என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மதுரவாயலில் பஸ் மோதி பழ வியாபாரி பலி
- தினேஷ் மோட்டார் சைக்கிளில் மதுரவாயல்- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் திருவேற்காடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.
- விபத்து ஏற்படுத்திய பஸ் டிரைவரான விழுப்புரத்தை சேர்ந்த மணிபாலன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
திருவேற்காடு பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (வயது 24). கோயம்பேடு மார்க்கெட்டில் பழக்கடை நடத்தி வருகிறார்.
இவர் நள்ளிரவு 2 மணி அளவில் தனது மோட்டார் சைக்கிளில் மதுரவாயல்- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் திருவேற்காடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான பஸ் எதிர்பாராத விதமாக தினேஷ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தினேஷ் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்ததும் கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் தினேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய பஸ் டிரைவரான விழுப்புரத்தை சேர்ந்த மணிபாலன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்