search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வருசநாடு அருகே கோஷ்டி மோதலில் 26 பேர் மீது வழக்கு
    X

    கோப்பு படம்

    வருசநாடு அருகே கோஷ்டி மோதலில் 26 பேர் மீது வழக்கு

    • முன்விரோதத்தில் இருதரப்பினர் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது
    • இதில் 26 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்

    வருசநாடு:

    வருசநாடு அருகில் உள்ள காமராஜர்புரத்தை சேர்ந்தவர் தமிழன் (வயது28). இவர் சம்பவத்தன்று தனது கால்நடைகளுக்கு புல்லு கட்டு ஏற்றிக்ெகாண்டு சாலையோரம் நின்றுகொண்டிருந்தார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த சரவணன் தனது தாயாருடன் பைக்கில் வந்தார். இரு தரப்பினருக்கும் இடையே திடீர் வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரது ஆதரவாளர்களும் பயங்கரமாக மோதிக்ெகாண்டனர். இதில் சரவணன் உள்பட பலர் காயம் அடைந்தனர்.

    இது குறித்து இருவரும் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் பாண்டி, பாலமுருகன், ராஜா, குமார், கபிலன், தமிழன் உள்பட 26 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×