search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாட்டு வியாபாரி விபத்தில் பலி
    X

    மாட்டு வியாபாரி விபத்தில் பலி

    தீவட்டிபட்டி அருகே மாட்டு வியாபாரி விபத்தில் பலியானார்.

    காடையாம்பட்டி:

    காடையாம்பட்டி அருகே சிங்கார ஹள்ளி பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 50). இவர் மாட்டு வியாபாரம் செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் தர்மபுரியில் இருந்து தீவட்டிப்பட்டி அடுத்த காருவள்ளி சனி சந்தைக்கு மாடு வாங்க காரில் வந்தார்.

    இவருடன் அதே பகுதியை சேர்ந்த 3 வியாபாரிகளும் காரில் வந்தனர். கார் தீவட்டிப்பட்டியை அடுத்த அக்ரகாரம் போலீஸ் நிலையம் எதிரில் திரும்பும் போது எதிர்பாராவிதமாக பின்னால் வந்த லாரி காரின் பின்புறத்தில் பலமாக மோதியது.

    இதில் காரில் இருந்த லட்சுமணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தீவட்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    காரில் வந்த மற்ற 3 பேரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

    Next Story
    ×