search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளாத்திகுளம் அருகே பாரதி விழா
    X

    போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவி ஒருவருக்கு பரிசு வழங்கப்பட்ட காட்சி.

    விளாத்திகுளம் அருகே பாரதி விழா

    • எட்டயபுரம் பாரதி ஆவண காப்பகம் சார்பில் பாரதி விழா நடந்தது.
    • விழாவில், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    விளாத்திகுளம்:

    மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்பில் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டயபுரம் பாரதி மணிமண்டபம் வளாகத்தில் உள்ள பாரதி ஆவண காப்பகம் சார்பில் பாரதி விழா நடந்தது. விழாவிற்கு நாகர்கோவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மைய இயக்குனர் ஸ்டீபன் தலைமை தாங்கினார்.

    மனோன்மணியம் சுந்தரனார் தமிழியல் துறை தலைவர் (பொறுப்பு) ஜாஸ்மின் சுதா வரவேற்று பேசினார். விழாவில் பாரதியும், சூழலிலும் என்ற தலைப்பில் பேராசிரியர் அப்துல் சமது பேசினார். விழாவில் பல்கலைக்கழக எல்கைகுட்பட்ட அனைத்து கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

    போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பல்கலைக்கழக தமிழியல் துறை உதவி பேராசிரியர் ஜோதி முருகன் நன்றி கூறினார். இதில் உதவி பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×