search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    நூல் வியாபாரியிடம் ரூ.1¼ கோடி மோசடி- பல்லடம் நகர அ.தி.மு.க. செயலாளர் கைது

    கடந்த 2020-21-ம் ஆண்டு அசோக்குமார் ரூ.1.25 கோடி மதிப்புள்ள 1 லட்சம் நூல்கண்டுகளை ராமமூர்த்தியிடம் கொடுத்து அதனை துணியாக மாற்றி தருமாறு கொடுத்துள்ளார்.
    திருப்பூர்:

    கரூரை சேர்ந்தவர் அசோக்குமார். நூல் வியாபாரம் செய்து வருகிறார். இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த அ.தி.மு.க. நகர செயலாளரும், மில் உரிமையாளருமான ராமமூர்த்தியிடம் நூல்களை கொடுத்து அதனை துணியாக மாற்றி வாங்கி வந்தார். கடந்த 12 வருடங்களாக அவர்கள் இந்த தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.

    கடந்த 2020-21-ம் ஆண்டு அசோக்குமார் ரூ.1.25 கோடி மதிப்புள்ள 1 லட்சம் நூல்கண்டுகளை ராமமூர்த்தியிடம் கொடுத்து அதனை துணியாக மாற்றி தருமாறு கொடுத்துள்ளார். ஆனால் அதனை வாங்கிய ராமமூர்த்தி துணியாக மாற்றி கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். இதையடுத்து ரூ.1.25 கோடி பணத்தை திருப்பி தருமாறு அசோக்குமார் ராமமூர்த்தியிடம் கேட்டுள்ளார். ஆனால் ராமமூர்த்தி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இது குறித்து அசோக்குமார் திருப்பூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி ராமமூர்த்தியை இன்று கைது செய்தனர்.
    Next Story
    ×