search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோர்ட்டு பெண் ஊழியர் மாயம்
    X

    கோர்ட்டு பெண் ஊழியர் மாயம்

    • இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.
    • சில நாட்களுக்கு முன்பு வீட்டை வெளியே சென்ற அவர் பின்னர் மீண்டும் வீடு திரும்பிவரவில்லை.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அண்ணா நகரைச் சேர்ந்தவர் மாயக்கண்ணன் (வயது43). இவர் கோவையில் போலீசாராக பணியாற்றி வருகிறார்.

    இவரது மனைவி தமிழ்தென்றல் (39). இவர் தருமபுரி குடும்ப நல கோர்ட்டில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில் புட்டிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் தமிழ்தென்றலுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர். இதனால் தமிழ்தென்றலை அவரது கணவர் மாயகண்ணன் கண்டித்தார். இதனால் இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை வெளியே சென்ற அவர் பின்னர் மீண்டும் வீடு திரும்பிவரவில்லை. இதுகுறித்து மாயகண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான தமிழ்தென்றலை தீவிரமாக தேடிவருகின்றனர்.

    Next Story
    ×