search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனைவி குடும்பம் நடத்த வராததால்   வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை
    X

    பார்த்திபன்

    மனைவி குடும்பம் நடத்த வராததால் வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை

    • கொத்தனாரான இவருக்கு, வனிதா என்ற மனைவியும், 3 மாத பெண் குழந்தையும் உள்ளது.
    • பார்த்திபனுக்கும், வனிதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தனது பெற்றோர் வீட்டிற்கு குழந்தையை எடுத்துக்கொண்டு சென்று விட்டார்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சக்கரைசெட்டியபட்டி ஊராட்சியில் உள்ள வெள்ளப்பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். கொத்தனாரான இவருக்கு, வனிதா என்ற மனைவியும், 3 மாத பெண் குழந்தையும் உள்ளது.

    கருத்து வேறுபாடு

    இந்த நிலையில், பார்த்திபனுக்கும், வனிதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் பார்த்திபனிடம் கோபித்துக்கொண்ட வனிதா, கொல்லப்பட்டி கிராமத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு குழந்தையை எடுத்துக்கொண்டு சென்று விட்டார். இதையடுத்து பார்த்திபன், மாமனார் வீட்டிற்கு சென்று மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால், உன்னோடு வாழ பிடிக்கவில்லை, நாம் இருவரும் விவாகரத்து செய்து கொள்ளலாம் என மனைவி வனிதா கூறியதாக தெரிகிறது.

    இந்த நிலையில், தனது குழந்தைக்கு பெயர் வைப்பதற்காக, பெயர் பட்டியலை எடுத்துக்கொண்டு மாமனார் வீட்டிற்கு பார்த்திபன் மீண்டும் சென்றுள்ளார். அப்போது வனிதா, அவரை திட்டியதுடன், குழந்தையை பார்க்க அனுமதிக்காமலும், பெயர் வைக்க விடாமலும் தடுத்து உள்ளார். மேலும், கணவரை அடித்ததுடன், அவரது இரு சக்கர வாகனத்தை வாங்கி வைத்துக்கொண்டு விரட்டிய தாக கூறப்படுகிறது.

    கிணற்றில் குதித்தார்

    இதனால், மனவேதனை அடைந்த பார்த்திபன், தனது வீட்டின் அருகில் இருந்த கிணற்றில் குதித்தார். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் ஓமலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சில மணி நேரம் போராடி, பார்த்திபனை பிணமாக மீட்டனர். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஓமலூர் போலீசார், பார்த்திபன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பார்த்திபன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×