search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தக்கலையில் அதிக பாரம் ஏற்றி வந்த 3 லாரிகள் பறிமுதல் - போலீசார் அதிரடி நடவடிக்கை
    X

    தக்கலையில் அதிக பாரம் ஏற்றி வந்த 3 லாரிகள் பறிமுதல் - போலீசார் அதிரடி நடவடிக்கை

    • கேரளாவுக்கு ஜல்லி, எம்சான்ட் போன்ற கட்டுமான பொருட்கள் செல்கிறது.
    • 3 டிப்பர் லாரிகளுக்கும் தலா ரூ. 30 ஆயிரத்துக்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி :

    கேரளாவுக்கு ஜல்லி, எம்சான்ட் போன்ற கட்டுமான பொருட்கள் செல்கிறது. இந்நிலையில் அரசு அனுமதியின்றி அளவுக்கு அதிகமாக கொண்டு செல்லப்படுவ தாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனை தொடர்ந்து போலீஸ் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அவர்கள் தக்கலை பழைய பஸ் நிலையம் அருகில் சோதனையில் ஈடுபட்ட போது அளவுக்கு அதிகமாக எம்சான்ட் ஏற்றியபடி 3 டிப்பர் லாரிகள் வந்தன. அவற்றை கனிம வளத்தடுப்புதுறை சப்-இன்ஸ்பெக்டர் திலிபன் தலைமையிலான போலீஸ் படையினர் மடக்கி பிடித்து தக்கலை போலீசில் ஒப்படைத்தனர். 3 டிப்பர் லாரிகளுக்கும் தலா ரூ. 30 ஆயிரத்துக்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டது. மொத்தம் ரூ. 95,850 அபராதம் விதிக்கப்பட்டு 3 டிப்பர் லாரி டிரைவர்கள் மீது வழக்குப்பதிவு செய் யப்பட்டது.

    Next Story
    ×