search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது  எஸ்.பி. பாஸ்கரன் உத்தரவு
    X

    குண்டர் சட்டத்தில் கைதானவர்களை படத்தில் காணலாம்.

    கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது எஸ்.பி. பாஸ்கரன் உத்தரவு

    • 3 பேர் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
    • நடப்பு ஆண்டில் 92 பேர் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா போலீஸ் சரகத்துக்குட்பட்ட புதுஆயக்குடி வெள்ளிபாளையத்தை சேர்ந்த கனகராஜ் (வயது32), நத்தம் அருகில் உள்ள லிங்கவாடியை சேர்ந்த நல்லியப்பன் (58), அதே பகுதியை சேர்ந்த சிவம் (26) ஆகிய 3 பேரும் கொலை வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

    இவர்கள் 3 பேரின் குற்ற நடவடிக்கையை ஒடுக்கும் பொருட்டு அவர்களை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

    கலெக்டர் விசாகன் உத்தரவைத் தொடர்ந்து அவர்கள் 3 பேரும் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் இதுவரை குற்றவழக்குகளில் தொடர்புடைய 92 பேர் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×