என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது எஸ்.பி. பாஸ்கரன் உத்தரவு
Byமாலை மலர்5 Oct 2022 4:56 AM GMT
- 3 பேர் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
- நடப்பு ஆண்டில் 92 பேர் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா போலீஸ் சரகத்துக்குட்பட்ட புதுஆயக்குடி வெள்ளிபாளையத்தை சேர்ந்த கனகராஜ் (வயது32), நத்தம் அருகில் உள்ள லிங்கவாடியை சேர்ந்த நல்லியப்பன் (58), அதே பகுதியை சேர்ந்த சிவம் (26) ஆகிய 3 பேரும் கொலை வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
இவர்கள் 3 பேரின் குற்ற நடவடிக்கையை ஒடுக்கும் பொருட்டு அவர்களை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
கலெக்டர் விசாகன் உத்தரவைத் தொடர்ந்து அவர்கள் 3 பேரும் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் இதுவரை குற்றவழக்குகளில் தொடர்புடைய 92 பேர் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X