search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பி.ஏ.பி., வாய்க்கால் தண்ணீரை குளங்களில் சேகரிக்கும் விவசாயிகள்
    X

    பி.ஏ.பி., வாய்க்கால் தண்ணீரை குளங்களில் சேகரிக்கும் விவசாயிகள்

    • சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.
    • நிலத்தடி நீர் உயர்ந்தும், விவசாயக் கிணறுகளில் நிலத்தடி நீர் உயர்ந்தும் உள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. விவசாயத்திற்கு முக்கிய ஆதாரமாக பி.ஏ.பி. வாய்க்கால் தண்ணீர் பயன்படுகிறது. பி.ஏ.பி வாய்க்கால் மூலம் திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள சுமார் 4 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. இந்த நிலையில் பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி காளிநாதம்பாளையம் பகுதியில், பி.ஏ.பி. வாய்க்காலில் வந்த உபரி தண்ணீரை அருகே உள்ள குளத்தில் சேமித்து வைத்துள்ளனர். இதனால் அங்கு அந்தப் பகுதியில் நிலத்தடி நீர் உயர்ந்தும், விவசாயக் கிணறுகளில் நிலத்தடி நீர் உயர்ந்தும் உள்ளது. இதே போல பி.ஏ.பி. பாசன வாய்க்காலில் வரும் உபரி தண்ணீரை, அருகே உள்ள குளங்களில் சேமித்தால் தண்ணீர் தட்டுப்பாடு வராது. மேலும் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×