என் மலர்
நீங்கள் தேடியது "வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்"
- SIR எனும் பேராபத்துக்கு எதிராகக் கூடியுள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர்!
- தொடர்ந்து செயலாற்றுவோம்!
சென்னை:
தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் தி.மு.க. கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், #SIR-ஐத் தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை! என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
ஒருபுறம், மக்களாட்சியின் அடிப்படையான வாக்குரிமையையே பறிக்கும் SIR எனும் ஆபத்துக்கு எதிராகச் சட்டப் போராட்டம் - களப் போராட்டம் -
மறுபுறம், தொடங்கப்பட்டுவிட்ட SIR பணிகளில் குளறுபடிகளைத் தடுத்திட #WarRoom #Helpline -
களப் போராட்டத்தில், இன்று தமிழ்நாடெங்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பதாகைகளை ஏந்தியும் - கண்டன முழக்கங்களை எழுப்பியும் SIR எனும் பேராபத்துக்கு எதிராகக் கூடியுள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர்!
தொடர்ந்து செயலாற்றுவோம்! நம் மக்களின் வாக்குரிமையைப் பாதுகாப்போம்! என்று கூறியுள்ளார்.
- தி.மு.க.வினரை களத்தில் இறக்கிவிட்டு, வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில் தங்களுக்கு சாதகமாக முறைகேடுகளை அரங்கேற்றச் செய்து வருகிறார்.
- ஒருபுறம் ஒப்பாரி வைத்துக் கொண்டு இன்னொரு புறம் மோசடிகளை அரங்கேற்றுவதுதான் காலம் காலமாக தி.மு.க.வினரின் முழுநேரத் தொழில்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப்பணியில் அரசு ஊழியர்களுக்கு பதிலாக தி.மு.க.வினரே கணக்கீட்டுப் படிவங்களைக் கொடுத்து திரும்பப் பெறும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒருபுறம் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் முறைகேடுகள் நடைபெறக்கூடும் என்று முகாரி ராகம் பாடிக் கொண்டு, இன்னொருபுறம் இத்தகைய முறைகேடுகளில் தி.மு.க.வினர் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டின் பல ஊர்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பதிலாக தி.மு.க.வின் ஐ.டி. பிரிவு, இளைஞரணி ஆகியவற்றைச் சேர்ந்த நிர்வாகிகளே வீடு வீடாக சென்று வாக்காளர் கணக்கீட்டு விவரங்களை நிரப்பி வாங்குகின்றனர். தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர், மற்றும் ஆதரவாளர்களின் வீடுகளுக்கு மட்டுமே படிவங்களைக் கொடுக்கும் இவர்கள், மற்றவர்களின் வீடுகளுக்கு இதுவரை படிவங்களைத் தரவில்லை. கடைசி நேரம் வரை அவர்களுக்கு படிவங்களைத் தராமல் குழப்பம் ஏற்படுத்தி, அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவது தான் தி.மு.க.வின் மறைமுகச் செயல் திட்டமாகும்.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே, அதை எதிர்ப்பதாகவும், இது தி.மு.க. ஆதரவு வாக்காளர்களை நீக்குவதற்கான சதி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முகாரி ராகம் பாடி வருகிறார். இன்னொரு பக்கம் தி.மு.க.வினரை களத்தில் இறக்கிவிட்டு, வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில் தங்களுக்கு சாதகமாக முறைகேடுகளை அரங்கேற்றச் செய்து வருகிறார்.
ஒருபுறம் ஒப்பாரி வைத்துக் கொண்டு இன்னொரு புறம் மோசடிகளை அரங்கேற்றுவதுதான் காலம் காலமாக தி.மு.க.வினரின் முழுநேரத் தொழில். அந்த வழக்கத்திற்கு இந்தத் தேர்தலும் தப்பவில்லை. இன்னும் கேட்டால் களத்தில் தாங்கள் செய்யும் முறைகேடுகள் வெளியில் தெரிந்து விடக்கூடாது என்பதற்காகத் தான் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை எதிர்ப்பது போல தி.மு.க. தொடர் நாடகங்களை நடத்துகிறது.
தமிழ்நாட்டில் இதே சூழலில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டால், அவை நேர்மையாக நடைபெற வாய்ப்பில்லை. எனவே வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளை கண்காணிக்க ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதிக்கும் ஒரு வெளிமாநில ஐ.எ.எஸ்.அதிகாரியை பார்வையாளராக தேர்தல் ஆணையம் நியமிக்க வேண்டும்.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியில் சட்ட விரோதமான முறையில் ஈடுபடுத்தப்பட்ட தி.மு.க.வினர் மீது சட்டப்படியாக குற்றவியல் நடவடிக்கைகளும், அதற்கு இடம் கொடுத்தவாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் மீது துறை சார்ந்த நடவடிக்கைகளும் உடனே மேற்கொள்ளப்படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
- வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்களை மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- குன்னூர் பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளதாக வந்த தகவலையடுத்து சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டார்.
தேனி:
தேனி-அல்லிநகரம் நகராட்சி ஆரம்ப பள்ளி, ஆர்.சி உயர்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்களை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான முரளிதரன், பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
முகாம்களில் புதிதாக பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், மற்றும் முகவரி மாற்றம், பெயர் திருத்தம், வயது திருத்தம், மாற்று வாக்காளர் அடையாள அட்டை கோருதல், பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் ஆதார் எண்ணை சுயவிருப்பத்துடன் இணைத்தல், தொடர்பாக வரப்பெற்ற மனுக்களின் எண்ணிக்கை, படிவங்கள் உரிய வழிமுறையில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பது உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டு, தெரிவித்ததாவது,
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி 1.1.2023-ம் தேதியினை தகுதி நாளாகக் கொண்டு, அதாவது 1.1.2005-க்கு முன்னர் பிறந்த தகுதியுடைய நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல் மற்றும் ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களுக்கு தேவையான முகவரி மாற்றம், பிழைத்திருத்தம், புகைப்பட மாற்றம், மாற்று வாக்காளர் அடையாள அட்டை போன்றவைகளை மேற்கொள்ளவும், இடம் பெயர்ந்த மற்றும் இறந்த வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குதல் தொடர்பான சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் கடந்த 9-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது.
தேனி மாவட்டத்திலுள்ள 536 நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் முதற்கட்ட சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து 26 மற்றும் 27-ந்தேதிகளில் 2-ம் கட்ட சிறப்பு முகாம்களும் நடைபெறவுள்ளது என்றார்.
தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்துவருவதையொட்டி கலெக்டர் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தார். கம்பம் மெட்டு சாலையில் முறிந்து விழுந்த மரத்தை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மீட்புகுழுவினர்கள் மூலம் ஜே.சி.பி. எந்திரத்தை கொண்டு மரங்கள் அகற்றப்பட்டது. குன்னூர் பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளதாக வந்த தகவலையடுத்து சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி பணிகள் மேற்கொள்ளப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டது.






