search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபர் உள்பட 2 பேரை தாக்கிய 5 பேர் மீது வழக்கு
    X

    வாலிபர் உள்பட 2 பேரை தாக்கிய 5 பேர் மீது வழக்கு

    • 5 பேரும் துரை, ஸ்ரீதரை சாதியை சொல்லி திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.
    • 5 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், கோட்டப்பட்டி அடுத்துள்ள பையர்நாயக்கனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகன் துரை. இந்த நிலையில் துரையும்,

    இவரது உறவினர் ஸ்ரீதர் ஆகியோர் இருவரும் பையர்நாயக்கனப்பள்ளி சந்திப்பு பகுதியில் நேற்று டீ குடித்து வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது மாரியம்மன்கோவில் அருகில் வந்த போது அந்த வழியாக வந்த ஹரிபிரசாத், முருகன், ஆறுமுகம், அருண், ராஜ்குமார் ஆகிய 5 பேரும் துரை, ஸ்ரீதரை சாதியை சொல்லி திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து கோட்டப்பட்டி போலீசார் ஹரிபிரசாத், முருகன், ஆறுமுகம், அருண், ராஜ்குமார் ஆகிய 5 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×