என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
இருளர் இன மாணவர்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கிய கலெக்டர்
Byமாலை மலர்3 Jun 2022 9:54 AM GMT (Updated: 3 Jun 2022 9:54 AM GMT)
தஞ்சாவூர் மாவட்டத்தில் இருளர் இன மாணவர்களுக்கு ஜாதி சான்றிதழை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா மெலட்டூரை அடுத்துள்ள ஒன்னாம் சேத்தி கிராமத்தில் இருளர் இனத்தைச் சேர்ந்த 23 குடும்பங்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகி ன்றனர். இவர்கள் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொ ண்டம் பகுதியிலிருந்து இங்கே வந்து கடந்த 40 ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர்.
இருந்தாலும் இவர்களு க்கான உரிய ஜாதிச் சான்றிதழ் வழங்கப்படாமல் இருந்து வந்தது. பல ஆண்டுகளாக ஜாதி சான்றிதழ் கேட்டு போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் அப்பகுதி யைச் சேர்ந்த இருளர் இன மக்கள் இதுபற்றி தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் மனு கொடுத்தனர்.
உரிய ஜாதிச் சான்றிதழ் வழங்கப்படாததால் கல்வி மற்றும் வேலைவா ய்ப்புகளில் தங்களுக்கான அரசின் சலுகைகளைப் பெற முடியாமல் தங்களது குழந்தைகள் தவிப்பதாக அம் மனுவில் கூறியிருந்தனர்.
அவர்களது கோரி க்கையை ஏற்று, ஒரு வார காலத்திற்குள் உரிய விசாரணைமேற்கொண்டு பள்ளிகள் திறக்கப்படுவ தற்குள் ஜாதிச் சான்றிதழ் வழங்கு மாறு வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டார்.
அவரது உத்தரவி ன்பேரில், பாபநாசம் வட்ட வருவாய்த் துறையினர் துரிதமாக செயல்பட்டு உரிய விசாரணைமேற்கொ ண்டனர்.
அவ்விசார ணையில், அரியலூர் மாவ ட்டம் ஜெய ங்கொண்டம் பகுதியில் வசிக்கும் இவர்களின் நெருங்கிய, ரத்த சம்பந்தம் உள்ள உறவினர்களுக்கு அம் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளால் இருளர் இன மக்களுக்கானஜாதிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு ள்ளது தெரிய வந்தது.
அதனடிப்படையில், ஒன்னாம்சேத்தி கிராமத்தில் வசிக்கும் இவ்வின மக்களுக்கு இருளர் இன மக்களுக்கான ஜாதி சான்றிதழ் வழங்க முடிவு செய்யப்பட்டு முதல் கட்டமாக அக் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி செல்லும் குழந்தைகள் 10 பேருக்கு இன்று ஜாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
அந்த சான்றிதழ்களை அந்தக் குழந்தைகளின் வீட்டுக்கே நேரில்சென்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.
அதனால் அந்தக் குழந்தை களின் பெற்றோர்பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் பள்ளி மாணவ ர்களிடம் மிகவும் நன்றாகப் படித்து முன்னேற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இதுகுறித்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறும்போது
நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தில் வசித்து வரும் இந்த 23 குடும்பங்களுக்கும் விரைவில் இலவசவீட்டும னைப் பட்டா வழங்கப்படும்.
அதற்கான நடவடிக்கை தற்போது எடுக்கப்பட்டு வருகிறது. வீட்டுமனைப் பட்டா வழங்கிய பின்னர் இவர்கள் அனைவருக்கும் வீடுகள் கட்டித் தரப்படும். மேலும் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என்றார்.இந்த நிகழ்வில் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் லதா, பாபநாசம் தாசில்தார் மதுசூதனன், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் கனகராஜ், மெலட்டூர் பேரூராட்சி தலைவர் இலக்கியா பட்டாபிராமன்,
துணை தாசில்தார் விவேகானந்தன், வருவாய் ஆய்வாளர் ஸ்ரீதேவி, கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் குமரேசன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X