என் மலர்tooltip icon

    சென்னை

    • தங்கம் விலை வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
    • இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய வைத்தது.

    சென்னை:

    உலக நாடுகள் இடையிலான போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை, டாலருக்கு எதிரான ரூபாய் வீழ்ச்சி போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்தது.

    இந்தநிலையில் அமெரிக்காவின் வர்த்தக போரால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது. பங்குச்சந்தைகளில் முதலீடு குறைந்து, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது.

    இதனால் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் கடந்த 6-ந்தேதி ஒரு கிராம் ரூ.10,005 என்ற புதிய உச்சத்தை அடைந்தது. அதாவது ஒரு சவரன் தங்கம் விலை ரூ.80 ஆயிரத்து 40-க்கு விற்பனையானது. இது இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய வைத்தது. நேற்று முன்தினம் விடுமுறை தினம் என்பதால் அதே விலை நீடித்தது. நேற்று காலையில் தங்கம் விலை சற்று குறைந்தது. அதாவது கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.9,970-க்கும், சவரனுக்கு ரூ.280 குறைந்து சவரன் ரூ.79 ஆயிரத்து 760-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    நேற்று மாலை தங்கம் விலை மீண்டும் புதிய உச்சத்தை தொட்டது. கிராமுக்கு ரூ.90-ம், சவரனுக்கு ரூ.720-ம் அதிகரித்தது. அதன்படி ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 60-க்கும், சவரன் ரூ.80 ஆயிரத்து 480-க்கும் விற்பனையானது.

    இந்நிலையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,150-க்கும் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.81,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    08-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 80,480

    07-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 80,040

    06-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 80,040

    05-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.78,920

    04-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.78,360

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    08-09-2025- ஒரு கிராம் ரூ.140

    07-09-2025- ஒரு கிராம் ரூ.138

    06-09-2025- ஒரு கிராம் ரூ.138

    05-09-2025- ஒரு கிராம் ரூ.136

    04-09-2025- ஒரு கிராம் ரூ.137

    • இந்த ஆண்டு அக்டோபர் 20-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
    • தெற்கு ரெயில்வே சார்பில் 11 சிறப்பு ரெயில்கள் மட்டுமே இயக்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது சுமார் 10 லட்சத்துக்கு மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர். இவர்கள் பஸ், ரெயில் மற்றும் கார்கள் மூலமாக பயணம் மேற்கொள்கின்றனர். ரெயில்களை பொறுத்தவரையில் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்பவா்கள் 60 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆனால், தீபாவளி முன்பதிவின்போது உடனடியாக டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிடும். 300-க்கும் மேற்பட்ட பயணிகள் காத்திருப்பு பட்டியலுக்கு சென்றுவிடுவார்கள்.

    இதுபோன்று காத்திருப்பு பட்டியலில் உள்ள பயணிகளுக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், சென்னையில் இருந்து கடந்த ஆண்டு 30-க்கும் மேற்பட்ட சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. ஆனால் இந்த சிறப்பு ரெயில்களும் போதுமானதாக இல்லை என குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, பயணிகளின் வசதிக்காக பண்டிகை காலங்களில் கூடுதல் சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் என பயணிகள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

    அந்த வகையில், இந்த ஆண்டு அக்டோபர் 20-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு முழுமையாக முடிந்து காத்திருப்பு பட்டியலில் பலரும் உள்ளனர். இதற்கிடையே, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைகளின்போது பயணிகளின் வசதிக்காக இந்தியா முழுவதும் 12 ஆயிரத்துக்கும் அதிகமான சிறப்பு ரெயில்களை இயக்க இந்திய ரெயில்வே முடிவு செய்துள்ளதாக மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ஆனால், தெற்கு ரெயில்வே சார்பில் 11 சிறப்பு ரெயில்கள் மட்டுமே இயக்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

    அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை, கன்னியாகுமரி, நாகர்கோவில், செங்கோட்டை, திருவனந்தபுரம், எர்ணாகுளத்திற்கும், எழும்பூரில் இருந்து நெல்லை, தூத்துக்குடிக்கும், தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில், செங்கல்பட்டில் இருந்து நெல்லைக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்க ரெயில்வே வாரியத்திடம் தெற்கு ரெயில்வே பரிந்துரை செய்துள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு குறைந்த அளவிலான சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட இருப்பது பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து, ரெயில் பயணிகள் கூறியபோது, 'தீபாவளி பண்டிகை ரெயிலுக்கான முன்பதிவின்போது வழக்கமான ரெயில்களுக்கான டிக்கெட் சில நிமிடங்களில் விற்றுதீர்ந்துவிடுகிறது. இதனால் சிறப்பு ரெயில்களை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். ஆனால் பண்டிகை காலங்களில் போதுமான அளவு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதில்லை. கூடுதல் ரெயில்கள் இயக்க தொடர்ந்து கோரிக்கை எழுப்புகிறோம். ஆனால் கூடுதல் ரெயில்கள் இயக்குவதில்லை. இந்த ஆண்டும் வெறும் 11 ரெயில்கள் இயக்க பரிந்துரை செய்துள்ளனர். இது எந்தவிதத்தில் நியாயம். சொந்த ஊர்களுக்கு ரெயில்களில் டிக்கெட் கிடைக்காததால் மிகவும் அவதியுடன் சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டியுள்ளது' என்றார்கள்.

    இதுகுறித்து, ரெயில்வே அதிகாரிகள் கூறியபோது, 'தெற்கு ரெயில்வேயில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூடுதல் சிறப்பு ரெயில்கள் இயக்க போதுமான ரெயில் பெட்டிகள் இல்லை. எனினும் பயணிகள் வசதிக்காக எக்ஸ்பிரஸ் ரெயில்களில் அதிகபட்சமாக 24 பெட்டிகள் வரை இணைத்து இயக்க முடியும்.

    எனவே, கொல்லம், செங்கோட்டை, நாகர்கோவில், நெல்லை, கோவை, மதுரை உள்ளிட்ட நெரிசல் மிக்க வழித்தடங்களில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில், ஓரிரு பெட்டிகள் கூடுதலாக இணைத்து இயக்கப்படும். இதுதவிர, 2 பயணிகள் ரெயிலும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்பு கூடுதலாக எத்தனை சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது என்பது குறித்து முழுமையாக தெரியவரும்' என்றார்கள்.

    • பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
    • ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

    ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கள், மதுரை, சிவகங்கை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, தேனி ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது. 

    • தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றார்.
    • லண்டன், கீழைத்தேயவியல் மற்றும் ஆப்பிரிக்கவியல் பல்கலைக்கழகத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு 9 நாட்கள் சுற்றுப்பயணம் சென்றார். தனது பயணத்தின் ஒரு அங்கமாக, லண்டன், கீழைத்தேயவியல் மற்றும் ஆப்பிரிக்கவியல் பல்கலைக்கழகத்தில் (எஸ்.ஓ.ஏ.எஸ்.) உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

    இந்தநிலையில், அ.தி.மு.க. வக்கீல் அணி செயலாளரும், எம்.பி.யுமான ஐ.எஸ்.இன்பதுரை, மு.க.ஸ்டாலினின் சித்தாந்த தடுமாற்றம் என்ற தலைப்பில், நெற்றியில் விபூதி வைக்கப்பட்ட திருவள்ளுவரை மு.க.ஸ்டாலின் கும்பிடுவது போன்ற படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

     

    இதுதொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், ''விபூதியுடன் திருவள்ளுவர் இருக்கும் படம் 'எடிட்' செய்த படம்'' என்று கூறப்பட்டுள்ளது. மேலும் நெற்றியில் விபூதி இல்லாமல் உள்ள திருவள்ளுவர் படத்தையும், நெற்றியில் விபூதி இருப்பது போன்ற 'எடிட்' செய்யப்பட்டதாக கூறப்படும் திருவள்ளுவர் படத்தையும் வெளியிட்டுள்ளது.

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
    • ரங்கராஜபுரம், சைதாப்பேட்டை, ஸ்ரீ நகர் காலனி, எல்டிஜி சாலை.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (10.09.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    பாரிவாக்கம்: அன்னைக்காட்டுச்சேரி, அமுதூர்மேடு, திருமணம், காவல்சேரி, வயலாநல்லூர், சோரஞ்சேரி, ஆயில்ச்சேரி, சித்துகாடு.

    கோட்டூர்புரம்: ரங்கராஜபுரம், சைதாப்பேட்டை, ஸ்ரீ நகர் காலனி, எல்டிஜி சாலை, வெங்கடாபுரம், வேளச்சேரி மெயின் ரோடு, சித்ரா நகர், ரிவர் வியூ ரோடு, மற்றும் ஹவுசிங் போர்டு.

    • வரும் 13-ந் தேதி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக அறிவிப்பு
    • திருச்சியில் இருந்து சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

    தமிழகம் முழுவதும் வரும் 13-ந் தேதி சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

    திருச்சியில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். அதன்படி சத்திரம் பேருந்து நிலையத்தில் விஜய் உரையாற்ற தவெக சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் காவல்துறை அதற்கு அனுமதி இல்லை என மறுப்பு தெரிவித்தது.

    இதனையடுத்து மரக்கடை பகுதியில் இருந்து சுற்றுப்பயணத்தை தொடங்க மீண்டும் மனு அளிக்கப்பட்டது. அதனையும் காவல்துறை நிராகரித்தது. 2-வது முறையாக அனுமதி மறுக்கப்பட்டதால் மாற்று இடம் குறித்து தவெகவினர் ஆலோசனை நடத்தினர்.

    அந்த வகையில் காந்தி மார்க்கெட் பகுதியில் இருந்து விஜய் சுற்றுப்பயணத்தை தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    3-வது முறையும் காவல்துறை அனுமதி மறுத்தால் நீதிமன்றத்தை அணுகவும் தவெகவினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை.

    தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, கோவை, திண்டுக்கல், மதுரை, தேனி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இட்லி கடை வரும் அக்டோபர் 1-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
    • நடிகர் சத்யராஜ் விஷ்ணு வர்தன் என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவிப்பு.

    தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் 1-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

    கடந்த இரண்டு நாட்களாக இட்லி கடை படத்தின் கதாப்பாத்திர அறிமுக போஸ்டர்கள் வெளியிடப்பட்டு வருகிறது.

    அந்த வகையில், இப்படத்தில் அருண் விஜய் அஷ்வின் என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், நடிகர் சத்யராஜ் விஷ்ணு வர்தன் என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் இட்லி கடை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.

    இந்நிலையில், இட்லி கடை படத்தில் நடித்துள்ள நடிகர் ராஜ்கிரணின் கதாப்பாத்திர அறிமுக போஸ்டரை தனுஷ் இன்று போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளார்.

    அந்த பதிவில்,"எனது முதல் ஹீரோ ராஜ்கிரண் அவர்கள் சிவனேசனாக.." என்று குறிப்பிட்டு போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

    • டிஜிபி அலுவலக வாயிலில் நடந்த மோதல் சம்பவத்தில் கைதான ஏர்போர்ட் மூர்த்தி.
    • ஏர்போர்ட் மூர்த்தி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக புகார்.

    புரட்சி தமிழகம் கட்சித் தலைவரான ஏர்போர்ட் மூர்த்தி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சமூக ஊடகங்களில் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

    இந்நிலையில் அண்மையில், சென்னை கடற்கரை சாலையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகம் அருகில் வைத்து ஏர்போர்ட் மூர்த்தி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே திடீர் மோதல் வெடித்தது.

    விசிகவினர் சேர்ந்தவர்கள் சரமாரியாக ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதலில் ஈடுபட்டனர். பதிலுக்கு ஏர்போர்ட் மூர்த்தியும் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே ஏர்போர்ட் மூர்த்தி பாக்கெட் கத்தியால் தங்கள் கட்சியினரை தாக்கியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    தாக்குதலில் விசிகவினர் 2 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர் என்றும் ஏர்போர்ட் மூர்த்தி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது.

    தொடர்ந்து, இந்த வழக்கில் ஏர்போர்ட் மூர்த்தியை மெரினா போலீசார் கைது செய்தனர்.

    ஏர்போர்ட் மூர்த்தியை இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், வரும் 22ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.  

    • TET தேர்வுக்கு விண்ணப்பிக்கு இன்றுடன் அவகாசம் நிறைவு.
    • பணியில் இருக்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள் பணியில் தொடர TET தேர்ச்சி அவசியம்.

    TET தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 10ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    TET தேர்வுக்கு விண்ணப்பிக்கு இன்றுடன் அவகாசம் நிறைவு என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் செப்டம்பர் 10ம் தேதி மாலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    தற்போது பணியில் இருக்கும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று TET தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அரசு பள்ளி ஆசிரியர்கள் பணியில் தொடர, பதவி உயர்வு பெற TET தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமென உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ரிதன்யா தந்தை தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கருத்து.
    • வழக்கு விசாரணையை மேற்பார்வையிட திருப்பூர் எஸ்.பி.க்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ரிதன்யா தற்கொலை வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி அவரது தந்தை அண்ணாதுரை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    குற்றம்சாட்டப்பட்டவர்களுடன் கூட்டு சேர்ந்து விசாரணை அதிகாரி வழக்கின் விசாரணையை முறையாக மேற்கொள்ளவில்லை என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ரிதன்யா தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி தந்தை தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், "விசாரணையை சிபிஐக்கு மாற்றுவதில் எந்த பயனும் இல்லை" என்று தெரிவித்துள்ளது.

    மேலும், ரிதன்யா தற்கொலை வழக்கு விசாரணையை மேற்பார்வையிட திருப்பூர் எஸ்.பி.க்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதும் உரிய பிரிவுகளில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய விசாரணை நீதிமன்றத்தில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, கவினின் செல்போன் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் அதன் அறிக்கை வந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பொது வெளியில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி மறுத்ததாக கூறப்படும் நிலையில் வீட்டிலேயே போராட்டம்.
    • போலீசார் கைது செய்ய முயன்றதால் இருதரப்பினர் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

    சென்னை கொருக்குப்பேட்டையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

    பொது வெளியில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி மறுத்ததாக கூறப்படும் நிலையில் வீட்டிலேயே தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், கொருக்குப்பேட்டையில் உள்ள வீட்டில் உண்ணாவிரதம் இருந்த தூய்மைப் பணியாளர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளனர். இதனால், கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    உண்ணாவிரதம் இருந்து வரும் தூய்மைப் பணியாளர்களை போலீசார் கைது செய்ய முயன்றதால் இருதரப்பினர் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

    300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு தூய்மைப்பணியாளர்கள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

    போலீசார் அராஜகம் ஒழிக என தூய்மைப் பணியாளர்கள் முழக்கம் நடத்தி வருகின்றனர்.

    ×