க முழுக்க உண்மை. தமிழக அமைச்சர்கள் பொன்முடி, டி.ஆர்.பி. ராஜா, எம்.பி. தயாநிதி மாறன், ஆ.ராசா தொடங்கி, கடைக்கோடி திமுக நிர்வாகிகள் வரை, பீகார் மக்களை ஏளனமாகப் பேசியதும், அவர்கள் மீது தாக்குதலுக்குத் தூண்டுவதைப் போல பேசியதும், தமிழக மக்கள் அறிவார்கள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இந்த காணொளியிலேயே, நமது பாரதப் பிரதமர், தமிழகத்தில், பீகார் மக்களை திமுகவினர் துன்புறுத்துகிறார்கள் என்று பேசியிருப்பது தான் இருக்கிறது.
எப்படி, திமுகவினர் தமிழகத்தின் அவமானச் சின்னமாக இருக்கிறார்களோ, அதே போல, பிரதமர் அவர்கள் திமுகவினரைக் குறிப்பிட்டதை, தமிழக மக்களைக் குறிப்பிட்டதாக மடைமாற்ற முயற்சிப்பது, மு.க.ஸ்டாலின் வகிக்கும் முதலமைச்சர் பதவிக்கே அவமானம். தாத்தா காலத்தில் தொடங்கிய இந்த அற்ப அரசியலை, பேரன் காலத்திலும் தொடர்வதை, முதலமைச்சர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தங்கம் விலை ஒரு கிராம் ரூ.11,300-க்கு விற்பனையாகிறது.
- வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.
தங்கம் விலை ஏற்றம் கண்டு, கடந்த 18-ந்தேதியில் இருந்து விலை குறையத் தொடங்கியது. கடந்த 28-ந்தேதி ஒரு சவரன் ரூ.89 ஆயிரத்துக்கு கீழ் வரை சென்றது. தொடர்ந்து விலை குறையும் என எதிர்பார்த்த நிலையில், நேற்று முன்தினம் அதிரடியாக சவரனுக்கு ரூ.2 ஆயிரம் உயர்ந்து மிரட்டியது.
தங்கம் விலை நேற்று குறைந்தது. காலை விலை நிலவரப்படி, கிராமுக்கு ரூ.225-ம், சவரனுக்கு ரூ.1,800-ம் குறைந்த நிலையில், பின்னர் பிற்பகல் விலையில் கிராமுக்கு ரூ.200-ம், சவரனுக்கு ரூ.1,600-ம் உயர்ந்து காணப்பட்டது.
இந்நிலையில் தங்கம் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி விற்பனையாகி வருகிறது. தங்கம் விலை ஒரு கிராம் ரூ.11,300-க்கும், ஒரு சவரன் ரூ.90,400-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையிலும் இன்று எந்த மாற்றமும் இல்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.165-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
30-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 90,400
29-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 90,600
28-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 88,600
27-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 91,600
26-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 92,000
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
30-10-2025- ஒரு கிராம் ரூ.165
29-10-2025- ஒரு கிராம் ரூ.166
28-10-2025- ஒரு கிராம் ரூ.165
27-10-2025- ஒரு கிராம் ரூ.170
26-10-2025- ஒரு கிராம் ரூ.170
- சென்னை சென்டிரல் வரும் மெயில் எக்ஸ்பிரஸ் ரெயில் (12839), வழக்கமான நேரத்தைவிட 55 நிமிடம் தாமதமாக சென்டிரல் வந்தடையும்.
- வழக்கமான நேரத்தைவிட 50 நிமிடம் தாமதமாக கோவை வந்தடையும்.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை கோட்டத்தில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
* வருகிற நவம்பர் 15-ந்தேதி சென்னை சென்டிரலில் இருந்து கா்நாடக மாநிலம் யஸ்வந்த்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.12292), இரவு 11.30 மணிக்கு பதிலாக இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு (25 நிமிடம் தாமதம்) செல்லும்.
* சென்னை எழும்பூரில் இருந்து நாளை (சனிக்கிழமை) மதியம் 1.45 மணிக்கு புறப்பட்டு மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் (12635), வழக்கமான நேரத்தைவிட 20 நிமிடமும், சென்னை எழும்பூரில் இருந்து வருகிற 3,5,8,12,13,15 ஆகிய தேதிகளில் மதியம் 1.45 மணிக்கு புறப்பட்டு மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் (12635), வழக்கமான நேரத்தைவிட 30 நிமிடமும் தாமதமாக மதுரை சென்றடையும்.
நாகர்கோவில்-காச்சிகுடா
* நாகர்கோவிலில் இருந்த வருகிற நவம்பர் 8,15 ஆகிய தேதிகளில் காலை 9.15 மணிக்கு புறப்பட்டு காச்சிகுடா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16354), வழக்கமான நேரத்தைவிட 3 மணி நேரம் தாமதமாக காச்சிகுடா சென்றடையும்.
* மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து வருகிற நவம்பர் 12-ந்தேதி இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் மெயில் எக்ஸ்பிரஸ் ரெயில் (12839), வழக்கமான நேரத்தைவிட 55 நிமிடம் தாமதமாக சென்டிரல் வந்தடையும்.
* அசாம் மாநிலம் சில்சாரில் இருந்து வருகிற நவம்பர் 11-ந்தேதி இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12516), வழக்கமான நேரத்தைவிட 50 நிமிடம் தாமதமாக கோவை வந்தடையும்.
* சண்டிகாரில் இருந்து வருகிற நவம்பர் 5-ந்தேதி காலை 8.05 மணிக்கு புறப்பட்டு மதுரை வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (20494), வழக்கமான நேரத்தைவிட 40 நிமிடம் தாமதமாக மதுரை வந்தடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இதுபோன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என்று ஒரு தமிழனாக வேதனையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
- நாட்டின் நலன் மீது பிரதமரும் பா.ஜ.க.,வினரும் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
சென்னை:
தமிழகத்தில் பீகாரிகள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று பிரதமர் மோடி பேசியிருப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு கூறியிருப்பதாவது:-
இந்த நாட்டிலுள்ள அனைவருக்குமான மாண்புமிகு பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே நரேந்திர மோடி அவர்கள் அடிக்கடி மறந்து, இதுபோன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என்று ஒரு தமிழனாக வேதனையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஒடிசா - பீகார் என்று எங்கு சென்றாலும், பா.ஜ.க.,வினர் தமிழர்களின் மீதான வன்மத்தைத் தேர்தல் அரசியலுக்காக வெளிப்படுத்துவதற்குத் தமிழ்நாட்டு மக்களின் முதலமைச்சர் என்ற முறையில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பன்முகத்தன்மை கொண்ட, வேற்றுமையில் ஒற்றுமையைக் காணும் பெருமைமிக்க இந்தியாவில், இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் பகையை வளர்ப்பது, தமிழர்களுக்கும் பீகார் மக்களுக்கும் பகை உண்டாக்கும்படி நடந்துகொள்வது போன்ற அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திவிட்டு, நாட்டின் நலன் மீது பிரதமரும் பா.ஜ.க.,வினரும் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
- இன்று காலை தங்கம் விலை கிராமுக்கு 225 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,100-க்கு விற்பனையானது.
- சவரனுக்கு 1,800 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.88,800-க்கும் விற்பனையானது.
தங்கம் விலை கடந்த 17-ந்தேதி ஒரு சவரன் ரூ.97 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது. அதன் பின்னர் விலை குறையத் தொடங்கியது.
கடந்த 23-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை சவரனுக்கு ரூ.9 ஆயிரம் சரிந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.89 ஆயிரத்துக்கு கீழ் வந்து அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
தொடர்ந்து குறைந்துவந்த தங்கம் விலைக்கு முற்றுப்புள்ளி வைத்து, நேற்று மீண்டும் ஏற்றம் கண்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 75-க்கும், ஒரு சவரன் ரூ.88 ஆயிரத்து 600-க்கும் விற்பனையான நிலையில், நேற்று காலை மற்றும் பிற்பகல் 2 வேளைகளில் விலை உயர்ந்து இருந்தது.
காலையில் சவரனுக்கு ரூ.1,080-ம், பிற்பகலில் சவரனுக்கு ரூ.920-ம் உயர்ந்து காணப்பட்டது. மொத்தத்தில் நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2 ஆயிரமும் அதிகரித்து, ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் மீண்டும் தங்கம் விலை ரூ.90 ஆயிரத்தை தாண்டியது.
இதனையடுத்து இன்று காலை தங்கம் விலை கிராமுக்கு 225 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,100-க்கும், சவரனுக்கு 1,800 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.88,800-க்கும் விற்பனையானது.
இந்நிலையில் மாலை கிராமுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ. 11, 300-க்கும், சவரன் 1600 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 90,400-க்கும் விற்பனையாகிறது.
தங்கம் விலை ஏறுமா, இறங்குமா, தங்கம் வாங்கலாமா வேண்டாமா என நடுத்தர மக்களை இந்த தங்கம் விலை கடந்த சில நாட்களாக குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.
வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை 1 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.165-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
29-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 90,600
28-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 88,600
27-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 91,600
26-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 92,000
25-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 92,000
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
29-10-2025- ஒரு கிராம் ரூ.166
28-10-2025- ஒரு கிராம் ரூ.165
27-10-2025- ஒரு கிராம் ரூ.170
26-10-2025- ஒரு கிராம் ரூ.170
25-10-2025- ஒரு கிராம் ரூ.170
- முதலமைச்சரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் எப்போது விழித்து கொள்வார்கள்? என்றார் அண்ணாமலை.
- தமிழகத்தில் 3,671 பள்ளிகளில், ஒரு ஆசிரியர் மட்டுமே பணியிலிருக்கிறார்.
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழகப் பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் சதவீதம், கடந்த ஆண்டுகளை விட மிகவும் அதிகரித்திருப்பதாக, மத்திய கல்வித் துறை அமைச்சகம் UDISE+ அறிக்கை வெளியிட்டுள்ளது. கல்வித்துறையில் தமிழகத்தை மிகவும் பின்தங்கிய நிலைக்குத் தள்ளியுள்ளது இந்த திமுக அரசு.
2020-21ல் தொடக்கப்பள்ளிகளில் 0.6 சதவிகிதமாக இருந்த இடைநிற்றல் விகிதம் இன்று 2024-25ல் 2.7 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. அதுபோல, உயர்நிலைப் பள்ளிகளில் 6.4 சதவிகிதத்திலிருந்து 8.5 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
தனியார் பள்ளி மாணவர்களுக்குக் கிடைக்கும் மும்மொழிக் கல்வி உள்ளிட்ட வாய்ப்புகள், ஏழை, எளிய அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மறுக்கப்படுகிறது. தனியார் பள்ளிகளில் எங்கும் நடைபெறாத மாணவர்களிடையேயான ஜாதிய மோதல்கள், தமிழக அரசுப் பள்ளிகளில் மட்டுமே நடக்கின்றன.
கல்வித் துறை அமைச்சரின் சொந்த மாவட்டம் உட்பட, பல மாவட்டங்களில் உள்ள அரசுப்பள்ளிகளில், கட்டிடமே இல்லாமல் மரத்தடியில் வகுப்புகள் நடத்துவதும், திமுக கட்சிக்காரர்கள் கட்டும் தரமற்ற பள்ளிக் கட்டிடங்கள் இடிந்து விழுவதும், அரசுப் பள்ளிகளை அவல நிலையில் தள்ளியிருக்கின்றன. இது தவிர, முதலமைச்சர் முக ஸ்டாலின் அரசின் விளம்பர நிகழ்ச்சிகளுக்காக, அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை விடும் கொடுமையும், திமுக ஆட்சியில்தான் நடந்தேறுகிறது. மேலும், தமிழகத்தில் 3,671 பள்ளிகளில், ஒரு ஆசிரியர் மட்டுமே பணியிலிருக்கிறார்.
இதே காலகட்டத்தில், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு சேரும் மாணவர்கள் எண்ணிக்கை 2.39 லட்சமாக இருக்கையில், தனியார் பள்ளிகளில் கிட்டத்தட்ட இரண்டு மடங்காக, 5.26 லட்சம் மாணவர்கள் சேர்கின்றனர்.
தமிழக பள்ளிக்கல்வித் துறை நிலைமை இப்படி இருக்க, வீண் விளம்பரம் செய்து, தங்களுக்குத் தாங்களே பாராட்டு விழா நடத்தி நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் எப்போது விழித்து கொள்வார்கள்?
இவ்வாறு அவர் கூறினார்.
- சுற்றுப்புறத்தில் நீர் தேங்கியுள்ளதில் இருந்து இனப்பெருக்கமாகி ஏ.டி.எஸ் கொசு இந்த வைரசை பரப்பி வருகிறது.
- டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள உடனடியாக தமிழகம் முழுவதும் முகாம்கள் நடத்தப்பட வேண்டும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் கணிசமாக பல இடங்களில் கடந்த ஆண்டுகளை விட கூடுதலாக உள்ளது. இந்த ஆண்டில் மட்டும் 15,796 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 9 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வருகின்றன.
சுற்றுப்புறத்தில் நீர் தேங்கியுள்ளதில் இருந்து இனப்பெருக்கமாகி ஏ.டி.எஸ் கொசு இந்த வைரசை பரப்பி வருகிறது. இந்த கொசுக்களின் பெருக்கத்தை தடுப்பதற்கு நீர் தேங்காமலும் அதில் இந்த கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு சுகாதாரத்துறை பொதுமக்களுக்கு முழுமையான விழிப்பு ணர்வை அளித்தும், நீர் தேங்கக்கூடிய பகுதிகளை மக்கள் உதவியுடன் சுத்தம் செய்ய உள்ளாட்சித் துறை மற்றும் நகராட்சி, மாநகராட்சி துறைகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.
டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள உடனடியாக தமிழகம் முழுவதும் முகாம்கள் நடத்தப்பட வேண்டும். கடுமையான அறிகுறிகள் ஏற்படாத வண்ணம் முறையான மருத்துவ சிகிச்சையை அளிக்க ஆரம்ப சுகாதார நிலையங்களும், பொது சுகாதார நிலையமும், மருத்துவ கல்லூரிகளும் முழுவீச்சுடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- இந்த ஆண்டு ஜனவரி மாதம் புதுப்பிக்கும் பணி தொடங்கி இந்த மாதம் நிறைவடைந்துள்ளது.
- புதிய ஆலயத்தின் திறப்பு விழா வருகிற 1-ந்தேதி மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
சென்னை:
சென்னையில் பழமையான கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பெற்றது புனித ஜார்ஜ் கதீட்ரல் தேவாலயம். ராதாகிருஷ்ணன் சாலையில் ஜெமினி பாலம் அருகே அமைந்துள்ள இந்த ஆலயத்தை தென்னிந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ.) சென்னைப் பேராயம் நிர்வகித்து வருகிறது.
210 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்திற்கு வரலாறு உண்டு. கிறிஸ்தவ மிஷனரிகளால் உருவாக்கப்பட்ட புனித ஜார்ஜ் தேவாலயம் வரலாற்று கட்டிடம் என்பதால் அதனை அதன் பழமை மாறாமல் புதுப்பிக்க திட்டமிடப்பட்டது.
சென்னையின் இதயம் போன்ற மையப்பகுதியில் இடம் பெற்றுள்ள இந்த ஆலயம் செயிண்ட் ஜார்ஜ் கதீட்ரல் கர்னல் டேவிட் என்பவரின் முயற்சியில் மீண்டும் உயிர்பிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் புதுப்பிக்கும் பணி தொடங்கி இந்த மாதம் நிறைவடைந்துள்ளது. ஒவ்வொரு தூண்களும் வளைந்த கலைப்பொருட்களும் புத்துயிர் பெற்றுள்ளது.
இந்த நினைவுச் சின்ன தேவாலயமானது கடினமான கட்டிட சவாலாக இருந்தது என்று டேவிட் தேவசகாயம் தெரிவித்தார். கட்டிட கலைஞர்கள், பொறியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து நினைவுச் சின்னத்தை ஆன்மிக வாழ்க்கையின் துடிப்பான மையமாக மாற்றியுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
இந்த மறு சீரமைப்பு பணியில் சென்னை ஐ.ஐ.டி பேராசிரியர் அருண்மேனன் போன்ற நிபுணர்கள் உடனிருந்து கட்டமைப்பு ஒருங்கிணைப்பை மேற்பார்வையிட்டனர். கதீட்ரல் தேவலாயத்தின் ஒளிரும் கோபுரம் மற்றும் உறுதியான நம்பிக்கையுடன் அழியாத சின்னமாக மீண்டும் புதுப்பொலிவு பெற்றுள்ளது.
இதுகுறித்து சி.எஸ்.ஐ. சென்னைப் பேராயர் பால் பிரான்சிஸ் ரவிச்சந்திரன் கூறியதாவது:-
புனித ஜார்ஜ் கதீட்ரல் தேவாலயம் 1816-ம் ஆண்டு கட்டப்பட்டது. அதன் எழில், கட்டிடக்கலை எதுவும் சிறிதும் மாறாமல் அப்படியே மறுசீரமைக்கப்பட்டுள்ளது. புதிய ஆலயத்தின் திறப்பு விழா வருகிற 1-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இதனை பிரதம பேராயர் ரூபன் மார்க் திறந்து வைக்கிறார். முன்னதாக சென்னை பேராயத்தில் உள்ள ஆயர்கள் பங்கேற்கும் ஊர்வலம் பேராயத்தில் இருந்து புறப்பட்டு ராதாகிருஷ்ணன் சாலை வழியாக புனித ஜார்ஜ் கதீட்ரல் ஆலயத்திற்கு செல்வார்கள். அதனை தொடர்ந்து சிறப்பு வழிபாடு நடைபெறும். மறுசீரமைப்பு என்பது கட்டிடக் கலையைவிட மேலானது. இது ஆன்மிக புதுப்பித்தலாகும். எங்கள் பார்வை ஒரு அழகான கட்டிடம் மட்டுமல்ல. ஒன்றுபட்ட கதீட்ரல் சமூகத்தின் எதிரொலி. இதன் மூலம் கிறிஸ்துவின் அன்பு புலப்படுகிறது என்றார்.
இதுகுறித்து தேவாலயத்தின் போதகர் ரூபன் ஜெயக்குமார் கூறியதாவது:-
கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த என்ஜினீயர்கள் கர்னல் ஜேம்ஸ் கால்டுவெல் மற்றும் கேப்டன் தாமஸ் ஆகியோர் இந்த ஆலயத்தை 1815-ல் கட்டி எழுப்பினார்கள். 1816-ல் திருச்சபையாக உருவாக்கப்பட்டது. 10 மாதங்கள் நடந்த கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று உள்ளன. திருச்சபை மக்களின் காணிக்கை மூலம் கட்டப்பட்டுள்ளது. ரூ.10 கோடி இதற்கு செலவிடப்பட்டு உள்ளது என்றார்
- மாநகராட்சி கூட்டத்தில் செல்ல பிராணிகள் உரிமம் பெறுவதற்கு நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன.
- கூட்டத்தில் 71 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
சென்னை:
சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது. அ.தி.மு.க. மாமன்ற குழு தலைவர் சதீஷ்குமார் பேசுகையில், எனது வார்டு 182-ல் மக்கள் எனக்கு வாக்களித்தனர். ஆனால் மாநகராட்சி ஆவணங்களில் அது 184-வது வார்டாக காண்பிக்கப்படுகிறது. பெருந்தலைவர் காமராஜர் நகரில் கடந்த 3 ஆண்டுகளாக வைத்த கோரிக்கையை இதுவரை சரி செய்யவில்லை. அதனால் அங்கு எந்த பணியும் சரியாக நடைபெறவில்லை. நெமிலி கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்ததாக கூறினார்.
இதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். அ.தி.மு.க. உறுப்பினர் சதீஷ்குமாரை அமரும்படி குரல் கொடுத்தனர். பெரும்பாலான தி.மு.க. உறுப்பினர்கள் இருக்கையை விட்டு எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர். அ.தி.மு.க. உறுப்பினர்களும் பதிலுக்கு குரல் கொடுத்தனர் முன்னாள் முதல்வர் கருணாநிதி அந்த திட்டத்தை கொண்டு வந்ததாக தி.மு.க.வினர் பதிலுக்கு குரல் கொடுத்தனர்.
அப்போது சபையில் ஒரே அமளியாக இருந்தது. இறுதியில் சதீஷ்குமார் அ.தி.மு.க. உறுப்பினர்களுடன் சபையை விட்டு வெளிநடப்பு செய்தார்.
இதையடுத்து கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநகராட்சி கூட்டத்தில் செல்ல பிராணிகள் உரிமம் பெறுவதற்கு நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. செல்ல பிராணிகளான நாய், பூனைகளுக்கு உரிமம் கட்டாயம் பெற வேண்டும். இதற்கு ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 24-ந்தேதிக்குள் உரிமம் பெற வேண்டும். அப்படி பெற தவறினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மாநகராட்சி ஊழியர்கள் இதை வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்துவார்கள். மேலும் பூங்காக்கள் நடைபாதைகள் பிற பகுதிகளில் கழுத்துப் பட்டை இல்லாமல் நாய்களை அழைத்து வந்தால் உரிமையாளர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கவும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.
மயிலாப்பூர் மந்தவெளிபாக்கத்தில் உள்ள கிழக்கு வட்டச் சாலைக்கு பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் சாலை என பெயர் மாற்றம் உட்பட 71 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
- பார்த்தசாரதி தெரு, முனுசாமி நகர், ஆவடி சீனிவாசன் தெரு, கே.எம்.கார்டன்.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (31.10.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
புளியந்தோப்பு: சைடனாம்ஸ் சாலை, கண்ணப்பர் திடல், ரிப்பன் பில்டிங் பகுதி, பெரியமேடு பகுதி, சுந்தரபுரம், நேரு டிம்பர் மார்ட் பகுதி, அப்பாராவ் கார்டன், டிமலர்ஸ் சாலை, வ.உ.சி. நகர், அம்பேத்கர் நகர், அம்மாயி அம்மாள் தெரு, குட்டிதம்புரான் தெரு, கண்ணிகாபுரம், காந்தி நகர், பவுடர் மில்ஸ் சாலை, சத்தியவானி முத்து நகர், வீராசாமி தெரு, பார்த்தசாரதி தெரு, நாச்சியாரம்மாள் லேன், திரு.வி.க.நகர், பாடீசன் புரம், அம்பேத்கார் நகர், மன்னார்சாமி தெரு, ராமசாமி தெரு, திருவேங்கடசாமி தெரு, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, ஜாபர்கான் தெரு, போல்நாயக்கன் தெரு, நாட்ச்சாரம்மாள் தெரு, மண்னார்சாமி தெரு, நாராயணசாமி தெரு, டிக்காஸ்டர் சாலை, சூளை மோதிலால் தெரு, காட்டூர் நல்ல முத்து தெரு, அங்காளம்மன் கோவில் தெரு, அஷ்டபுஜம் சாலை, சூளை பெரியார் நகர், பார்த்தசாரதி தெரு, முனுசாமி நகர், ஆவடி சீனிவாசன் தெரு, கே.எம்.கார்டன், சுப்பானாயுடு தெரு, ஜிவி.கோவில் தெரு.
- புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று காலை 08.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 36 மணி நேரத்திற்கு, வடக்கு-வடமேற்கு திசையில், மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் வழியாக நகரக்கூடும்.
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் 5-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
- அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
- விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர், ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகத் தமது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர்.
சென்னை :
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 118-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழாவையொட்டி பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பனையூரில் அமைந்துள்ள த.வெ.க. அலுவலகத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் உருவ படத்திற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார். இதுதொடர்பாக விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர், ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகத் தமது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர், அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள். சமூக ஒற்றுமை, மத நல்லிணக்கத்திற்காகத் தன்னை அர்ப்பணித்த அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்தநாள் மற்றும் குரு பூஜை தினத்தில், எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன் என்று கூறியுள்ளார்.






