search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளஸ்-2 மாணவி உள்பட 3 பேர் மாயம்
    X

    பிளஸ்-2 மாணவி உள்பட 3 பேர் மாயம்

    • வீட்டில் இருந்து வெளியே சென்ற சிறுமி மீண்டும் வீடு திரும்பிவரவில்லை.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி பெரியாம்பட்டி ஹாப்பிநகரைச் சேர்ந்த 20 வயது மாணவி. இவர் தருமபுரி மருத்துவ கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மாணவி கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றார்.

    ஆனால் மாலை நீண்டநேரமாகியும் வீடு திரும்பிவரவில்லை. இதுகுறித்து தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய்சங்கர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி தே.மாரியம்மன் கோவில் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது மதிக்கத்தக்க சிறுமி. இவர் தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற சிறுமி மீண்டும் வீடு திரும்பிவரவில்லை. இதுகுறித்து சிறுமியின் தாய் தருமபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோன்று பாப்பிரெட்டிப்பட்டி அலுமேலுபுரம் சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி மகள் திவ்யா (19). இவர் பிளஸ்-2 படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் ஏற்காட்டில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். அங்கு கடந்த 2-ந் தேதி வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டைவிட்டு வெளியே சென்ற திவ்யா சுப்ரமணியின் வீட்டிற்கு வரவில்லை. இதுகுறித்து அவர் பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×