search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா பகுதிகளில்  மக்காச்சோள பயிர்களில் படை புழு தாக்குதல்  - விவசாயிகள் கவலை
    X

    பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா பகுதிகளில் புழு தாக்குதலுக்குள்ளான மக்காச்சோள பயிர்கள்.

    பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா பகுதிகளில் மக்காச்சோள பயிர்களில் படை புழு தாக்குதல் - விவசாயிகள் கவலை

    • நூறு ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளனர்.
    • விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி,

    பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் மெனசி, அதிகாரப்பட்டி,உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் விவசாயிகள் இந்த ஆண்டுபல நூறு ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளனர்.

    சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காச்சோள பயிர்களில் மற்றும் கதிர்களிலும் படை புழு தாக்குதல் தற்பொழுது அதிகரித்து வருவதால் மக்காச்சோளம் பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர்.

    புழு தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாக்க வேளாண்மை துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கி தடுப்பு நடவடிக்கை குறித்து எடுத்துரைக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    Next Story
    ×