search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்
    X

    போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்

    • போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மிரச்சாரம் இண்டூர் பஸ் நிலையத்தில் நடைபெற்றது.
    • சுகாதார ஆய்வாளர் புவனேஸ்வரன் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.

    நல்லம்பள்ளி,

    இண்டூர் இணைந்த கரங்கள் அமைப்பின் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மிரச்சாரம் இண்டூர் பஸ் நிலையத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளர் சிலம்பரசன் தலைமை வகித்தார்.சுகாதார ஆய்வாளர் புவனேஸ்வரன் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.

    போதை பொரு ளுக்கு எதிராக உறுதிமொழி ஏற்றனர்.காவல் உதவி ஆய்வா ளர்கள் சீனிவாசன்,சேகர் பேரணியை தொடங்கி வைத்து பேசினர்.

    நிகழ்ச்சியில் தொழிற்சங்க. தலைவர்மா தேஸ்வரன்,முன்னாள் இண்டூர் ஊராட்சி மன்ற தலைவர் கமலே சன்,கம்யூனிஸ்ட் மூத்த நிர்வாகிஅப்புனு ஆகியோர் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசினார்கள்.

    நிகழ்ச்சியில் வள்ளல் அதியமான் பம்பை மற்றும் கிராமியக்குழு மற்றும் ஸ்ரீஆயாத்தம்மன் நாடக கலைக்குழுவின் சார்பில் போதை பொருளுக்கு எதிராக பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் கண்ணண்,எல்லப்பன்,சிங்காரவேல்,சிம்பு,செல்வம் மற்றும் இண்டூர் இணைந்த கரங்கள் அமைப்பினர் திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×