என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சபரிமலை மண்டல பூஜைக்கு சென்னையில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கம்
    X

    சபரிமலை மண்டல பூஜைக்கு சென்னையில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கம்

    • மகர விளக்கு பூஜைக்கு சென்று திரும்பும் பக்தர்கள் வசதிக்காக காக்கி நாடா, கோட்டயம் சிறப்பு ரெயில் உள்பட 3 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.
    • ரெயில்கள் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக இயக்கப்படும்.

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்கு சென்று திரும்பும் பக்தர்கள் வசதிக்காக, காக்கி நாடா, கோட்டயம் சிறப்பு ரெயில் உள்பட 3 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இதன்படி காக்கிநாடா டவுனில் இருந்து வருகிற 17 -ந்தேதி மற்றும் டிசம்பர் 1, 8, 15, 22, 29 ஜனவரி 5, 12, 19 ஆகிய தேதிகளில் சிறப்பு ரெயில் இயக்கப்படும்.

    மறுமார்க்கமாக, கோட்டயத்தில் இருந்து வருகிற 18-ந் தேதி மற்றும் டிசம்பர் 2, 9, 16, 23, 30 ஜனவரி 6, 13, 20 ஆகிய தேதிகளில் வாராந்திர சிறப்பு ரெயில் (07110) இயக்கப்படும். இந்த ரெயில்கள் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக இயக்கப்படும்.

    மகாராஷ்டிரா ஹசூர் சாஹிப் நாந்தேட்-கொல்லம் இடையே ஒரு சிறப்பு ரெயிலும், தெலுங்கானா சார்பள்ளி-கொல்லம் இடையே ஒரு சிறப்பு ரெயிலும் இயக்கப்பட உள்ளன. சிறப்பு ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×